Pages

பல்லு குத்த 'பேட்'

திருவல்லிக்கேணி சுற்று வட்டார வாண்டுகளுக்கும், வாலிபனுக்கும் வாகான விளையாட்டுத் திடல் மெரீனா கடற்கரை!. அங்கே டீமுக்கு ஒரு கங்கூலி, தெண்டுல்கர்ன்னு, அது ஒரு தனி உலகம். ஞாயிரு விடிந்தும், விடியாததுமாக பேட்டும் கையுமாக, கலைகட்டத் துவங்கி, அந்தி சாயும் வரை அதகளம்தான்.

நான் என் கிரிகெட் சூத்திரங்கள் கற்றது இந்த பட்டறையில்தான். ஞாயிரென்றால் சூரியனின் உதயம், அஸ்தமனம் எல்லாம் எங்கள் மேல்தான். நல்லநாள் விசேஷம் என்றாலும் மேட்ச் என்றால் பேட்ச்சாக கிளம்பிடுவோம்.

அங்கே மாதத்துக்கு ஒரு டோர்னமென்ட் நடக்கும், நாலு அணிகள், எட்டு அணிகள்ன்னு தொடங்கி, 64 அணிகள் கலந்துகொள்ளும் டோர்னமென்ட்டெல்லாம் நடக்கும். இதுவும் அப்படி ஒரு டோர்னமென்ட்தான். இதில் 16 அணிகள் மோதின. எப்படியோ அடித்து பிடித்து நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்தோம்.

இறுதிப் போட்டி நாகேஷ் டீமோட, நாகேஷ் டீம் டோர்னமென்ட் என்றால்..... பிச்சைப் பாத்திரம் மாதிரி ஆகிவிடும். வெளி டீமிலிருந்து நல்ல டிக்கெட்களைப் பொறுக்கி, எப்படியும் கப்பை லவுட்டிடனும் என்பது மட்டுமே அவர்கள் எண்ணம். எங்க டீமில் யாரையாவது எடுத்தால்.... அரசு உழியர்கள் போல் தொடர் உண்ணாவிரதம், மறியல்தான். அதனால் எதுக்கு வம்புன்னு நாங்க தோத்தாலும், ஜெயித்தாலும் எங்கள் தொண்ணைகளையும், வெண்ணைகளையும் வைத்தே கலி கிண்டுவோம்.

பல நேரம் கிண்டிய கலி வலிதான்னாலும்....., சில நேரம் பல டீமுக்கு கிலியையும் தந்திருக்கு. ஆனால் பல வீட்டுப் பலகாரமாய் மின்னும் பிச்சைப் பாத்திர டீமைப் பார்த்து பல்லிளித்தோம். "மச்சி நாம தோத்தாலும் பரவாயில்ல ஆனா கலீஜா தோக்கக் கூடாதுன்னான் ராஜா. வெத்தா இருந்தாலும், கெத்த உடாம இருப்போம்னு உருவேத்துனான்".


டாஸ் ஜெயிச்சா அவங்கள பேட் பண்ண சொல்லலாம்னு முடிவு பண்ணி செல்லையாவ டாஸ் போட அனுப்பினோம். இடி டாஸா விழுந்து, நாங்க தோத்தோம். ஆனால், நாகேஷ் ஆண்டவன் தாண்டவம் வேறாக இருந்தது. அவர்களே பேட் செய்யிறோம்னு சொன்னதும் நாங்கள் ரொம்ப 'ஹேப்பி' ஆனோம்.

பதினாறு ஓவரில்.... பறக்க விட்டு அடித்து, மொத்தம் 160 ரன்கள் எடுத்தார்கள். ஸாப்ட் பாலில் இந்த ரன் மலை முகடு, அதுவும் சப்பைகளும், சக்கைகளும் உள்ள எங்களுக்கு இது ட்ரீம் ஸ்கோர். கடவுளின் கருணைப் பார்வையில் அன்று ஷபியும் ராஜாவும் ரவுண்டு கட்டி அடித்து வெற்றியை எங்கள் கண்ணில் காட்டினார்கள். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் 'விட்டத்தைப்' பார்க்க கடைசி ரெண்டு பாலில் எட்டு ரன் தேவை.

இறுதிப் போட்டியானதால் எங்கள் தெரு ஜுனியர் டீமும் அவர்கள் மேட்ச்சை முடித்து கும்பலாக எங்கள் மேச்சைப் பார்க்க வந்துவிட்டனர். டிஸ்கஸ்ஸி, டிஸ்கஸ்ஸி ஆடுனத்தில், நேரம் ரொம்பவே ஆகிவிட்டிருந்தது. பார்கிங்குக்கு வந்த காரில் ஒன்றை நிறுத்தி, வெளிச்சம் 'பிச்'சுக்கு மட்டும் வருகிறா மாதிரி செட் செய்திருந்தார்கள். எங்களை விரட்ட வந்த காக்கி கும்பலும், நாங்கள் கெஞ்சியதில், எங்கள் ஆட்டத்தை வேடிக்கைப் பார்த்தது.

பதட்டத்தில் நான் பேட் பிடிக்க எதிரே பக்கர். பாலா போட்ட பந்தை கண்ணப் பொத்தி சுத்துனத்தில், மூன்று ரன்கள் பெற்று தந்தது. ஒரு பந்தில் ஐந்து ரன் பக்கர் என்ன மியாண்டட்டா ஒரே பாலில் சிக்ஸ் அடிக்க, சரி எப்படியாவது ஒரு 'போர்' அடின்னு சொல்ல, அவன் கிட்ட போய் "மச்சி... கண்ண பொத்தி சுத்து, மாட்னா லக்குதானேன்னு சொன்னா....?" பக்கர் "அந்த காரு லயிட்ட ஆப் பண்ண சொல்லுடா... கண்ணே தெரிய மாட்டேங்குது....!" என்றான் "என்னடா இப்படி ஒரு குண்ட தூக்கிப் போடுறன்னு....?" கேட்க "அந்த காரு போகஸ் லயிட்டுல என் கண்ணு போகஸ் ஆக மாடேங்குதுன்னான், நீ நல்ல கண்ணுல விளையாடுற நான் நாலு கண்ணுல விளையாடுறேன்னு" சொன்னான்.

எலிக்கு பயந்து எருக்கன்ச் செடில விழுந்தா மாதிரி இருந்துச்சி எனக்கு "மச்சி! நடப்பது எல்லாம் நல்லதுக்கேன்னு, கண்ணப் பொத்தி சுத்துன்னு" சொல்லிட்டு அம்பயர் பக்கத்தில் வந்து நின்னேன். பாலா போட்ட பால் வோயிடாக போக, ஆஹா ஒரு பாலில் நாலு மாட்டுச்சினா வெயிட்டுதாண்டான்னு, நினைக்க.... பாலா போட்ட அடுத்த ரெண்டு பாலும் வோயிடாகப் போக, சிறுசு டீமில் இருந்து காளிதாஸ் "பக்கர் அண்ணே...... அடிக்கலன்னாலும் ஒடுங்கன்னு...." கத்துனான். நானும் பக்கர் கிட்ட போயி "மச்சி! இப்போ ரெண்டு தான் தேவை, மாட்டுலேன்னாலும் ஓடி வந்துடுன்னு...." சொன்னேன். அவனும் "சரின்னு" சொன்னான். ஆனால் அடுத்த பாலும் வோயிடாக, ஒரு பாலில் ஒரு ரன்னுன்னு வந்து நின்னுச்சி எப்படியும் நாங்கதான் ஜெயிக்கப் போறோம்னு முடிவாயிடிச்சி, அடுத்த பாலும் வோயிடாகப் போக அப்படியே எங்க ரெண்டு போரையும் சுத்தி இருந்த எங்க தெரு பசங்க அலேக்காக துக்கிக் கொண்டு வீடுவரை சேர்த்தார்கள்.

எங்களை விளக்கி விட வந்த போலீஸ் கடைசி பந்து வரை பார்த்து விட்டுதான் சென்றார்கள். இது மாதிரி எத்தனயோ நல்ல நல்ல மேட்சைப் பார்த்தது நம்ம மெரீனா கடற்கரை. ஆனால்.... இப்போ அங்கே ஆடத் தடை, மெரீனாவ அழகு படுத்தரோம்னு, சொல்லி பல்லு குத்த 'பேட்' கேக்குது சென்னை மாநகராட்சி.

முறையான விளையாட்டு ஒவ்வொருவரும் விளையாடுவார்கள் எனில்..... அவர்கள் தேக ஆரோகியமும், மன வலிமையையும் மென்மேலும் வளரும் என்பதில் ஐயமில்லை. விளையாட்டு ஒருவனுக்கு வெற்றி தோல்வியைக் கற்றுத் தருகிறது, விடா முயற்சி, கடைசி வரை போராடும் குணம், மேலாண்மையைக் கற்றுத் தருகிறது, நட்புத் தளம் அமைத்துத் தருகிறது. இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

இந்த பீச் திடலுக்குப் பதில் வேறு ஒரு திடல் மாநகராட்சி அமைத்துத் தந்தால்.... அது சென்னையைச் சுற்றி இருக்கும் சிறுவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை......! ;

குப்ப மேட்டரு...

தாக்கரேக்கு வாய் கொழுப்பு ரொம்ப அதிகமாகிவிட்டது, இப்போது சச்சினிடம் வாயக் கொடுத்து புண்ணாகப் போகிறார். நான் ஒரு இந்தியன் என்று சொன்னது தப்பா.....? இவங்களோட இந்த சின்ன பிள்ளைத் தனமான தாக்குதல்களை அரசியலுடன் நிறுத்தினால் நல்லது. நான் தெரியாமத்தான் கேக்குறேன் இவருடைய பாஸ்போர்டில் நாடு என்னுமிடத்தில் இந்தியன் உள்ளதா அல்லது மாராட்டியன் என்று உள்ளதா...? தாக்ரே இந்த சில்லறைத் தனமான அரசியல் செய்யும் பைத்தியக் காரத் தனத்தை விட்டு எப்பொழுதுதான் வெளியே வருவார்.......?
------X------X------
மற்றுமொரு தொழிற்சாலை சென்னைக்கு மிக அருகில் துவங்க உள்ளது. ஏற்கனவே இயங்கிவரும் ஹுண்டாய், நோக்கியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் எவ்வளவு....? வேலை வாய்ப்பு பெருகியது, எவ்வளவு பேர் பயனடைந்தார்கள்....? ஆஹா இன்னொரு சாதனை இந்த ஆட்சியில்.

ஏற்கனவே இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களால் பல விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டுள்ளது, சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்க. ஆமா கான்ட்ராக்டில் வேலை கிடைத்தது. தினமும் நூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம். எல்லா மேல் நிலை ஆட்களுக்கும் தங்கள் நாட்டு பிரதிநிதிகளைத்தான் நியமித்திருக்கிறார்கள் இந்த வெளி நாட்டு நிறுவனங்கள்.

இதில் அரசு மான்யம் என்ற பேரில் பல வித சலுகைகள் பெற்றுக் கொண்டு, நம்ம மக்களை அடிமையாக நடத்துகின்றன இந்த வெளி நாட்டு நிறுவனங்கள்.

வாங்குனவன் பேசமாட்டன்,
பேசுறவன் இருக்க மாட்டான்,
அடிமையா இருப்பதென்பது - என்
ஆயுள் விதிதானோ....?

--சாமானியன்

------X------X------

கர்ப்பகிரஹத்துக்குள் தன் வக்கிரத்தை அரங்கேற்றிய குருக்கள் (எதில்...?), தேவநாதன் தானே வந்து கோர்டில் சரணடைந்திருக்கிறார். எந்த மதமும் இல்லறத்திற்கு எதிராக இல்லை ஆனால் ஒரு பூஜை செய்யும் குருக்கள், அந்த புண்ணிய தளத்திலேயே வக்கிரமாக நடந்து கொண்டது கண்டிக்கத் தக்கது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட சூட்டோடு கடுமையான தண்டனை கிடைக்க எல்லாம் வல்லோனை பிரார்த்திப்போமாக.
------X------X------
நேற்று வரை இருந்த 'நினைத்தாலே இனிக்கும்' சற்று சறுக்கி, முதலிடத்தில் 'கண்டேன் காதலை' வந்திருக்கிறது, இது அடுத்து 'வேட்டைக்காரன்' வரும் வரையில் இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். வேட்டைக்காரன் புலியாய் உருமினாலும், பூனையாய் உரு மாறினாலும், சன் டிவியின் அடுத்த படம் வரும் வரையில் முதலிடத்திலேயே இருக்கும்.
------X------X------
'பையா', 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களுடன் அண்ணன் சூர்யா நடித்த படமும் ரிலீசுக்கு தயாரான நிலையில், மார்கண்டேயன்.... அண்ணனும் தம்பியும் போட்டி போட வேண்டாம்னு நினைக்கிறாராம். பணத்தைப் போட்ட தயாரிப்பாளர் தலையில் பெரியக் கல்லைப் போடாமல் இருந்தால் சரி. ஏற்கனவே செல்வராகவன் 'மங்கைமடி' சாய்ந்ததில் மட்டுப் படாமல் போனது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் வேலைகள், இதில் இப்படி ஒரு ட்விஸ்ட் வைத்து தயாரிப்பாளரின் பணத்தில் வெடி வைக்க வேண்டுமா.....? ;

நன்றி நவில்தல்....

ப்ளாக்குன்னு ஒன்னு ஆரம்பிச்சி ஆறேழு மாசம் ஆச்சி, எழுதுற ஒன்னுக்கு, மூணு கமென்ட் வந்தாலே ரொம்ப ஜாஸ்தி.

"கடை விரித்தேன்..... கொள்வாரில்லை"ன்னு, நானும் ஒவ்வொரு நாளும் தெறந்து தெறந்து பார்த்தா அங்கொன்னும் இன்கோன்னும் கமென்ட் வந்திருக்கும். தொடர்ச்சியா நம்ம கலை அண்ணாச்சி எட்டிப் பார்ப்பாரு. சரி நாம இன்னும் ரொம்ப தூரம் போகனும்போலன்னு...? என்ன நானே தேத்திக்குவேன். நான் எழுதிய நாலைஞ்சு கதைகள் இளமை விகடன், கீற்று மற்றும் தமிழ் எழுத்தாளர்கள்ன்னு ஒன்னு ரெண்டு இணையத்தில் வந்திருக்கிறது.

சீக்கு புடிச்ச கோழியா.... சீண்டிப் பாக்க ஆளில்லாம சிக்னல்ல நின்னவன, விகடனின் மின்னிதழுக்கு ஒரு கதை எழுதி தருமாறு கேட்டு, ஒரு நாள் மின்னஞ்சல் ஒன்று வந்தது. நம்மளையும் மதித்து கேக்குறாங்களேன்னு ரொம்ப பெருமையா இருந்தது. அட.... நமக்கும் ஒரு அங்கீகாரம் இருக்குடான்னு, உள்ள இருக்கும் குரங்கு துள்ளாட்டம் போட்டது.

ரொம்ப சிரத்தையாக யோசித்து, பல்லு கொடஞ்சேன், பாக்கு போட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க. என்னவோ எழுதி அனுப்பினேன் அது பிரசுரமாச்சின்னு வந்ததும், என்னையே ரத்தம் வர கிள்ளிப் பார்த்தேன். நெசமாவே வந்திருக்கு.

இந்த சந்தோஷ தருணத்தில் என் பதிவுகளையும் மெனக்கெட்டு படித்து பின்னோட்டம் இடும் அண்ணன் கலை, ராஜூ, கும்மாச்சி, தண்டோரா, செல்வா, சுரேஷ் குமார், ரஹ்மான், ஜெட்லி,சிங்கை பித்தன், வலசு - வேலணை மற்றும் அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

தொடர்ந்து உங்கள் பொன்னான ஆதரவை நல்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்......

-------------------------------------------------------------------------------
அன்புபையீர்,

யூத்ஃபுல் விகடன் மின்னிதழ் வெளியாகிவிட்டது. தங்களது படைப்பும் இடம்பெற்றுள்ளது. பங்களிப்புக்கு நன்றி.

மின்னிதழை டவுன்லோடு செய்ய... http://youthful.vikatan.com/youth/Nyouth/min_nov_10112009.asp

- யூத்ஃபுல் விகடன் ;

ஊரான் ஊட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே

அல்லார்க்கும் வந்கம்பா

அல்லாரும் எப்டிகீறீங்க....? தடி எடுத்தவன் எலாம் தண்டல்காரன்னு சொல்லுற மாதிரி, இன்னக்கி எவ்வளவோ பேர் நடிக்க வந்துகீராங்கோ, பாதி பேர் வர்ற சொல்லோவே பஞ்சு பேசுதுங்கோ.... கைய்ய சொடுக்குகிறது கால தூக்குரதும்னு டகல்பாஜி வேலை செய்யுராங்கோ, டிரேக்டருங்களும் கேப்புல கெடா வெட்டுராங்கோ. என்னடா கோட்டரும் அவந் பங்குக்கு எறங்கி குட்டிய கொயப்புராநேன்னு டர்...ர்.... ஆவாதீங்கோ.

நியுசு இதாம்பா, நம்ம ஆமீறு கீராருல்லோ...? அவரு நம்ம முருகதாசு குடுத்த ஹிட்டுல ரொம்ப குஷியாகீறாரு, கஜினி சொல்லி அடிச்சிக்ந கில்லிலோ, ஆனா என்ன அந்த படத்த அவரு பொண்ண பாக்க உடலியாம் ஏன்னு தெரியுமா....? அவரு பொண்ணுக்கு இப்போ வயசு பதினொன்னுதான் ஆகுதாம், கஜினில ரொம்ப வயலன்ஸ் கீதாம் இது எப்டி கீதுன்னா....?

இவரு புள்ளதான் புள்ள, மத்தவங்க வூட்ல கீரதுலாம் கல்லுன்னு சொல்லுறாரு... ங்கொய்யாலே அப்புறம் ஏண்டா நிமிசத்துக்கு நாலு தரோம் டிவில அதுக்கு விளம்பரத்த போட்டு தாக்குரீங்கோ. சிக்ஸ் பேக் எயிட் பேக்ன்னு எங்க கனவ துண்ணு துட்டு பாக்குரீங்கோ. உன் சூத்த சுத்தமா வச்சுக்குநோம்னு தோனுற மாதிரி தானே அடுத்தவங்க சூத்தும்.

நம்ம போயப்பப் பாப்போம்..... ;

குப்ப மேட்டரு...

சில நாட்கள் முன்னாடி நம்ம ஹிந்தி பிட்டு பட நடிகை ராக்கி சாவந்த், மிகப் பெரிய சுயம்வரம் நடத்தி, அதை டிவியில எல்லாம் ஒளிபரப்பி, ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்தாங்க. அதே போல நம்ம தமிழ் சினிமா தொடை, இடை அழகிகளும் இதைச் செய்யலாம்னு இருந்தாங்க. இப்போ அவங்க ரெண்டு பேர் மனசும் ஒத்து போகவில்லை என்ற கருத்தில்.... ஒத்து போய் பிரியலாம்னு முடிவு செஞ்சிட்டாங்க.

இது எல்லாம் வீண் விளம்பர யுக்திதான்னு இப்போ தெளிவாகத் தெரிந்து விட்டது. இருவர் எதிர்பார்ப்பும், எதிரெதிர் திசையிலிருந்ததால்... இந்த விலகல். அது சரி அவன் அவளிடம் எதிர் பார்த்தது அவளை, அவள் அவனிடம் எதிர்பார்த்தது பணத்தை. ஆசைகள் அதிகமானதால்.... நிராசைகள் நிலையானது.

எலி எள்ளுக்கு காய்ந்ததும், புலி புல்லுக்கு ஏங்கியதும், புராணங்களில் கூட இல்லை.

---X---X---

கிரிக்கெட் அம்பயர் டேவிட் செப்பர்ட் நேற்று மரணமடிந்து விட்டார். அவரது சிரித்த முகமும், கூர்மையான பார்வையும், தேர்ந்த கிரிக்கெட் அறிவும் உலகறிந்ததே!!. அவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.

---X---X---

பெங்களூரையே நடுங்கவைத்திருக்கிறான் மோகன்குமார். ஒன்றல்ல...இரண்டல்ல...19 கொலைகள். அத்தனை பேரையும் சயனைடு கொடுத்துக் கொன்றிருக்கிறான். மூன்று மாதங்களுக்கு ஒன்று வீதம் கடந்த 5 வருடங்களில் 19 பெண்களைத் தீர்த்துக்கட்டிய இவனைப் போல ஒரு சீரியல் கில்லரை இந்தியா இதுவரை கண்டதில்லை!

இது அவன் நினைவில் வைத்துச் சொன்ன்னது ஆனால் இது 60க்கும் மேல் என்று போலீஸ நம்புகிறது. அவன் மயக்கிய பெண்களில் ஒரு நக்சலைட்டும் உண்டு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பெண்களே உஷார்....!

இதை அவனே ஒத்துக் கொண்டிருக்கிறான் சீக்கிரமாக இந்த வழ்க்கை முடித்து அவனுக்கு உச்சபச்ச தண்டனை அளித்தால் தப்பு செய்ய நினைப்பவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும். செய்வார்களா....? ;

குப்ப மேட்டரு...

ஜகதீஷ் ஷர்மா ராஜஸ்தானில் ஒரு தற்காலிக பள்ளியில் கடைநிலை ஊழியராக இருக்கிறார். அவரது வேலை பள்ளியை சுத்தம் செய்வது, நேரம் தவறாமல் பள்ளிக் கூட மணி அடிப்பது. அவரது சம்பளம் கடந்த 23௦ வருடமாக ரூபாய் இருபது.

அட மூடர்களே.... இருபது ரூபாயில் ஒரு மனுஷன் என்னதான் பண்ணுவான்.....

அரசு இயந்திரம் பழுதடைந்து உள்ளதா இல்லை பயன் படாமலே உள்ளதா. ஷர்மாவும் பல பேர் காதிலே மணி அடித்தும், பல கதவுகளைத் தட்டியும் பயனில்லாமல் இப்பொழுது கோர்ட் படி ஏறியிருக்கிறார்.

அவருக்கு நீதி கிடைக்க எல்லாம் வல்லோனைப் பிரார்த்திப்போம்.

---X---X---X

நகைச்சுவை நடிகர் மயிசாமி மகன் அருமை நாயகம் நடிக்கும் முடிவிலிருக்கிறார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் ஒரு தமிழானை விட்டுடுமா..... வாழ்த்துவோம், வரவேற்போம்.

---X---X---X

ஒரு தமிழ் பத்திரிக்கைக்கு எதிராக நடிகர் சங்கம் நடத்திய கூட்டத்தில் சில முன்னணி நடிகர்கள் உளரியத்தில் சுனாமி அடிக்கிறது. பத்திரிக்கைகள் ஏக கடுப்பில் உள்ளன. இவர்கள் வளர பத்திரிக்கைகள் உதவ வேண்டும் ஆனால் இவர்களுக்கு ஒரு பிரச்சனையை என்றால் கண்ட மேனிக்கு பேசி வில்லங்கத்தை வேலைக்கு வாங்குவது வழ்க்கமாக உள்ளது.

பின் நானா அப்படி சொல்லவே இல்லையேன்னு பலத்தையே திருப்பி போடுறது வழைமையாக உள்ளது. இவர்கள் எல்லோரின் வண்ட வாளங்களை அறிந்த பத்திரிகை நண்பர்களுடன் சுமுகமாகவே இருப்பது நலம்.

இதுவும் இப்போ கோர்ட் படி ஏறியிருக்கு இருபது பேர் கொண்ட இந்த லிஸ்டில் தப்பாக பேசாதவங்களும் இருக்காங்களாம் காரணம் கேட்டால்..... அதில் பேசும்போது புரட்சி தமிழான் இங்கிருக்கும் எல்லார் மேலையும் கேஸ் போடுங்க உங்களால் என்ன புடுங்க முடியும்னு பார்க்கலாம்னு சொல்லியிருக்காரு. புரட்சின்னு பேர் வச்சுக்கிட்டு புரண்டா படுப்பாரு. ;

கோயிந்து புலம்பல்....

அல்லார்க்கும் வந்கம்

இன்னாபா எப்டிகீரீங்கோ, ரொம்ப நாளிக்கா உங்கள அல்லாரையும் பாக்கமா ரொம்ப கஷ்டமா இர்ந்துதுபா. தீவாளிக்கு நம்ம மாமனாரு வூட்டுக்கு போயிருந்ததாலதாந் கோயிந்து வல பக்கமே வர்ல.

நேத்து நம்ம பரத் படம் ஆறுமுகம் பாத்தேந்பா, அட நம்ம தலீவர் படம் அண்ணாமலைய அப்டியே உல்டா பண்ணி கீறானுங்கோ. ஆர்ரா டரக்டருன்னு பாத்தா.... அண்ணாமலைய டரக்ட் பண்ண நம்ம சுரேஸ் கிருஷ்ணாபா. இன்னடா இதுவும் ஒரு ரிமேக்கான்னு கேட்டுக்நாக்கா...? இல்லையாம்ல....!, கத வேற ஒரு ஆளுதாம்பா.

இன்னாடா இவனுங்கோல்லாம் பெரிய டரக்டருங்கோ....? அவந் படத்த கூட தெரியாம கீறானுங்கோ. வேற எவனோ உன் கிட்ட வந்து ஒந் கதயவே சொன்னா...., கஸ்மாலொம் எந் கதயவே என்னாண்ட கமால் பண்ணி ஓட்றியான்னு....? கலுத்தாம்பட்டயில தட்டி ஓட்டாம, கமுக்கமா படம் பண்ணி விக்கிராறு.

ஏற்கனவே இப்டித்தான் பாட்சாவ ஆந்திராவுல இருந்து துட்டு குடுத்து வாங்கி, கஜேந்திரான்னு பண்ணாரு நம்ம சுரேசு. நடிக்கிற கபோதிக்குதான் தெரியல, ஆனா தயாரிப்பலருக்குமா தெரியல..? துட்டு போடுற துக்கராம்முங்க உஜாரா இருக்க வேணாம்.

பதினஞ்சு சீனையும் பக்காவா டகுல்பாஜி பண்ணி திருப்பி எடுத்து.... அத எப்படியும் ஓட்டிடலாம்னு ட்ரீம் காணுராங்கோ. சரி எடுக்குறதுதாந் எடுக்குரீங்க, கொஞ்சம் பந்தாவான அக்டருங்கள போட்டு எடுக்க வேண்டியதுதானே, நேத்து வந்தவந், ஒன்னுக்கு போவத் தெரியாதவன போட்டு, நம்ம தலீவர் படத்த, அவர் பேர கேடுக்குராங்கோ.

இதுக்கு பேசாம சிந்தாதிரி பேட்டயில சீஸ்ஸான வண்டிய சிக்கெடுத்து விக்கலாம்.

போட்டுனு போன சரக்கு புஸ்ஸுன்னு போயிடிச்சி... அப்பாலிக்கா ஊட்ல இர்ந்த சரக்க ஊத்திக்னு தாராந்தந்பா.

சரிப்பா நம்ம பயப்ப பாப்போம் வர்டா... ;

சினி மினி....

பட்டாசை பட்டக்ஸில் கட்டிக் கொண்டு அலைந்ததனால்.... என்னால் வலைப் பக்கமே இத்தனைநாளாக வரவே முடியவில்லை.

திராவிடன், தமிழ் திருநாள் என்று பேசிக் கொண்டாலும், தொல்லைக்காட்சிகள் என்னவோ போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. வாய்ச் சொல்லில் வீரரடி, வியாபாரம் என்று வந்து விட்டால்..... சாணமும் யானையாகும்.
---X---X----

கமல் 50ஐ தொடர்ந்து.... சிம்பு 25, ராதிகா 30ன்னு கொண்டாட தொல்லைகாட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இது ரசிகர்களை மகிழ்விக்க என்றாலும் இதில் ஒரு வியாபாரத் தன்மை இருப்பது மறுக்கமுடியாது.
---X---X----

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க ஆயத்தமாகி வருகிறார்... பெத்த பெத்த டைரக்டர்களை தனக்கான கதை செய்யச் சொல்லி வெயிட்டிங்.... வாங்க தளபதியே, வந்து வெள்ளித் திரையை ஆள்க....
---X---X----

கமலின் அடுத்த பட நாயாகியாக நடிக்க திரிஷாவும், தமன்னாவும் கடுமையாக முயற்சிக்கிறார்கள், அனேகமாக தமன்னா கைப்பற்றுவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது.....
---X---X----

குடும்பத்துக்குள் மறுபடி குழப்பம் வராமல் இருக்க அவர்களுக்குள்ளாகவே பேசி தாங்களே தங்களுக்குள் போட்டியாக வராமல் இருக்க தத்தமது படங்களை முன்பின் மாற்றி வெளியிடுகிறார்கள் அதானே....
---X---X----

தீபாவளி ரேசில் ஆதவன் பின்தங்க.... பேராண்மை முந்தும்போல் தெரிகிறது.... ;

இது காதலா......?

காலையில் வெகு சீக்கிரமே எழுவது என் வழக்கம் அன்றும் அப்படியே.... எழுந்து, மம்மி தந்த பாலைக் குடித்து விட்டு, நேராக டாயிலெட் சென்று என் காலைக் கடன்களை முடித்து... அம்மா வரும் வரை காத்திருந்தேன். அம்மா வந்து கால் கழுவி, என்னை குளிக்க வைத்தாள். குளித்து உடம்பு முழுவதும் பவுடர் போட்டு, பள்ளி சீருடை அணிவித்து, தோசை ஊட்டினாள்.

பள்ளிக்கு போவதென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்கு காரணம் பிந்து..... என் பள்ளி நாட்களை பளீரென மின்னச் செய்தவள். என் தோழி, தேவதை, துணை இத்யாதி, இத்யாதி.....

பிந்து என் வகுப்பில் படிப்பவள், படிப்பில் படு சுட்டி, கற்பூர மூளை, எதையும் ஒரு முறை சொன்னால் சட்டென பிடித்துக் கொள்வாள். நாட்கள் ஒவ்வொன்றும் நங்கூரமிட்டு நிற்காதா என ஏங்க வைக்கும் அன்புக்கு சொந்தக்காரி. நான் எப்பொழுதும் அவள் பக்கத்தில்தான் உட்காருவேன்.

அவள் வீடு, பள்ளிக்கு மிக அருகிலேயே இருந்தது, ஆனாலும் அவள் எனக்காக காத்திருப்பாள். என்னை யார் பள்ளிக்கு தூக்கிப் போனாலும் "பிந்து வீட்டுக்கா துக்கிப் போ...." என்று அழுது ஆர்பாட்டம் செய்வேன். அவள் வீடு வந்ததும் நிற்கச் சொல்லி, அவளையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வேன்.

அவளை அவள் அம்மா தூக்கிக் கொள்ள, என்னை என் அம்மா தூக்கிக் கொண்டுபோய் எங்கள் வகுப்பில் விடுவார்கள். ஒரு நாள் அவள் வரவில்லை என்றாலும் எனக்கு ஏதோ போல் இருக்கும், அவளும் அதயே நினைப்பதாகச் சொன்னாள்.

எந்த ஒரு கலை நிகழ்ச்சி என்றாலும், நாங்கள் இருவரும் சேர்ந்தே கலந்துக் கொள்ள வைக்கப் பட்டோம். பார்ப்பவர் எல்லாம் ஜோடிப் பொருத்தம் அற்புதம் என்றே வியப்பார்கள்.

மதியம் அவள் வீட்டில் வைத்தே எனக்கும் அம்மா சோறு ஊட்டுவார்கள். நிறைய நாள் அவள் சப்பாடையோ அல்லது என் சாப்பாடையோ இருவரும் சேர்ந்தே சாப்பிடுவோம். எங்கள் நட்பு வீடுவரை வந்தது. விடுமுறை தினங்களிலும்...., நான் அவள் வீடே கெதியென இருப்பேன். எங்கள் இருவர் குடும்பமும் நட்பால் பினைந்தது.

அவள் அப்பா என்னை வாடா மருமகனே என்றுதான் அழைப்பார். கேலிக்காக... "என்னடா மருமகனே.... என் பொண்ணைக் கட்டிக்கிறியா...?" என்று கேட்பார் "ஓ...!" என்று சொல்லி ஓடிவிடுவேன்.

எல்லாம் நான் ஒன்னாவது முடிக்கும் வரைதான்....கடவுளெனும் கொடியவன்.... பிஞ்சு உன்ளங்களை சிதைத்து, ரத்தம் குடிக்கும் இறக்க மற்றவன். நாங்கள் பிரிய நாள் குறித்தான்........ அவள் தந்தைக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி போகவேண்டிய நிர்பந்தம் வந்தது.

அதற்க்கு முந்தைய நாள் இரவு.... நாங்கள் ரொம்ப நேரம் விளையாடினோம், இந்த பிரபஞ்சமே இன்றுடன் முடிந்து விட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு. மறுநாள் அவள் அந்த டெம்போவில், அம்மாவுடன் ஏறும்வரை அழுது கொண்டே இருந்தோம்.

ஆழ்நிலை நினைவில் மூழ்கி இருந்தவனை அம்மா தட்டி எழுப்பினாள் "ஏண்டா...! உன்னை எத்தனை முறை கூப்பிடுறது, காது செவிடாப் போச்சா...?" திடுக்கிட்டு விழித்தவன் "என்ன....?" என்றேன். "நாம பிந்து வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னேனே....! கிளம்பு" சரி என்று கிளம்பி போனோம்.

அதற்குப் பிறகு ஒரு வாரம் அவள் நினைவாக இருந்தது, பின்... என் நாட்கள் ஊருண்டோட, நான் அவளை மறந்தேப் போனேன். பிந்து போல் நிறைய பேர் என் வாழ்வில் வந்து போனார்கள், இன்று எனக்கும் திருமணமாகி, இரண்டு பிள்ளைகள்.

இருபத்தைந்து வருடங்கள் கழித்து அவளைப் பார்க்கப் போகிறேன். அம்மாதான் பிந்துவின் அம்மாவை எங்கேயோ கடைத்தெருவில் பார்த்து... நலம் விசாரித்திருக்கிறாள். அவசரத்தில் இருந்ததினால் இருவரும் மேற்கொண்டு எதுவும் போசாமல் விடைபெற்றுவிட்டார்கள்.

அவர்கள் வீடு இந்த சந்தில்தான் இருக்கு என்று, பிந்தோட அம்மா சொன்னார்கள். பின் வீடு தேடி கண்டுபிடித்து சென்றோம். வீடு ரொம்ப சின்னதாக இருந்தது. ஒரே ஒரு உடைந்த நாற்காலி இருந்தது, அதில் நான் உட்கார்ந்துக் கொள்ள, அம்மா தரையில் அமர்ந்தாள்.

ஒரு சேலைத் திரை மட்டுமே மறைப்பாய் இருக்க, உள்ளே இரு பெண் குரல்கள். பிந்துவின் தந்தை, திரையை விலக்கி வெளியே வந்தார், வயது அவர் முகத்தில் பல கோலங்கள் வரைந்திருந்தது, தலையில் ஒரு முடி கூட இல்லை.

"வணக்கம்..."

"வணக்கம் சார்...!, எப்படி இருக்கீங்க...?"

"ம்... ஏதோ இருக்கோம்...."

என் கண்கள் உள்ளயே நிலை கொண்டிருக்க..... சிறிது நேர மவுனத்துக்கு பின், அம்மாதான் ஆரம்பித்தாள்....
"பிந்து எப்படி இருக்காள்...?" என்றாள்.
அவர் குனிந்த தலை நிமிராமலேயே..... "என்னத்த சொல்லுறது, அவளாகவே விருப்பப் பட்டுத்தான் அபிஷேக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டாள் நாங்கள் அவள் விருப்பத்துக்கு என்றுமே குறுக்கே நின்றதில்லை.

அவரும் நல்லா படிச்சவர்தான். ஒரு நிதி நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தார். என் சொத்த எல்லாம் வித்து சிறப்பா கல்யாணம் பண்ணினோம். ரெண்டு வருஷம் நல்லாத்தான் போச்சு. என்ன ஆச்சோ தெரியாது...? அந்த கம்பெனி முதலாளி ஓடிட்டான். சினச்சர் ஆதொரிட்டி இவர்ன்னு சொல்லி போலீஸ் அரெஸ்ட் பண்ணிடிச்சு, பெயில்ல வெளியே அன்னைக்கி ராத்திரி எல்லாரும் தூங்கும் போது தூக்குப் போட்டு போயிட்டாரு..."ன்னு சொல்லி தேம்பி தேம்பி அழுதார்.

உள்ளிருந்தும் அழுகுரல் கேட்டது. மேற்கொண்டு யாரும் எதுவும் பேச சக்தி இல்லாமல் மவுனத்தை ஆயுதமாக்கி அங்கிருந்து விடை பெற்றோம். நானோ அம்மாவோ கடைசி வரை பிந்துவை பார்க்கவில்லை, எனக்கும் பிந்துவை வேறு கோலத்தில் பார்க்கும் தைரியம் இல்லை.

தவழ்ந்து வந்த குழ்ந்தையைப் பார்த்தேன், அப்படியே சின்ன வயசு பிந்துவை உரித்து வைத்திருந்தது. ;

எள்ளு தந்தா..... எலிகாப்டர்....

அல்லார்க்கும் வந்கம்,

உன்னொரு பைனான்ஸ் கம்பெனி மூடிட்டாங்கோ....

நாந் தெரியாமத்தான் கேட்டுகீறேந்....? எவனாவது எள்ளு தா, எலிகாப்டர் தரேன், ஏரோப்ளேன் தர்றேன்னு சொன்னா...., அவந் ஆரு என்னான்னு தெரியாமவே, நம்ம பய புள்ளைங்க துட்ட கொண்டு கொட்டிடுராங்கோ, அப்புறோம் துட்ட தாராந்துட்டு, அவன புடி, இவன பொசுக்குன்னு, கோர்மேன்ட்டு கிட்ட வந்தா.... அரசாங்கோம் பாவம் இன்னா பண்ணோம்.

இதுக்கு முன்னாடி ஒடுனவங்க அல்லருகிட்ட இர்ந்து, எவ்வளோ கரந்தாங்கோ, ஆராருக்கு குட்தாங்கோன்னு ஏதாவது ரெக்காடு கீதா.....? இர்காது, அல்லாரும் கூட்டு கலவாநிங்கோ.
---X---X----
முந்தா நா நம்ம பீச்சுல, நானும், நம்ம சன்னும் நல்லா கொரட்ட உட்டு தூங்கீனு இர்கொசொல்லோ...., ஒரே டர்ரு புர்ருன்னு மோட்டார் சவுண்டு, ஒரே பைக்குங்கோ, அல்லாரும் சும்மா சர்ருன்னு காத்த கீச்சிக்னு போனாங்கோ, நம்ம கூட தூங்கின்னு இர்தவங்க அல்லாருக்கும் படா பேஜாராப் பூடுச்சி, திடீர்ன்னு ஒரே அதிரி புதிரியாவி, சண்ட மூண்டு.... அப்பாலிக்கா போலீசு வந்து குண்டு போட்டுத்தான் சண்டைய நிறுத்திச்சி.

ரேசுக்கு ஓட்டுற பய புள்ளைங்க, வேற எங்காவது காட்டுக்கு போவ வேண்டியதுதானே, ங்கொய்யாலே... தின்னு கொயுத்துப் போன, இவனுங்க போதைக்கு நாங்க ஊறுகாயா......
---X---X----

இந்த ஆஸ்திரேலியாவுல இன்னாதாம்பா நட்குது...? ஒரே நம்ம பசங்கள அடிக்கீரனுங்க, நம்ம அமைச்சரும்... நம்ம பயலுகள அமைதியா இர்கனும்னு சொல்றாரு.... இதுக்கு இன்னாதாம்பா முடிவு....?

அரசாங்கம் அதிரடியா எதுனா முடிவெடுக்கலைன்னு வை, இது ரொம்ப பேஜாராப் பூடும் அக்காங்....

ஓக்கே பா செட்டம்மா வருது நமக்கு ஒரு சவாரி சிக்கிடிச்சி நாந் கயண்டுக்குறேன், வர்ட்டா. ;

ஆந்திர முதல்வரின் அகால மரணம்

"ஹாய்....! I'm ராஜு, வேங்கடபதி ராஜு, IIT பைனல்" என்று தன் உரையை ஆரம்பித்தான்.... முடித்த நேரம், அரங்கமே கை தட்டலால் அதிர்ந்தது. சிறப்பு விருந்தினராக இருந்த ஜனாதிபதி... "அப்பாக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார்..." என்றார். விழா முடிந்து எல்லோரும் அரங்கு விட்டு வெளியே வரும்வரை, ராஜுவை மொய்த்தார்கள்.

ராஜு ஆந்திர முதல்வரின் ஒரே வாரிசு, ஆனால் தன் சொந்த காலின் நிற்க வேண்டும் என்று சென்னையில் கடந்த பன்னிரண்டு வருடமாக தங்கி படிக்கிறான். தன் செலவுக்கு ஒரு சுற்றுலா துறை நிறுவனத்தில் டூர் மனேஜராக பகுதி நேர வேலை செய்கிறான்.

அறைக்கு வந்ததும் பிலால் ராஜுவிடம் "Excellant presentation, surely it could grab the required attention. அறிவாளிகள் உருவாவதில்லை பிறக்கிறார்கள் என்பதற்கு நீ ஒரு உதாரணம். மச்சி உன் அப்பா முதல்வர். ஆனால் நீ உன் சொந்த காலில் நிக்க வேண்டும் என்று தனியாக அரை எடுத்து, என்னை மாதிரி பிச்சை எடுத்து படிப்பவனுடன் தங்கி..... படிக்கிறே, உனக்கு ஏன் இந்த தலை எழுத்து..?"

"இல்லைடா உங்களுக்கு எல்லாம் அவர ஒரு தலைவராத் தான் தெரியும், ஆனால் எனக்கு அவர் அப்பா, காலை எழுந்ததில் இருந்து, இரவு தூங்கப் போகும் வரை, அவரைச் சுத்தி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவர் அடிப்படையிலேயே ரொம்ப நல்லவர், ஆனால் எவ்வளவோ விஷயங்கள் தனக்குப் பிடிக்காமல் செய்கிறார். அவர் இந்த நாட்டுக்கு எவ்வளோவோ செய்யனும்னு நினைக்கிறார், ஆனால் அதில் பத்து சதவீதம் கூட அவரால் செய்ய முடியவில்லை. அதற்க்கு நிறைய காரணம் இருக்கு. அவர் இந்த பாழாப் போன அரசியல விட்டு போகலாம்னு நினைச்சாக் கூட, மக்கள் அவர்தான் வேண்டும் என்று கேட்கிறார்கள். உனக்கேத் தெரியும், அவர் இந்த முறை எலக்ஷனில் நிக்கவேஇல்லை, ஆனால் மக்கள் விரும்பி அவரை பதவியை ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். மறுபடியும் ஒரு தொகுதி இடைத் தேர்தல் நடத்தி, அவரை வெற்றி பெறச் செய்தார்கள்.... எல்லாம் விதி. நானோ என் குடும்பத்தினரோ அவரைப் பார்க்க வேண்டும் என்றால் கூட, appointmentதான் என்ன செய்ய அவர் வேலை அதுமாதிரி. Initially we too had problem in coping-up with this setup, but as days passed, we'v learnt this system"

"இருந்தாலும்..... மச்சி இப்போது வாரிசு அரசியல் ரொம்ப சாதாரணம், நீயும் அவர் வழியிலேயே அரசியல்லுக்கு போனால், அந்த மாநிலத்துக்கு இன்னும் நல்லது நடக்கும்"

"பிலால்..... உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன், இதைப் பற்றி பேசுவதை நிறுத்து. நான் அவரை விட்டு ஒதுங்கியுருப்பதுதான் அவருக்கும் பிடிக்கும், எனக்கும் இதுதான் நல்லது போல் தெரிகிறது. அதனால்தான் என் பள்ளிப் படிப்பு முழுவதும் நான் சென்னையிலேயே பாண்ணினேன். இப்போது இந்த படிப்பு முடிந்ததும், வெளிநாடு சென்று படிக்க வேண்டும், நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும், இந்த சுற்றுச்சூழல் மாசு படுவதைத் தடுக்க வேண்டும். ஆனால் அது எல்லாம் நான் ராஜூவாக இருந்துதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். I' wannah will stop this global varming, for that i dont' need my dad's tag. மச்சி நான் ரொம்ப சாதாரண வாழ்க்கை வாழ நினைக்கிறேன், ஆயிஷாவை கைப் பிடித்து, கடைசி காலம் வரை, அவள் மடியிலேயே இருக்க வேண்டும்."

"சரிடா வா சாப்பிடப் போகலாம்.."
"ஒகே, wait i'll be back in a minute, after taking bath..."

ஆயிஷா ஒரு இஸ்லாமிய கல்லூரியில் கடைசி வருட MBA படிக்கிறாள். டென்னிஸ் விளையாடும் போது ராஜுவுடன் பழக்கம், இருவர் அலைவரிசையும் ஒத்துப் போக.... வெகு விரைவிலேயே அது காதலாக பரிமளித்தது.

ராஜு குளிக்க டாய்லெட் போன உடன் அவன் போன் அலறவும்....
"ராஜு உனக்கு போன்"
"யாரு... மச்சி...?"
"ஆயிஷா...."
"எடுத்துப் பேசுடா..."
"ஏய் நீயே வந்து பேசு..." அது ஒரு ஐந்தாறு முறை அலறி பின் அமைதியானது. ஆனால் மறுபடியும் அது அலறவே, பிலால் எடுத்தான்.

"ஹலோ...!"
"அண்ணே அஸ்ஸலாமு அலைக்கும்"
"வாஹ் அலைக்கும் அஸ்ஸலாம், எப்படிம்மா இருக்கே...?"
"நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க....?"
"நல்லா இருக்கேன்மா"
"அண்ணே..., ராஜு எங்கே....?"
"உள்ளே குளிக்கிறான்"
"அண்ணே, அவருக்கு நான் ப்ரோக்ரம்முக்கு வரலைன்னு, ரொம்ப கோபம், நான் என்ன பண்ணுறது, எங்க வீட்டுல இன்னைக்கி, அக்காக்கு நிச்சய தார்த்தம் அதனால்தான் வர முடியாமப் போயிடுச்சி..."
"பரவாயில்லைமா, நான் அவன் வந்ததும், சமாதானம் பண்ணி, உன்னிடம் பேசச் சொல்கிறேன்"
"தேங்க்ஸ்... அண்ணே"

ராஜு குளித்து வந்ததும், தலை கூட துவட்டாமல், ஆயிஷாக்கு போன் பண்ணினான்....
"ஹாய் டார்லிங்.... நான் உன்னை தப்பா நினைப்பேனா, இல்லடா செல்லம், I know what's your problem was, dont worry. சரி நிச்சயம் எப்படி போனது...?"

"Oh went on well"

"OK babe take care, ill meet you tomorrow" என்று போனைக் கட் பண்ணினான்.

"வா மச்சி சாப்பிடப் போகலாம்"

"ராஜு ரெண்டு ரிங்குல போன் எடுக்கலன்ன உடனே, ஆயிஷா ரொம்ப பயந்துப் போயிட்டா...."

"அவளுக்கு நான் அவளை கை பிடிக்கும் வரை இந்த பயம் இருக்கும்"

"எப்போதான் கல்யாணம்...?"

"அப்பா எப்போவோ சம்மதிச்சிட்டார், நான்தான் அவள் படிப்பு முடியட்டும் என்று சொல்லியிருக்கிறேன்"

கேன்டீன் வந்து தட்டை எடுத்து, ஆளுக்கு ரெண்டு சப்பாத்தி, கொஞ்சம் தால் எடுத்து வந்து உட்கார்ந்தார்கள். அப்பொழுதுதான் டிவியைப் பார்த்தார்கள், காமடி டைமில் வடிவேலு தனக்குத் தெரியாமலே எரித்த தன் தந்தையின் சாம்பல் என்று நினைத்து வேறொருவரின் சாம்பலை உடம்பெல்லாம் பூசிக் கொள்ளும் கட்சி திரையில் ஓடியது.

பிலால் ஏதோ முக்கிய செய்தி திரையில் கிழே ஓடுவதைப் பார்த்தான், "அதில் ஆந்திர முதல்வர் மாயம், தேடுதலைத் தீவிரப் படுத்தியுருக்கிறது அரசு" என்று வந்தது. அதிர்ந்தவன் ராஜுவையும் அதைப் பார்க்கச் சொன்னான். அதிர்ந்தவர்களாக, வேகமாக வேறு நியுஸ் சானலை மாற்றி, பார்த்தபோதுதான் அவர்களுக்கே விஷயம் தெரிந்தது. உடனே ராஜு தன் தந்தையின் செல்லுக்கு தொடர்பு கொண்டான், அது தொடர்பு எயல்லைக்கு வெளியே இருந்தது. அவரது அந்தரங்க காரியதரிசியின் என்னும் அவ்வாறே, என்ன செய்வது என்று தெரியாமல். ஆந்திர DIGக்கு போன் அடித்தான் அவர்
"Sir, dont worry we are trying our level best. His chopper deviated from the signal after 20 minutes of fly, due to bad weather they might have landed somewhere. If possible can you come down"

"OK i'm starting now"

என்று போனை வைத்து. அப்படியே ஏர்போர்ட் போய்... வீடு வந்து சேர்ந்தான். அம்மா ரொம்ப கவலையாக இறந்தார்கள். அவர்கள் முகத்தைப் பார்க்கவே ரொம்ப கலவரமாக இருந்தது. ஆனால் அருகில் சென்று பேசக் கூட முடியாமல் அவனை மீடியாக்கள் சூழ்ந்துக் கொண்டன. திரும்பவும் பல மட்டங்களில் இருந்து விசாரணைகள் போன் கால்கள் என்று ரொம்பவே பரபரப்பானான். இரவு முழுவதும் தேடுதல் பணி நடந்தது. ஆனால் ராஜுவின் உள் மனசு, காலை ஒன்பது மணிக்கு போனவர், இன்னும் ஒரு தகவலும் இல்லை என்றால்.... ஏதோ அசம்பாவிதம் நடந்ததாகவே தோன்றியது.

"Sir, there is no signal even from the Emergency Locator, we are trying our best. Even army helicopter and rescue people being used in this operation. We'll surely get him alive dont worry" என்றார் உள்துறை அமைச்சர்.

ஆனால் அதிகாலை மூன்று மணியளவில் அவர்களின் Chopper காட்டுப் பகுதியில் நொறுங்கிக் கிடப்பதாகவும் பயணம் செய்த ஒருவருமே உயிருடன் இல்லை என்றும் தகவல் வந்தது அப்படியே உடைந்துபோய் சரிந்தான் ராஜு.

அவரது பூத உடல் அடக்கம் ரொம்ப சிறப்பாகவே நடந்தது. அது முடிந்த அடுத்த கணமே, யார் அடுத்த முதல்வர் என்னும் பேச்சு கட்சிக்குள்ளும், மாநிலத்திலும் பரபரப்பாக எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் கட்சி நிர்வாகிகளும், மேலிடமும், ராஜுதான் அடுத்த முதல்வர் ஆக வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் ராஜு மறுத்தான். பிரதமரே அவனிடம் தனியாகப் பேசி, சம்மதிக்க வைத்தார்.

விருப்பமில்லாமல் முள் கிரீடத்தை தலையில் ஏற்றினான். நாளடைவில் அரசியல் கை வரப்பெற்று, ஒரு சிறந்த முதல்வராக மாறினான். ஆனால் ஆயிஷாவினால்தான் அவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சாதிய அடிப்படை கொண்ட கட்சியின் தலைவராகப் பொறுப் பேற்றதினால்.... ராஜுவால் ஆயிஷாவைக் கைபற்ற முடியவில்லை.

ஆயிஷாவும் குடும்பத்தாரின் வற்புறுத்தலினால் தன் தலைவிதியை நொந்து கொண்டே, வேறொருவரைத் திருமணம் செய்துக் கொண்டாள். ;

சேசுவாய் எதிர் நின்ன கமெராமேன்...

அல்லார்க்கும் வந்கம்பா,

இந்த பஜ்ஜி யாரோ ஒரு கமெராகாரன அடிச்சானே, ரொம்ப கொயுப்பு இவனுக்கு, அடிச்சானே தொர மன்னிப்பும் கேக்க மாட்டாராம்.

ஏம்பா நாந் தெரியாமத்தான் கேட்டுக்கீறேன்...? அந்த கேமரா லென்சு மூடி பட்டத்துக்கு ரொம்பத்தாந் அல்டிகீறானே, ங்கொய்யாலே நெக்குலாப் பூடுச்சி, இவனுங்க எல்லாம் வெளிச்சத்துக்கு வந்ததே இந்த மாதிரி மீடியாக்காரனாலத்தாந் ங்குரத மறந்துட்டு அப்பூடி இன்னா கோவமோத் தெரியல. அந்த கேமராக்காரன் இவனத் திருப்பி அடிச்சான்னா இவன் பகுலு பிகுலூதிக்கும்.

மவனே உஜாரா இர்ந்துக்கோ அல்லாங்காட்டி.... பஜ்ஜிய புயுஞ்சி எண்ணைய எடுதுடுவாங்கோ அக்காங்....
---X---X---
இத்னகோடி கறுப்புப் பணம் இருக்கு, அத்த நம்ம ஹீரோங்கோ.... கஷ்டப் பட்டு லவுட்டிக்னு வர்றா மாதிரி படம் எடுக்குற, அம்மாந் ஹீரோ, டைரடக்கரு, தயாரிப்பாளருன்னு அல்லாரும் ஓயுங்காத்தான் வரி கட்ராங்களா...?

மொத உங்க பின்னால கீற அயுக்க க்ளீன் பண்ணுங்கோ, அப்பாலீக்கா அட்தவன கயுவலாம். கோடி கோடியா சம்பளம்..... உன்னும் உன்னும் ஏத்திக்னே போனா, படத்த நீங்களே பாத்துக்க வேண்டியதுதான், ஒரு பயலும் படம் பாக்க டாக்கீசுக்கு வர மாட்டான், இப்பவே டிக்கெட் வெள பேக்க கீக்குது.....
---X---X---
மேஜர் ஆகாஷ் சிங், நேத்து எல்லையில எதிரியால சுட்டுக் கொல்லப் பாட்டார்னு...., நம்ம பித்தன் அண்ணாச்சி சொன்னாரு. ஆனா.... அத்த எந்த கோபாலபுர டிவியும் காட்டலன்னு ரொம்ப பீல் ஆயிட்டாரு. பாவம் அவங்களுக்கு காட்ட எவ்வளவோ கீது, சர்தான் உடு அண்ணாச்சி. ;

வெளையாட்டா சம்பாதிகிறாங்க....

அல்லார்க்கும் வந்கம்பா,

விளம்பரத்தில அதிகமா சம்பாதிக்கிற ஆளுல மொத ஆளா வந்துகீரதுல ரொம்ப ஹேப்பியா கீது, மொதோ நாலு எட்த்துல, நம்ம ஆளுங்க வந்ததுல கோயிந்து ரொம்ப குஷியாயிட்டாம்பா.

ஆனா நம்மாளு வெள்ளகாரணுவ கிட்ட இர்ந்து கத்துக்கிட்ட கேம்ல, அவனையே மிஞ்சிட்டானுக. கிறிகேட்ட மொத கண்டுகீனு ஆடுனவங்க ஆஸ்தெரெலியா, இங்கிலாந்து, ஆனா அவனுவளையும் நம்மாளு அடிச்சி தூக்கிட்டான் இல்ல. நம்மாளு சிங்கம்லே.

ஆமா நாந் தெரியாமத் தான் கேக்கேன், ஏதோ பேன் விளம்பரத்துல தோனி வந்து இது ரொம்ப நல்லா காத்து தரும் பேநுனு சொல்லிகீறாரு இல்ல ஆனா அவரு வீட்ல அந்த பேநு கீதா...? இர்காது. ஆனா அவர் நம்மள வாங்க சொல்லுவாரு. அவரு ஏதோ களிம்ப நமளையும் தலையில தடவ சொல்லுறாரு ஆனா அந்த களிம்ப அவரு ஊஸ் பண்ணுறாரா?

எல்லையில கீற ஆளுங்க ஆரும் நமக்குத் தெரியாது, ஆனா கொல்ல பக்கமா வந்து தொல்ல குடுக்கும் இந்த கிறிகேட்ட ரொம்ப நல்லா தெரியுது. விளம்பரத்துல, டிவில, பேப்பருல அல்லாத்துலையும் இவனுங்களயே காட்டீனு இர்ந்தா நம்ம புள்ளைங்களுக்கு, இவங்கதான் நாட்ட காக்குற தெய்வமாத் தெரியும்.

வெளையாட்டா சம்பாதிக்கிறாங்க, நம்ம பொயப்பா கேளு, நாய் பட்ட பாடு, லொங்கு லொங்குன்னு ரிச்சா மிதிச்சாதான் கஞ்சே கிடைக்கும். ஆமா எப்போ ஸ்ரீலங்கா ஆட்டம் ஆரம்பிக்குது....
-------x----x----
சமச்சீர் கல்விக்கு ரொம்ப தடுங்கள் வரும் அதெல்லாந் தாண்டி தல கொண்டுவந்துசின்னா ரொம்ப புண்ணியமா போவும், என்ன பணம் புடுங்குறாங்க இந்த இங்கிலீஷ் உஸ்கூலுல.
ஐயா மனசு வச்சா, நிச்சயம் இது சுளுவா வந்துரூம். ;

குப்ப மேட்டரு.....

ஜெய்பூரில் மீண்டும் ஒரு மாணவி, தன் பள்ளி முதல்வரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். இதுபோல் வன் கொடுமைகள் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், அந்த முதல்வருக்கு தரப் படும் தண்டனை, மிகக் கொடுமையாய் இருப்பதோடல்லாமல், எல்லா பள்ளி மற்றும் கல்லூரிகளின் அறிவிப்புப் பலகையில் இந்த செய்தியை பதிய வேண்டும். மீண்டும் யாரேனும் தவறு செய்ய மனதாலும் நினைக்காத வண்ணம் பள்ளிகள் காக்கப் படவேண்டும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
தமிழன் நிலை உயரும் வரை, இலவசங்கள் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள். தம்பியை கை கொடுத்து தூக்காமல், ஒரு கை கொடுத்து வாய் அடைப்பது அரசியல் ராஜ தந்திரம் அன்றி வேறில்லை.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்

எனும் பாட்டியின் பாடல் அறியாதவரில்லை.

நிலை உயர ஆவன செய்யாமல், இலவசங்களினால் இட்டு நிரப்ப நினைப்பது, கனி இருப்ப, காய் நகர்துதலே.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
வலைப்பூவை திரையுலகம் சற்று கலக்கத்துடனே பார்க்கத் துவங்கியுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த மிகப் பிரம்மாண்டமான திரைப் படத்த்தை, கிழி கிழியென்று கிழித்ததில் திரையுலகமே மிகுந்த வருத்தத்தில் உள்ளது.

ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும் இதே வலைப்பூவில்தான் சில நல்ல விமர்சனங்களும் விளைந்திருக்கின்றன. சமீபத்தில் வந்த மாயாண்டி குடும்பத்தார், வெண்ணிலா கபடிக் குழு, சுப்ரமணியபுறம் என்று நல்ல படங்களையும் இந்த வலைப்பூ உலகம் வாசகர்களுக்கு கொண்டு சேர்த்தது.

தயாரிப்பாளரும், இயக்குனரும் அதீத பிரமாண்ட மோகத்தால் அனாவசிய செலவு செய்யாமல், கதையோடு இயந்த கருத்து சொல்ல விழைந்தால், அது நல்லதொரு மாற்றத்தை திரையுலகில் ஏற்படுத்தும்.

வலையுலக நண்பர்கள், ஒரு படத்தை விமர்சிக்கும் போது, சற்று சிரத்தையாக, அதில் புழங்கும் மிக அதிக பணம் மற்றும் பணியாற்றும் எண்ணற்ற தொழிழாளர்களின் வாழ்கையை நினைத்து எழுதுவது எல்லோருக்கும் நன்மைபயக்கும் என்பதில் ஐய்யமில்லை.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
மதுரை தமுக்கத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் வழக்கம் போலவே இந்த முறையும் தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்கள் ஏராளமாக விற்பனையாகின்றன. இந்தியா போல் வளரும் நாடுகளில், இன்னும் இதுபோல் ஆயிரமாயிரம் தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்கள் வந்தாலும் விற்பனை சக்கை போடு போடும். ;

இனிப்பு தந்த இனிமா

அப்போ நான் ஒரு சின்ன விளம்பர நிறுவனத்தில், வேலை பார்த்து வந்தேன். புதிதாக ஆரம்பித்த நிறுவனம், அதனால் பண்ணு, பப்பர மிட்டாய்ன்னு சின்னச் சின்ன பஞ்சர் ஓட்டுற வேலையே வந்தது, ஆனாலும் இதில் எங்கள் முழு திறமையையும் காட்டணும்னு, காசுக்கு மேலேயே கூவுவோம்.

கொஞ்ச நாள்ல அந்த பஞ்சர் வேலையும் வராம, டின்ஜர் வச்ச மாதிரி அடிவயிறு எரிஞ்சது. ஒரு கட்டத்துல, எங்க டக்ளசுக்கே (ஓனருங்கோ), என்னடா இது பொழைப்பு, இப்படி 'ஈ' கூட வராம காஞ்சிக் கெடக்கேன்னு ரொம்ப கவலையாப் பட்டாரு. நாங்களும் சார் எப்படியும் நமக்கு ஒரு நல்ல காலம் வரும் சார்ன்னு, அவருக்கு எடுத்துச் சொல்லி பின்ன இந்த கடையையும் அவரு மூடிட்டாருன்னா.... நாங்க சோத்துக்கே சிங்கியடிக்கன்னும்னு, அவருக்கு சில பல பிட்டப் போட்டு, கடைய மயிரைக் கட்டி இழுத்துட்டு வந்தோம்.

ஒரு நாள் திடீர்ன்னு நம்ம டக்ளசு.... வாயெல்லாம் பல்லோட, வாசல்ல வரும்போதே.... "எல்லோரும் மீட்டிங்குக்கு வாங்கன்னு..." சைகை செஞ்சாரு. ஆஹா பண்ணு, டீக்குக் கூட வழியில்லம டின்னு கட்டி அனுப்பப் போறாருன்னு, டர்ர்ர்... ஆகி எல்லோரும் மீட்டிங்குக்கு போனோம்.

"ஒரு பெரிய இனிப்பு வியாபாரி, அவருக்கு நிறைய கடைகள் இந்தியாவைத் தாண்டியும் வியாபித்திருக்கிறது, நாளைக்கு நம்ம கம்பெனிக்கு வர்றார், அவருக்கு ஒரு நல்ல கான்செப்ட் 'அட்' வேணுமாம்" என்றார் டக்லஸ்.

ஆஹா கொரவ கேளுத்தியே கிடைக்கலன்னு காத்திருந்த நமக்கு, சொறா சிக்கிடிச்சின்னு, என் பாஸு ரொம்ப 'பீல்' ஆயிட்டாரு. எல்லா டீம் மெம்பரையும் கூப்பிட்டு, "கான்செப்ட் பிடிங்கன்னு சொல்லிட்டு இது நமக்கு வாழ்வுன்னு நினைச்சி பண்ணுங்கன்னு, எப்படியும் பட்ஜெட் ஒன் 'சி'க்கு மேல போகும்னு" ஒரு பிட்டையும் போட்டுட்டுப் போயிட்டாரு. ஏன்னா அப்பத்தான் அந்த இனிப்பு நம்ம தமிழ் நாடு பூரா பேமஸ் ஆயட்டிருந்த நேரம். சீக்கு பிடிச்ச கோழி, சிலிக்கான்வேலில அலஞ்சா மாதிரி அவனவன், அவங்கவுங்க கற்பனை குதிரைய கூட்டிகிட்டு உலகம் பூரா சுத்துனானுங்க.

மறுநாள் இனிப்பு எங்க ஆபிஸ் வந்துது, "சொல்லுங்கண்ணே... என்ன பட்ஜெட்டு, என்ன மீடியம்னு கேட்க்க...." இனிப்பு "கான்செப்ட் கலக்கலா இருக்கோனும் அண்ணேன்னு...." ஆரம்பத்துலேயே அளப்பரிய அள்ளி வுட்டுது. டக்லஸ் "அதெல்லாம் நம்ம பயபுள்ளைங்க பின்னிடுவாங்கன்னு, நம்மளோட ரேஞ்சப் பாருங்கன்னு நம்ம பன்னு, பஞ்சு, பப்பர மிட்டாய் விளம்பரங்கள காட்டி நம்ம தெறமைய அள்ளி விட்டாரு.

இனிப்பு 'புல்'ளாயி, "சரிண்ணே...! நம்ம கடை விளம்பரங்கள இனிமே நீங்களே பண்ணலாம்ன்னு..." சொல்லிச்சி

நம்மாளு மறுபடியும் "அண்ணே....! என்ன பட்ஜெட்டு, என்ன மீடியம்னு கேட்க்க...."

நம்மாளு இனிப்பு சொன்ன பதிலுல.... இனிமா தின்னா மாதிரி ஆயிடிச்சி.

நாங்க டிவி, ரேடியோன்னு யோசிக்க...

"இனிப்பு சார் பளுன்னுல வேணும்னு..." சொல்ல, பொங்குன காவிரிய பொடி டப்பால அடக்கினாமாதிரி புஸ்ஸுன்னு போயிடிச்சி...


ஒன் 'சி'க்கு எதிர்பார்த்த, டக்லஸ் ஒரு க்ளாஸ் 'டி'க்கு கூட தேறாதுன்னு, ரொம்ப ஒடிஞ்சு போயிட்டாரு. இருந்தாலும் நாங்க அதுலேயும் எங்க முழு தேரமயக் காட்டி சிறந்த விளம்பரமாத் தான் செஞ்சோம். ;

அலட்டலா வர்து அலகிப் போட்டி

அல்லார்க்கும் வன்கம்பா

மத்தாநாள் காத்தால ஏதோ மிஸ் உநிவெர்சாமே எங்கேயோ பஹாமால நடக்குமாமே, டிவில காம்சிக்னான். நம்ம இந்தியா பொண்ணுகூட கல்ந்துக்கிதாமே!! ஆளு ரொம்போ சோக்காதான் கீது. அல்லா குஜிலியும் டூபீஸ போடுக்னு, ஒய்யாரமா இடுப்ப ஓடிச்சி, இன்னாமா நடந்து வர்துங்க, கிக்காதாம்பா கீது. ஒவ்வொரு நாட்டு பிகர் ஒன்னொன்னும், சும்மா அய்யர் கட ஆப்பிலாட்டும் அம்சமா கீதுங்க.

ஆனா நா தெரியாமத்தாங் கேட்டுக்குறேன்....?

ஆரோ அஞ்சாறு பேரு செலீக்ட் செய்யுற பிகர்தான் கேலிக்குது, அப்போ அத்தான் இந்த அண்டத்திலேயே அலகின்னு ஆயிடுமா....?

அலகின்னு எத்த வச்சி செலீக்ட் செய்யிராங்கோ...? உனக்கு அலகுனு தெர்றது, என்க்கு தெரியாது. அறிவ, தெறமையா வச்சித்தான் செலீக்ட் செய்யிராங்கோன்னா..... ராகெட் உட்ட கல்பனா சாவ்லா, கிராம விடிவெள்ளி சின்னத்தாயி மாதிரி ஆளுக்குத்தான் தர்னும்.

இந்த போட்டில கலந்துகிட்ட பிகருங்க மட்டும்தான் அலகா....? ஊர்ல எவ்ளோ அலகான, அறிவான நிறையா அம்மனிங்கோ வெளியே தெரியாமலே கன்னாலம் காட்சின்னு செட்டில் ஆவுராங்கோ....

இர்ந்தாலும் நாளைக்கு காலையில, இத்த பாக்காம வுடக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டேன்பா, என்ன நம்ம ஊட்ள எயுந்துக்காம இர்கோனும், அல்லாங்காட்டி செவுலு பிகில் ஊதிக்கும். என்ன இர்ந்தாலும் எனக்கு நம்ம ஊட்டுக்காரிதாம்பா நமக்கு அலகு.
-------X--------X--------
ஜஸ்வந்த் சிங்கும் வெளிய போயிட்டாரு... இவ்வளோ நாள் இர்ந்த அப்போ சொல்லாம, நிறைய மேட்டர இப்போ அவுத்து வுடுறாரு, இதெல்லாம் சகஜம். என்ன நம்ம டிவி, பேப்பருக்கு வாயில கவ்வ பிஸ்கோத்துக்கு ஆச்சி இந்த மாதிரி மேட்டரு எல்லாம்.
-------X--------X--------
அத்வானியோட அள்ளக்கை கட்சில இர்ந்து அப்பீட் அயிட்டாரமிள்ள... ஆனது தப்பில்ல ஆனா அதுக்கு அந்தாள் சொன்ன சப்ப காராணம்தான் மேட்டரு.... அப்பீட் ஆனதுக்கு கட்சில இர்ந்த கொள்கைதான்னு சொல்லிக்னாறு. இதுக்கும் ஜஸ்வந்த் மேட்டருக்கும் சம்பந்தம் இல்லையாம்....?

அப்போ ஏம்பா இவ்வளோ நாளா அங்கே ஒன்டிக்க்னு இர்ந்தாராம்...? போங்கடா நீங்களும் உங்க கொள்கையும்.....

சரி நம்ம போயப்பப் பாப்போம்....! வர்ட்டா.....! ;

இடைத் தேர்தல் வெற்றி!!!!


வான வேடிக்கைகள்......
வாய் நிறைய இனிப்புகள்.

அண்ணன் வெற்றியை.......
அள்ளக் கைகள் கொண்டாடுகிறார்கள்.

சரக்கும், சைட்டிஸ்ஸும்....
சக்க போடு போடும்

உச்சுக் கொட்டி சாப்பிட்டவன்,
உப்பிட்டவரை, உயர்வாய் பேசுவான்

மறத்தமிழன் நாம,
மல்லாக்க தூங்கயில....
மலை மலையாய் கொள்ளைபோகுது,
மயிர் போனால் என்ன.....
;

கூட்டா சேர்ந்து நாட்ட......

அல்லார்க்கும் வன்கம்பா!!!

ரொம்ப நாளா ஒடம்பு பேஜார் பண்ணதுல, அண்ணாத்தைய பாக்க முட்யாமப் பூடுச்சு, அதான் வர்ல, இன்மே அடிக்கடி வரேந்பா. ப்ளு, க்ளுன்னு டர்ர்ர்... ஆயிடுச்சி நம்ம வூட்ல, அப்பல நம்ம ராயப்பேட்டா ஆஸ்பிடல்ல, உன்க்கு ஒன்னும் இல்லன்னு சொல்டாங்கபா....
*** X *** X***
நம்ம ஊட்டாண்ட கீற டில்லிபாபுக்கு வர்ஷகண்கா 2300 ரூபாதான் சம்பளம், பாவம் அவன் பொண்டாட்டியும் நாலு வீட்ல வேல பாத்து, குடும்பத்த தல்லுதுங்க. ஆனா... MLAக்கு எல்லாம் சம்பளம் ஏத்திட்டாங்க, அதில்லாம அவங்களுக்கு இரண்டரை கிரவுண்டு நிலம் வேற தர்றாங்களாம்பா....

நாந் தெரியாமத்தான் கேகுறேந், இவங்கல்லாம் இப்போ குந்த குட்ச இல்லாமையா கீறாங்கோ...?, அப்போ எலக்சன் சொல்லோ ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம் குடுத்தது ஆரு துட்டு.... ?
*** X *** X***
ரொம்போ நேக்கா வள்ளுவர் செலைய கர்நாடகாவிலும், கன்னட கவிஞர் சர்வக்ஞர் செலைய தமிழ்நாட்டிலும் திறந்த, ரெண்டு மாநில முதல் அமைச்சர்களும், ரொம்ப பிரெண்ட்ஸா கீறா மாதிரி காட்டிக்கிறவங்க. ஏந் காவேரிய நமக்கு கொண்டு வரக் கூடாது?

ஆனா கர்நாடகாவில மல பேஞ்சா மட்டும், ஆரும் சொல்லாம தெறந்து வுட்டுருவாங்கோ, இல்லாங்காட்டி அவங்க அண வோடஞ்சு ஊருக்குள்ள தண்ணி வந்துரும்னு பயம்.
*** X *** X***
ஏதோ ஸ்விஸ் பேங்காமே அங்கே இருக்க பணத்துல, இந்தியர்களோட பணம்தான் ரொம்ப அதிகமாமே...?!, பணம் போட்டவன் சினிமாகாரன், கிரிகெட் விளையாடுறவன், பெரிய பெரிய முதலாளிங்க, அயோக்கிய அரசியல்வாதிங்க, அப்படி இருக்கோ சொல்லோ..., இது அவன் வயித்துக்கு மீறிய பணம், அத்த திரும்ப கொண்டாந்தா என்ன?

அமா இப்போ அரசாங்கம் அந்த பணத்த ஒழுங்கா காட்டி வரி கட்டிட்டா, நீங்க அத முறையா ஊஸ் பண்ணலாம், அல்லாங்காட்டி அரசே அத மொத்தத்தையும் எடுத்துக்கும்னு சொன்னா, அல்லாரும் அத்திரிபுத்திரி ஆகி வரி கட்டிட மாட்டாங்கோ? ஆனா அத்த ஆரு செய்யுறது....? செய்ய வேண்டிய அரசியல் வாதிங்கோ முக்காவாசி பேர் அதில பணம் போட்டிருக்கான்...?

அல்லாரும் கூட்டா சேர்ந்து நாட்ட மொட்ட அடிக்கிறாங்க...

அட நம்ம நிலமைய சொல்லு, பத்து நாளா பொயப்புக்கு போகாம ஊட்ல குந்திக்கீனு இர்ந்தா ஊட்டுக்காரி கொமட்லயே குத்துறா...

அதுசரி பல்லு கீரவேந், பகோடா துண்ணுறான், பரதேசி நாம பண்ணு வாங்க காசில்லாம அல்லாட வேண்டியதுதான்...

சரிப்பா போயி நம்ம போயப்பப் பாப்போம்....! ;

கொடுத்து வச்சிருக்கனும்....!

வேலையில் மூழ்கிப் போனால்...., நேரம் போவதே தெரியவில்லை, அலைபேசி அதிர்வில், சுயநினைவு வந்து, யார் மிஸ்ஸுட் கால் கொடுத்ததுன்னு பார்த்தேன், கோட்டி (கோட்டீஸ்வரனின் சுருக்கமே!). தொலைபேசியை எடுத்து நம்பர் சுற்றி "ஹலோ...."
"மச்சான் எனக்கு துபாயில் வேலை செய்ய விசா வந்திருக்கு, நீ கொஞ்சம் அவரசமா வர்றீயா?"

"இல்ல கோட்டி, நா வர லேட் ஆயிடும், வேணும்னா நைட் 9 மணிக்கு மேல் வரவா?"

"சரி மச்சான், நான் என் வீட்ல வெயிட் பண்ணுறேன்"

"ஓகேடா நா நைட் 9 மணிக்கு வர்றேன்"

கோட்டி ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் எம்ராய்டரி போடும் வேலை செய்கிறான். என் பால்யகால நண்பன். ஒன்றாகவே ஒரே தெருவில் விளையாடினோம். படிப்பு ஏறாததினால் அவன் மூன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டான். படிப்பில்லையே தவிர, நன்றாக எம்ராய்டரி வேலை செய்வான். அவனே படம் வரைந்து, எம்ராய்டரி போடுவான். படம் வரைவதிலே நன்கு தேர்ந்தவன்போல் இருந்தான்.
"மச்சான் நீ தனியா இங்கயே நாலு எம்ராய்டரி மெஷினப் போட்டு, நல்லா சம்பாதிக்கலாம்...." என்று சொன்னோம். ஆனால் அவன் அந்த எக்ஸ்போர்ட் கம்பெனியை விட்டு வர மாட்டேன் என்று சொன்னான்.

"என்னடா உன் முதலாளி விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சுன்னு....!" சொன்னால்,

"எனக்கு என்னம்மோ பிடிச்சிருக்கு மச்சி....!" என்பான். சொந்த மாமா மகளையே அமம்மா (அம்மாவின் அம்மா) வற்புறுத்தலின் பேரில் கல்யாணம் பண்ணினான். அவனுக்கு அந்த பெண் பிடிக்காது, ஏன் என்றால்....? பெண் கொஞ்சம் கறுப்பாக இருக்கும். கல்யாணம் ஆகி, அவன் அப்பாவால் தனிக் குடித்தனம் வைக்கப் பட்டான். அவன் சரிவர சம்பளம் வீட்டுக்குத் தராததினால்...., அவனுடைய அமம்மா தன் பேத்திக்கும், பேரனுக்கும் துணையாக அமர்த்தப் பட்டாள். அம்மம்மா பென்ஷனை வைத்து குடும்பம் ஓடியது.

"மச்சி.... சம்பாதிப்பதை எல்லாம் என்னடா செய்வன்னு" கேட்டால்

"அப்படியே செலவாயிடுதுன்னு" சொல்லுவான்.

"அப்படி என்னடா உனக்கு செலவுன்னு கேட்டால்?"

"என்னடா செய்யிறதுன்னு" ரொம்ப சாதரணமா பதில் சொல்லுவான். அவங்க அப்பா அவனை தனிக் குடித்தனம் வைத்ததே, அவன் ஒழுங்கா பணம் தரவில்லை என்றுதான். பின் நானும் அவன் அண்ணனும் அவனுக்கு புத்திமதி சொல்லி, வீட்டுக்கு பணம் தரச் சொன்னோம். கொஞ்ச நாள் நன்றாகப் போனது. ஒரு நாள் கூட அப்பெண்ணை அவன் வெளியில் கூட்டிக் கொண்டு செல்வதை நாங்கள் பார்த்ததில்லை. நாங்கள் நண்பர்களாகச் சேர்ந்து ஏதாவது பேமிலி பயணம் ஏற்பாடு செய்தாலும், அவன் தனியாகவே வருவது தொடர்ந்தது. கேட்டால் "அவளுக்கு உடம்பு சரியில்லை, அது இதுன்னு" ஏதாவது சாக்கு சொல்வதே வழக்கம்.

இரண்டு வருடம் கழித்து மனைவி உண்டாகி, பின் கலைந்தது, இதுபோல் மேலும் இரண்டு முறை நடந்தது, பின் நான்கு வருடம் கழித்து ஒரு ஆண் குழ்ந்தை பிறந்தது. என் வேலை விசயமாக, நான் அடிக்கடி வெளிஊர்களுக்குச் செல்வதாலும், வேலை பளு அதிகமானதாலும், சந்திப்புகள் ரொம்ப அரிதாகவே நடைபெற்றது. குழந்தை குட்டிகள் என்றானபின் நட்பென்பது இரண்டாம் பட்சமே.

கொஞ்ச நாளாகவே வெளிநாடு போக முயற்சி செய்துக் கொண்டிருந்தான் என்று கேள்விப் பட்டேன், இன்றுதான் அது உறுதியானது. வேக வேகமாக எல்லா வேலையும் பார்த்து, முடியாததை திங்கள் அன்று பார்த்துக் கொள்ளலாம், என்று எடுத்து வைத்து விட்டு கிளம்ப எத்தனித்த போது, மணி 9.30ரையை தாண்டி இருந்தது. கிளம்புமுன் கோட்டிக்கு, போன் செய்தேன்...

"மச்சி எங்கே இருக்கே?"

"நான் வீட்டிலேதான் இருக்கேன்" என்றான்.

"சரிடா நா இன்னும் அரைமணி நேரத்தில் அங்கிருப்பேன்" என்று சொல்லி என் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். அவன் வீடு தெரியும் என்றாலும், பல மாதங்கள் கழித்து போவதனால், சற்று தடுமாறி தடுமாறி வீடு கண்டுபிடித்து போனேன்.
வீட்டில் அவன், மனைவி, பாட்டி மற்றும் அவன் மாமா இருந்தார்கள். என்ன விசா என்று என்னிடம் பார்க்க கொடுத்தார்கள்.

"லேபர்ன்னுதான் போட்டிருக்கு, மற்றபடி வேறு விவரம் ஏதுமில்லைன்னு" சொன்னேன்.

"இது இவர் கூட வேலை செய்தவன்தான் அனுப்பினான், எம்ராய்டரி வேலை என்றுதான் சொன்னான்" என்றார் அவன் மாமனார்.

"சரி, இப்போ என்ன்ன செய்வதா உத்தேசம்?" என்றேன்.

"போகப் போகிறேன்" என்றான்

"ரொம்ப சந்தோசம், அப்ப ஆகா வேண்டிய காரியத்தை பார்க்க வேண்டியதுதானேன்னு" கேட்டேன்.

"அதான் உன்னை இங்கே கூப்பிட்டிருக்கிரோம்ன்னு" சொன்னான்.

அதற்குள் அவன் பாட்டி "இங்கே இருந்து அவன் ஒன்னும் கழட்டப் போறதில்லை. அவன் ஊருக்குப் போவதுதான் சரி, வீட்டுக்கும் சரியா பணம் தராம, சேர்வார் சகவாசம் சரி இல்லாம, ரொம்ப அட்டுழியம் பண்ணுறான். இந்த பேச்ச ஆரம்பிச்ச நாளில் இருந்து, வேலைக்குப் போவதே இல்லை. ஏற்கனவே ஒரு ஆறு மாசமாக, சரியவே வேலைக்குப் போக மாட்டான், ஒரு நாள் போனால், ரெண்டு நாள் லீவ் எடுப்பான். ஆனால் இந்த மூணு மாசமாக சுத்தமா வேலைக்கே போகவில்லை"

"நீ சும்மா இரு" இது கோட்டி.

"இல்ல... அவர் கொஞ்ச நாள் வெளி நாட்டுக்குப் போய் வருவதுதான் சரி!" என்றார் அவன் மாமனார்.

"சரி எப்போ டிக்கெட் போடப் போறே"

"இல்ல அது வந்து.... அதுக்குத்தான் உன்ன கூப்பிட்டிருக்கோம்...." என்றான் மென்று முழுங்கி.

"ஏய் இதில் என்ன தயக்கம் நான் பண உதவி பண்ணுறேன்" என்றேன்.
அவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய சந்தோசம் தெரிந்தது. விடை பெற்று வெளியில் வந்தோம், நங்கள் இருவரும்.

"ரொம்ப தேங்க்ஸ்டா என்றான்"

"இதில் என்னடா தேங்க்ஸ் வேண்டி கிடக்கு, நீ என் நண்பன், உனக்கு ஒரு நல்லது நடக்க நான் உதுவதில் எனக்கு ரொம்ப சந்தோசம்" என்றேன். மறுநாள் நாங்கள் இருவரும் அவனுக்கு, ஒரு டிரவெல்சில் டிக்கெட் புக் பண்ணினோம். சரியாக மூன்றாவது நாளில் பயணம். எல்லா ஏற்பாடும் பரபரப்பாக நடந்தது.

அன்றிலிருந்து அவனுடைய அஃபிஷியல் ஸ்பான்சராக நான் மாறினேன்.

"மச்சி ஒரு பத்தாயிரம் இருந்தால்....., வீட்டுக்கு செலவுக்குக் கொடுப்பேன்" என்றான் நானும் அவன் திருந்தியத்தில், ரொம்ப புளங்காகிதம் அடைந்து, கொடுத்தேன். நேராக அவன் பாட்டியிடம் போய் அந்த பணத்தைக் கொடுத்து விட்டு வந்தான்.

"ரொம்ப சந்தோசம்டா.... நீ இப்படி பொறுப்போட இருப்பது" என்றேன் ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வர, இருவரும் அப்படியே திநகர் சென்றோம். அவனுக்கு தேவையானதை போத்தீசில் வாங்கினான்.

"மச்சி ஜட்டி பனியன் எடுக்கனும்டா" என்றான் "வாடா ப்ளட்பாமில் எடுக்கலாம்" என்று சொன்னதுக்கு,

"இல்லடா ....,வெளி நாடெல்லாம் போறோம், கம்பெனி ஐட்டமே எடுக்கலாம்" என்றான்.

"அது சரி, ஒம்பணமா இருந்தால் பரவாயில்ல, இது என் பணமாச்சே....!"

"எல்லாத்துக்கும் கணக்கு வச்சுக்கோ மச்சி, போனதும் ரியாலில் அனுப்பிடுறேன்னு" சொன்னான்.

"வக்கனையா பேச மட்டும் கத்துக்கிட்ட".

புலியே புள்ளட்லதான் போகுது, ஆனால்... எலி ஏரோப்ளேன் கேட்ட கதையாக, எல்லாம் மிக உயர்ந்த ரக, பிராண்டட் பொருட்களையே வாங்கினான். இது காலுக்கு காதில (காதி க்ராப்ட்) கட்ட செருப்பு, ஆறுநூரில் வாங்கும் வரை தொடர்ந்தது. இரவு பத்து மணி ஆகிவிட்டதனால் கீதாஞ்சலி போய் சாப்பிட்டோம். எல்லா பில்லும் சேர்த்து பதினைந்தாயிரம் வந்தது சரி நண்பனுக்குத்தான்னு அவனிடம் பில்லை நீட்டினால்,
"எனக்கு என்ன மச்சி தெரியும், நீ எவ்வளவு சொல்றயோ, அத தரப் போறேன்னு" ரொம்ப கஸுவலாக சொன்னான்.

நட்புக்கு விலையேதுன்னு என்னை நானே தேற்றிக் கொண்டு. அவன் வீடு நோக்கி வண்டியை ஓட்டினேன்.

"மச்சி என்னடா உன் பாட்டி, நீ ஆறு மாசமாவே சரியா வேலைக்குப் போவதில்லைன்னு சொல்றாங்க"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி, அது அப்படித்தான் நீ கண்டுக்காதேன்னு" சொல்லி என் வாயை அடைத்தான். மறுநாள் திங்கள், நான் வேலைக்குப் போக வேண்டி இருந்ததால்,

"மச்சி நான் சயந்திரம் வந்து உன்னைப் பார்க்கிறேன்னு" சொல்லி விட்டு விடை பெற்றேன்.

மறுநாள் அவன் பொருட்களைப் பேக் பண்ணி வைக்க, புதிதாக சாம்சோநைட் பெட்டி அவன் வீட்டில் இருந்தது.

"என்ன மச்சி, ஏது இதுன்னு?" கேட்டேன்.

"இப்போதான் வாங்கினேன், மூவாயிரம்....!" என்றான்.

"என்னடா அங்கே நல்ல நல்ல பெட்டி எல்லாம் கிடைக்குமே, இப்போ நீ ஒரு அட்ட பெட்டியில், கட்டிக் கொண்டு போனால், ஊரில் இருந்து திரும்பி வரும் போது நல்ல பெட்டி வாங்கி வரலாமிள்ளன்னு..."

"அட போ மச்சி, அட்ட பெட்டியெல்லாம் கெத்தா இருக்காது...". அடுத்தவன் காசுன்னா.... ஆயிரம் யானை வாங்குவாங்க, போலன்னு நினைச்சுக்கிட்டு பேக் பண்ணினோம்.

"மச்சி சொல்ல மறந்துட்டேனே, டிக்கெட் இன்னும் வரலைடா"

"என்னடா.....? இது நாளைக்கு ஃப்ளைட் வச்சுக்கிட்டு, இன்னும் டிக்கெட் வரலைன்னு" சொல்லுறன்னு அதிர்ச்சியாக் கேட்டா....

"என் ஃப்ரண்ட்தான், கலையில ஏபோர்டில் வைத்து தருவதாகச் சொன்னான்"

"என்னமோடா, எனக்கு இது சரியாப் படலைன்னு" சொல்லும்போதே அவன் பாட்டி

"என்னப்பா... நீ அபசகுனமாச் சொல்லுற"

"இல்லப் பாட்டி, இது பஸ் டிக்கெட் மாதிரி இல்ல, டிக்கெட் கன்பார்ம் ஆகலைன்னா.... ஏபோர்டில் உள்ளேயே விட மாட்டாங்க"

"அதெல்லாம் அவனுக்குத் தெரியும், நீ இப்படி அபசகுனமாகப் பேசாதேன்னு" சொல்லுச்சு. சரி நம்ம நாக்குல சனின்னு நானும் கம்னு இருதுட்டேன்.

பேக்கிங் முடிய இரவு பதினோரு மணி ஆகிவிட்டது.

"சரி மச்சி, நான் நாளைக்கு காலையில் வரேன்னு" சொல்லிட்டு நான் என் வீடு வந்தேன்.

மறு நாள் அதிகாலையில் போனால் அவன் வீட்டில் எக்கச்சக்க ஜனம், முன்னூறு சதுரடி வீட்டில்... ஐம்பதருபது பேர், சரி முதல் முதல் போகிறான்னு எல்லோரும் வந்திருக்கிறாகள்ன்னு, நினைச்சுக்கிட்டு நான் வெளியிலேயே நின்னுக் கொண்டிருந்தேன். அவன் கம்பெனி நண்பர் ஒருவனும் என்னுடன் இருந்தான்.

"சார்...! இப்போ ஏபோர்ட் சான்ஸ்தான் எடுக்கப் போறான், டிசெக்ட் கன்பார்ம் ஆகலைன்னு" சொன்னார்

"என்ன சார்....? இப்படி சொல்றீங்க, நேத்து ராத்திரி கூட கேட்டேனே, கலையில் டிக்கெட் வந்துவிடும்னு சொன்னானேன்னு"

"இது அவனுக்கு முந்தா நாளே தெரியுமேன்னு" சொன்னார்.

எதோ நெருடவே....., அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், அமைதி காத்தேன். சரியாக ஐந்து மணிக்கு ரெண்டு மாஸ்தா வேன் வந்தது, கூட்டம் முண்டியடித்து ஏற, நானும் அந்த நண்பரும் என் பைக்கில் போவதாக முடிவானது. வண்டியில் ஏறும் முன்....

"மச்சி, ஒரு ஆயிரம் ரூபா இருக்குமான்னு....?" கேட்டான்

"சரி மச்சி, நான் ATMஇல் எடுத்துட்டு, ஏர்போர்டில் வந்து தருகிறேன்னு" சொன்னேன். ஏர்போர்டில் போய் தேவுடு காத்துதான் மிச்சம். அன்று அவனுக்கு இடமில்லை. திரும்பி வரும் வழியில், என் ட்ரவெல்ஸில் மருநாளுக்குண்டான டிக்கெட் புக் பண்ணி கொடுத்தேன்.

"உன்ன மாதிரி ஃப்ரண்ட் கிடைக்க, நான் கொடுத்து வைத்திருக்கனும்டா....."

"ஏய் ஃப்ரண்ட்ஷிப்பில், என்ன இது பார்மாலிடீஸ்" என்றேன்

"இல்லடா.... உனக்கு ரொம்ப பெரிய மனசுன்னு" சொன்னான்.
ஆனால் அவன் என் டிக்கெட்டை யூஸ் பண்ணாமலே, அவனுடைய பழைய டிக்கெட்டிலேயே..... மறுநாள் கன்பார்ம் பண்ணி வைத்தான்.

"அப்ப ஏண்டா....? இந்த டிக்கெட்ன்னு?" கேட்டதுக்கு

"ஒரு சேஃப்டிக்கு...." என்று சொன்னான். மறுநாளும் அதே அளவு கூட்டத்தோட ஏர்போர்ட் சென்றோம். இந்த முறை விமானம், அவன் மானத்தை ஏற்றாமல், அவனை ஏற்றிச் சென்றது. மாலை ஏதும் போன் பண்ணினான்னா என்று விசாரிக்க, அவன் வீட்டுக்குச் சென்றேன். அவன் மாமனார்.....

"போன் பன்னாருப்பா, நல்லபடியாப் போய் சேர்ந்ததாகச் சொல்லச் சொன்னார்" என்றார்.

"எனக்கு போன் பண்ணவில்லைன்னு...." சொன்னதுக்கு

"எல்லாத்துக்கும் எதுக்கு போன் பண்ணனும்னு, நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்றார். சரி நம் தேவை முடிந்தது அதனால்தான் வீசப் படுகிறோம்னு அங்கிருந்து கிளம்பிட்டேன்.

அடுத்தநாள் அவன் மாமனார் எனக்கு போன் பண்ணினார். "நீங்க கொஞ்சம் அவசரமா வீட்டுக்கு வர முடியுமா?"

"எதுக்கு சார்....?"

"இல்ல வீட்ல, அம்மா ரொம்ப கவலையா இருக்காங்க" என்றார் சரி என்று ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டு போனால்..... எல்லோரும் ஒரே அழுகைக் கூட்டமாக இருந்தது. அங்கே அவன் கம்பெனி நண்பரும் இருந்தார். சரி முதல் முதல் வெளி நாட்டுப் பயணம், அதனால்தான் இப்படின்னு அமைதி காத்தேன்.

கோட்டி மாமனார் "என்னங்க இது ஏதோ பாலைவனத்தில் கொண்டுபோய் விட்டுட்டாங்களாம்...., சாப்பாடு ரொம்ப கஷ்டமாம், அதனால திரும்பி வரப் போறேன்னு சொல்றார்ன்னு" சொன்னார்

"ஏங்க.... இதெல்லாம் சகஜம், வலைகுடாவே பாலைவனம்தான், கொஞ்சநாள் பழ்கிட்டுதுன்னா சரியாகிவிடும்னு" சொன்னேன்.

"இல்லங்க.... அங்கே போய் அவர் ஒன்னும் அப்படி கஷ்டப் பட வேண்டாம். நாங்களே.... அவர திரும்ப வர சொல்லி விட்டோம்" என்றார்

"என்னங்க இது கொஞ்சங்கூட அக்கறையே இல்லாம பேசுறீங்க, அப்போ அவன் வாங்கிப் போன கடத்துகெல்லாம் யார்....? பதில் சொல்றது"

"அதுக்கு அவர அப்படி தவிக்க விட்டு, நாங்க நல்ல இருக்க வேண்டாம்" என்றார்.

"சரி உங்களுக்கு எது விருப்பமோ அதச் செய்யுங்க" என்று சொல்லி நான் கிளம்பி வந்து விட்டேன். அந்த நண்பரும் என்னுடனே கிளம்பி விட்டார்.

"எப்படியோ போய்ட்டான்னு.... பார்த்தா, இப்படி ஒரு குண்டத் தூக்கி போடுறாங்களே....! அப்ப நான் கொடுத்த பணம் என்னாகும்னு தெரியலையேன்னு" அவர் சொன்னார்.

"என்ன சார் நீங்களும் பணம் கொடுத்தீங்களா....?"

"ஆமா சார் இருபதாயிரம்" என்றார் அவர்.

"என்ன சார் நானும் ஐம்பதாயிரத்துக்கு மேல் கொடுத்திருப்பேன்" என்றேன்.

"ஐய்யையோ என்ன சார் இவ்வளவு தொகை கொடுத்திருக்கிறீங்க, ஆனா அவன் மாமனார் என்னிடம் நான்தான் அவருக்கு தேவையானப் பணத்தை, புரட்டிக் கொடுத்தேன். என்று சொல்கிறாரேன்னு" அதிர்ச்சியாக் கேட்டார்

"அவர் எப்படி சொன்னால் என்ன...? நான் அவன நம்பித்தான் பணம் கொடுத்தேன்" என்றேன்.

"இருந்தாலும்..... அவன் இப்போது திரும்பி வந்தால்.... எப்படி நமக்கு பணத்த திருப்பித் தருவான்....?" என்றார்.

"பார்க்கலாம் சார்ன்னு...." நான் ரொம்ப கவலையா வீட்டுக்கு வந்தேன். பின் நான் என் வேலையில் ரொம்ப பிஸியானதால்..... ஒரு மாதம் உலகம் சுற்றுகிறதான்னு....? கூடத் தெரியாமல் இருந்தேன். ஒரு நாள் ஏதேச்சையாய் கோட்டி நண்பரை கடைத் தெருவில் பார்த்தேன்.

"என்ன சார் எப்படி இருக்கீங்க?" என்று கேட்டதுக்கு

"நல்லா இருக்கேன் சார். கோட்டி ஊரிலிருந்து வந்துட்டான் சார்" என்றார்

"என்ன வந்துட்டானா?"

"ஆமா உங்களுக்கு தெரியாதா?"

"இல்ல சார்" என்றேன் அப்பாவியாய்.

"ஆமா சார் வந்து ஒரு வாரம் ஆகப் போகிறது."

"ஏன் சார் வந்தானாம்..." என்றேன்

"அது சார் அந்த கவிதா இல்ல?"

"எந்த கவிதா...?"

"அதான் சார்... அவன் கீப்பா வச்சிருந்தானே....! அந்த கவிதா"

"கீப்பா....? எப்போ எங்கே?"

"என்ன சார் உங்களுக்கு, விசயமே தெரியாதா...? அவன் பழைய எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்யும் போது, அவள் அவன் கூட வேலை செய்தாள், அப்படியே பழக்கமாகிப் போய், இது கள்ளத் தொடர்பா ரொம்ப வருஷம் முன்னாடி இருந்தே தொடர்ந்து வருகிறது. அவளுக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு குழ்ந்தை இருக்கு. இருந்தாலும் இவன் கூட அவ தொடர்பை வச்சுக்கிட்டா."

"என்ன சார்....! எனக்கு இது நாள் வரை தெரியாதே?"

"போங்க சார்...! நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க" என்றார்.
நேராக அவன் வீட்டுக்கு போனேன், அவன் வீட்டில் இல்லை, அவன் மனைவி மட்டும்தான் இருந்தது.

"அண்ணே உங்கள மாதிரி ஃப்ரண்ட் கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்ணே, ஒரு ஆயிரம் ரூபா இருந்தா.....". ;

ஆல்பர்ட்டில் லெக்கு

லெக்கு மற்றும் சகாக்களுடன் ஆல்பர்ட்டில் படம் பார்க்கச் சென்றிருந்தோம். நம்ம ராஜா வழியில ஒரு டாஸ்க் மார்க் கடையைப் பார்த்ததும், கம்பத்தைப் பார்த்த நாய் போல பம்மினான். சரின்னு எல்லோரும் உள்ளே போனோம். ஒரு மானங்கெட்ட மானிட்டர் ஹாப் வாங்கி நாலு பேரு அடிக்கலாம்னு பிளான். மொடாக் குடியர்களுக்கு மப்பு ஏறனும்னா மானிடர்தான் சரி, பிபி என்றால் எல்லோரும் பத்தவில்லை என்று மேலும் பிபி ஏத்துவார்கள்.

லெக்குக்கு பீஃப் என்றால்.... நாக்கை நல்லா நாளின்ச்க்கு நீட்டுவார். அவருக்கு எப்போதுமே பீஃப்தான் சரக்கு, சரக்கு வெறும் கீப்தான். நாக்கில் சரக்கை நக்கினாலே வாய் தஞ்சாவூர் வரை தாறுமாறாகப் போகும். ஆகையால் அவரை எப்போதுமே நாங்கள் லிமிட்டில் வைப்போம்.

கொஞ்சம் அசட்டையா இருந்ததுல அதிகமா சரக்கடிச்சிட்டாரு லெக்கு. ஆஹா என்ன நடக்கப் போகுதோ, நடப்பதெல்லாம் நாராயணன் சித்தம்னு, நடையக் கட்டினோம் ஆல்பர்ட்டுக்கு. ஆல்பர்ட்டுக்குதான் போனோம், ஆனால் நம்ம கிரகம் அங்கே டிக்கட் கிடைக்கவில்லை, சரி நம்ம மணிரத்தினம் படமாச்சேன்னு பேபிக்கு விரைந்தோம். அப்பவே லெக்கோட அட்ராசிடி ஆரம்பாமாயிடிச்சி.

நா இந்த நாதாரிப் படத்திற்கு வர மாட்டேன். அவருக்கு நச்சுனு ஹீரோயின் இருக்கணும், இல்லன்னா கலக்கலான சண்டைகள் இருக்கணும். இது ரெண்டும் நம்ம மணி படத்தில் இருக்காது. கேட்டையே கெட்டியாப் பிடிச்சிக்கிட்டு அடம் பண்ணாரு. என்னடா இது ஆரம்பத்திலேயே அலும்பு தாங்கலைன்னு அவர அணைச்சி அள்ளிப் போட்டுட்டுப் போய் உள்ளே உட்கார்ந்தா.... அட்டகாசமான ஆரம்பம் அம்பேல் ஆயிடிச்சி படத்துல.

அப்படியே ஹாப் லைட் வெளிச்சத்துல, ஆளாளுக்கு கிடைத்த இடத்தில் அமர்ந்தோம். நம்ம லெக்கு ஒரு ஆன்ட்டி மடியில உக்காரப் போய்....., அதிரிபுதியாப் போயிடிச்சி. மன்னிப்பு கேட்டு, மாமிய மடக்கி, உட்கார்ந்தோம். ஏற்கனவே அவருக்கு புடிக்காதப் படத்துக்குப் வந்ததில்.... பொறிப் போறியா துப்புன லெக்கு, ஆன்ட்டி மேட்டர்ல கடுப்பாயி, அக்கினியா அள்ளிப் போடுறாரு. அவர் பக்கம் திரும்பினாத்தானே அக்கினின்னு ஆன் ஸ்க்ரீனைப் பார்த்தேன்.

இன்டெர்வெல்லுக்கு முன்னாடி திரும்பி பார்த்தா ஆளக் காணோம்.... அடி வயிற்றில் அமிலம் சுரக்க, அலர்ட்ஆகி வெளியே வந்தால்.... ஒரு ஆன்ட்டியோட சண்டை போடுறாரு, இனிமா குடிச்ச கொரங்கா என்ட்ரி ஆனா.... ஆன்ட்டி நம்மளையும் சேர்த்து அடிக்க வருது, என்னன்னு விசாரிச்சா, மப்பில் லெக்கு.... லேடிஸ் டாயிலேட்டில் போயிருக்காரு,

"தியேட்டர்ல என் மேல உக்கரும்போதே, சும்மா விட்டுட்டோம் இப்ப விட முடியாதுன்னு" ஆப் ஆவாம சவுண்ட் விடுது ஆன்ட்டி.

அதற்குள் ஆன்ட்டி புருசனும் அங்கே வர, கயித்துல தொங்குன எங்க மானம், கருடன் கொத்துன கிளியாட்டம் சும்மா கிர்ர்னு பறக்குது. ஸாரு சைலன்ட் ஆனாலும்..., ஆன்ட்டி சாந்தி ஆகவே இல்லை. அதற்குள் கூட்டம் கூடி விட, சப்பைக்கே சப்போர்ட்டா வர சனங்க, சந்தனம் கிடைத்தால் விடுமா... ஆளாளுக்கு அள்ளி மார் மேலும் தோள்மேலும் பூச, அத்தனையும் வாங்கிட்டு அடக்கமா நின்னாரு லெக்கு.

"சார்....ர், ஏதோ தெரியாம நடந்துடுச்சின்னு...."
நாசூக்கப் பேசி, அவங்கள அனுப்பிட்டு ஆசுவாசப்பட்டோம். எல்லாம் சுபமா முடிஞ்சிடுச்சின்னு எடத்த காலிபண்ணுற நேரத்துல.... இன்னொரு குடிமகன் லெக்கு கிட்ட வந்து, "எல்லாம் பத்துட்டப் போலன்னு....!!!" கேக்க அவனை அப்படியே அமுக்கி, ஆல்பர்ட்டுக்கு பாய் சொன்னோம். ;

குப்ப மேட்டரு....


ராக்கி சாவந்த் ஒரு பிட்டுப் பட நடிகை, (பிட்டுத் துணிப் போட்டு, பிட்டு பிட்டாக வடமொழிப் படங்களில் நடிப்பார்). இதில் இவர் ஓப்பனாக பேசுபவர் என்கிறப் பேர் வேறு. அவர் தனது மாப்பிள்ளையை நேற்று தேர்ந்தெடுத்தார் இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? இந்நிகழ்ச்சி நேரடியாக NDTV Imagine ஒளிபரப்பானது.

இவரை கட்டிக் கொள்ள ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் கடைசியாக மூன்றுப் பேரைத் தேர்ந்தெடுத்து, அதில் நேற்று எலேஷ் பருஜன்வாலாவைத் தேர்ந்தெடுத்தார். எலேஷ் கனடா வாழ் இந்தியர், அங்கே ஏதோ வியாபாரம் செய்துக் கொண்டிருந்தாராம் (ஆமா இந்த மாதிரி நடிகைகளைக் கட்டிக் கொள்ளவென்று.... அவதாரமெடுத்திருக்கும் எல்லோரும், ஏதோவொரு வியாபாரம் செய்வார்கள்). வெத்துப்பட்டி விப்பவன், வெங்காயம் விப்பவன், எல்லோரும் வியாபாரிதானே.

இந்த கருமத்தையெல்லாம் ஒளிபரப்பி தங்கள் TRB ரேட்டிங்கை அதிகரிக்கச் செய்யும் யுக்க்திதான் நெருடலாக இருக்கிறது. விட்டால் அவர்களது படுக்கையறைக் காட்சிகளைக் கூட ஒளிபரப்பி, தங்கள் TRB ரேட்டிங்கை அதிகரிப்பார்கள். இதுவே ஒரு சாலையோர பெண்ணின் சுயம்வரமென்றால்.... ஒளிபரப்பி இருப்பார்களா? மாட்டார்கள்...! ஏன் என்றால் ஒரு பிரபல முகமென்றால்.... நெற்றிப் பொட்டில் இருந்து, உள்ளாடை வரை விளம்பரங்கள் குவியும். பணம் அள்ளலாம், என்கிற மலிவான வியாபார நோக்கமே. நாட்டுக்கு நல்லது செய்யாவிடினும் சடுதியில் தள்ளி விடாமல் இருந்தால் அதுவே மிகப் பெரும் தேசத் தொண்டாகும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
ஆகஸ்ட் 5, நண்பர்கள் தினமாம். இதுபோல்.... காதலர் தினம், அன்னையர் தினம், இத்யாதி இத்யாதி... ஹோட்டல், காபி ஷாப்புகள் மிகுந்துவிட்ட இந்நாளில்... இதெல்லாம் வியாபார நோக்கத்திலேயே எய்யப் படுகிறது. ஊடகங்களும் இதை வைத்து பணம் பண்ணுகின்றன. நல்ல நட்புக்கு எல்லா நாளும் நந்நாளாம், அதுபோலவே மற்றைய தினங்களுக்கும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடித்த லக் ஹிந்திப் படம் பார்த்தேன், சூதாட்டம்தான் கதைக் களம், ஆனால் இது மனிதர்களை வைத்து ஆடும் சூதாட்டம். மாடுகளை வைத்தே..... ஆடக்கூடாதெனும்போது, மனிதர்களை வைத்து ஆடுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரச்சனைக்குரிய நீச்சல் காட்சி, கதைக்கு மிக அவசியம் மென்றார் ஸ்ருதி, ஆனால்.... அது கதைக்கு கொஞ்சம்கூட அவசியப் படவில்லை. சீரோ(Zero) ஹிப் சைஸ்சில் மிக அழஅகாகவே இருக்கிறார் ஸ்ருதி. மற்றபடி சொல்லிக் கொள்ள ஒன்னும் இல்லை. குட்டி பதினாறடி பாய்ந்திருக்கிறது.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
மைக்ரோஸாப்ட் மற்றும் யாஹூவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்படி யாஹூ மைக்ரோஸாப்டின் பிங்(Bing) தேடுபொறியை உபயோகிக்கும், அதுபோலவே மைக்ரோஸாப்ட், யாஹூ தளங்களில் தனது விளம்பரங்களை வெளியிடும். அமெரிக்காவில் இன்டர்நெட் விளம்பரங்களில் வெறும் 25% மட்டுமே இந்த இரு நிறுவனகள் வைத்திருக்கின்றன. ஆனால் இவர்களின் போட்டி நிறுவனமான கூகிள் (google) 65% வைத்திருக்கிறது. இந்த புரிந்துணர்வு மூலம் கூகிளின் மார்கெட்டைப் பிடிக்க மார்தட்டுகின்றன.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
ஆமா இன்னும் மாசிலாமணி டாப் டென்னில், முதலில் இருக்கிறது. நாடோடிகள் இரண்டாமிடம். இதில் மாசிலாமணி ஜனரஞ்சகமாக ஓடுவதாக (எந்த தியேட்டரில் என்று தெரியவில்லை?) சுயதம்பட்டம் வேறு?. காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சுதான் போலும்.....
;

கூத்தாடிப் பொழப்பு....

"நா எம்பாட்டுக்கு கத்திக்கிட்டே இருக்கேன்.... எதுமேலயோ மழை பேஞ்சாமாதிரி கம்ன்னு இருக்கீயளே, உங்களால ஒரு கா காசு பிரயோஜனம் உண்டா....? வீட்ல வயசுக்கு வந்த பெண்ணிருக்காளே!!! அவளுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணம் காட்சிய செய்யணுமேன்னு... கொஞ்சமாவது கவலை, வெசனம் இருக்கா... சும்மா தாத்தா ராஜபாட் பெரிய கூத்து காரருன்னு, சொல்லி சொல்லியே பாதி காலத்த ஓட்டியாச்சி, இன்னும் கொற காலத்தையும் இப்படியே ஓட்டிடலாம்னு எண்ணம்போல.... நீ வாடி...., நாம வயலுக்குப் போய் இவருக்கு கஞ்சி ஊத்தணும்னு, நம்ம தலைஎழுத்து" என்று மகளைக் கூட்டிக் கொண்டு விருட்டென்று வெளியேறினாள் ரஞ்சிதம்.

இது வாடிக்கைதான், அவளும் என்ன செய்வா பாவம். எனக்கு வாக்கப்பட்டு எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை. தாத்தா என்னை முதன் முதலா கூத்தில் அறிமுகப் படுத்தியபோது, எனக்கு வயது ஆறு. குறுநில இளவரசனாய் நடித்தேன்.

கூத்தை எழுதி, இயக்கி, இசை, பாடல்கள், அரங்க அமைப்பு என்று சகலமும் தாத்தாதான். ஏன் கூத்து நடத்த ஆகும் எல்லா செலவும் தாத்தாதான் செய்வார். தன்னுடன் நடிக்கும் சக கலைஞகளின் சம்பளத்தை, கூத்து ஆரம்பிக்கும் முன்னமே கொடுத்திடுவார்.

என்றுமே அவர் தன்னை உயர்வாக நினைத்தது இல்லை, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வார். அடவு கட்டி பெருங்குரலெடுத்துப் பாடினாறேன்றால்..... கடைசி இருக்கை ஆளுக்கும் கேட்க்கும். அந்த காலத்திலேயே தாத்தா, நாலைந்து வேடமெல்லாம் ஏற்று நடித்திருக்கிறார். நவரசமும் தவழும் பாவம் என்று அவர் கூத்தில் தனி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். கூத்து அவருக்கு மூச்சு. பாட்டி அவரை ஒரு பிள்ளை போல் பார்த்துக் கொள்வார். பாட்டிக்கு தாத்தா கூத்துக்காரார் என்று சொல்லிக் கொள்வதில் மனங்கொள்ளா ஆனந்தமும், பெருமிதமும் பொங்கும்.

தாத்தா நடையே... ராஜகம்பீரமாக இருக்கும். அவர் பெரிய செருப்புப் போட்டு நடந்து செல்ல, தெருவில் போவோர் வருவோர் எல்லாம் மிகுந்த மரியாதையுடன் கும்பிடுவார்கள். இது நமக்கான மரியாதை இல்லை, நம் மேல் குடி கொண்டிருக்கும் கலையின் மேல் உள்ள மரியாதை என்று சொல்வார். தாத்தா அந்த காலத்தில், ஜெயிசன் துரை முன்னெல்லாம் கூத்துக் கட்டியிருக்கிறார். ஜெயிசன் துரை தாத்தாவின் கூத்தில் அகமகிழ்ந்து, பொன்னும் பொருளும் கொடுத்தாராம். ஆனால் தாத்தா அதையெல்லாம் கிராம மக்களுக்கே கொடுத்து மகிழ்ந்தார். கலை வியாபாரமாகக் கூடாதென்பது தாத்தாவின் கொள்கை.

இருந்த சொத்தெல்லாம் இப்படியே... இறைத்தத்தில், சிதறியதைக் கொண்டு அப்பா நன்றாக படித்ததினால் அரசாங்க உத்தியோகம் கிட்டியது. தன்னை தலைமேல் வைத்துக் கொண்டாடும் ஊர் மக்களிடம் கையேந்த மனமில்லாமல் கடைசிவரை கவுரதையாகவே போய் சேர்ந்தார் தாத்தா.

அந்த கஷ்டங்களை அனுபவித்ததினாலோ என்னவோ, அப்பாக்கு கூத்தென்றாலே வேப்பங்காயகப் போனது. தாத்தா தன் கலைவாரிசாக என்னை உருவாக்க எத்தனித்தபோது, அப்பா முகுந்த மனவருத்தங்கொண்டார். என் குரலும், உடலசைவும் அப்படியே தன்னைப் போல் உள்ளதென்று, தாத்தாவிற்கு தாங்கமாட்டாத பெருமை. "என்னோட இதெல்லாம் அழிஞ்சிடுமோன்னு பயந்தேன்... நீ என்னையே மறுபதிப்பாகக் கொண்டிருக்கிறாய்", என்று தாத்தா அடிக்கடி சொல்வார்.

அதுமுதல் கூத்தே என் வாழ்க்கையாகிப் போனது. ஆனால் நாளடைவில் மக்களின் ரசனை, நவீன நாடகம், சினிமா என்று மாற, இன்று கூத்தை ரசிக்க ஆளில்லை. தெருமுனை கோயில் விஷேசமென்றாலும், இப்பொழுதெல்லாம் ஒரு நடிகரோ, அல்லது நடிகையோ வந்து சிறப்பிக்கிறார்கள். பின் எப்படி என்னை மாதிரி கூத்துக்காரனுக்கெல்லாம் வேளைவரும். வேறு வேலைக்குப் போகலாமென்றாலும் தன்மானம் தலைவணங்க விடுவதில்லை. மாமா மகள்தான் ரஞ்சிதம் என்றாலும், அவளும்தான் என்ன செய்வாள், இந்த வெத்து வேட்டை கட்டிக்கொண்டு. இன்று வீட்டிலும் வெளியிலும் எனக்கு ஒரே நிலைதான்.... மரியாதை என்பது மருந்துக்குக் கூட இல்லை.


இன்று கூத்துகாரன் என்று சொன்னால் வெட்டியாக ஊர்சுற்றுபவர்கள், என்று அர்த்தம். கலையின் மதிப்பு தரம் தாழ்ந்துப் போனதில்.... கூழுக்காகக் கூட யாரும் கூத்துக் கட்ட அழைப்பதில்லை. என்னுடன் இருந்தவரெல்லாம் தத்தமது குடும்பத்தைக் காப்பாற்ற சாயப் பட்டறை, சாக்கடை அள்ளுதல் என்று போய்விட, நான் மட்டுமே அரிதாரம் பூசிய கையை அழுக்காக்காமல் இருக்கிறேன்.

நாளடைவில், வீடே எனக்கு சிறையாகிப் போனது, எங்கும் போகாமல் இந்த சாய்நாற்காலியே கதியென்று ஆனது. வெளியில் ஏதோ சத்தம் கேட்க்க, சிந்தனையில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டு, மெதுவாக நடந்து வாசலுக்குச் சென்றேன். அதற்குள் வேலை விட்டு வீடு திரும்பியிருந்தார்கள் ரஞ்சிதமும் என் மகளும்.

"மத்தியானம் கொட்டிக்கக் கூட இல்லையா?" என்றால் வந்ததும், வராததுமாக.

வெளியில் ஆள் அரவம் கேட்க, எட்டிப் பார்த்தேன்.

"அப்பா!! உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்" என்றாள் என் மகள்.

"Excuseme, my name is David Jaison, Grand son of Brigadiar Jaison" என்று சொல்லி ஒரு வெள்ளைக்காரன் வாசலில் நின்றான்.

"Yes, come in" என்று அவனை உள்ளே அழைத்தேன்.

"My grandpaa Jaison told about your Grandpaa Raajpaat Raajadurai, What a man he is, a man who lived for the art. He is the symbol of encyclopedia on this Kooththu."

"ஆமா பேரு பெத்த பேரு, ஆனா தாகத்துக்கு 'நீலு லேது'" என்றாள் ரஞ்சிதம்.

"Actually, i'v come here to award this accreditation to him, as a life time achievement of performing arts. I'm one of the Jury member of the Committee" என்றார் அவர்.

"பணமா எவ்வளவு தருவாங்க?" என்றாள் ரஞ்சிதம்

"நீ கொஞ்சம் சும்மா இரு!!" என்று அதட்டினேன். அவள் அப்படியே வாயடைத்துப் போனாள்...

"As an Heir of his Caliber, you have to perform a play in London Broadway theatre, and receive the award along with the price money of 2 Million" என்றார் அவர்.

மிகப் பெருமிதமாய்....... தலை நிமிர்ந்து ரஞ்சிதத்தைப் பார்த்தேன், முதல் முறையாக...... ;

பம்பாயில் லெக்குதாதா

லெக்குதாதா.... புதுசா கல்யாணம் ஆகி, மறு வீட்டுக்கு, தன மனைவியின் சொந்த பந்தங்களைப் பார்க்க..... முந்தைய பாம்பே, இன்றைய மும்பை சென்றார். பக்கத்து ஊருக்கே பஸ்ஸில் போகாத நம்ம லெக்கு, பம்பாய்க்கு ட்ரைனில் போக ஆயத்தமானார். ஊரையே அதிரிபுதிரி ஆக்கினார்.

"அவ அண்ணன்களெல்லாம் ப்ளேன்லதான் வரச் சொன்னாங்க நாந்தே, என்ன கருமம், நாம ட்ரைன்லேயே போலாம்ன்னு சொன்னேம்டே"
என்று பல்லு முளைக்கா பிள்ளையில் இருந்து, பாம்படம்(காது வளையம்) போட்ட செவிடுகள் வரை, ரத்தம் வர ஊதிவிட்டார். தெறிச்சி ஒடுனவங்களையும் புடிச்சி நிறுத்தி.... விடாது 'கருப்பா'னாரு புது மாப்பிள்ளை.

காண்ணுலப் பட்ட எல்லோர்கிட்டயும் "உனக்கென்ன வேணும்டே....! பம்பாய்ல இருந்துன்னு....?" ஏகப்பட்ட லிஸ்ட் வேற ஏத்திக்கிட்டாரு மைண்ட்ல. வெவரமான வெடலைகளப் பார்த்தா... பம்பாய்யோட ஹிஸ்டரியும், பலான ஏரியா அட்ரசையும், பக்காவாப் பத்திக்கிட்டாரு. ஒடிசலான தேகத்துக்கு ஒன்னரை மீட்டருல பேண்ட்டு ஒன்னு, கண்ணப் பறிக்கிற ரோஸ் கலர்ல, ராமராஜன் சர்ட்டு ஒன்னுன்னு, அமர்களப்படுது ஐயா ஏரியா. ஊரே வழியனுப்ப, ஒரு வழியாப் போனாரு.

ஒரு வாரங்கழிச்சி, மிடுக்காப் போனவரு.... கடுப்பாத் திரும்பி வந்தாரு, சரி அலுப்பு போல் இருக்குன்னு, ஆறப்போட்டு, ரெண்டு நாள் கழிச்சி பயணக் கதையக் கேட்டால்.....

"அத்த ஏண்டா கேகுரீகன்னு" பிளாஷ்பேக் ரீல் ஓட்டினார்.

"எவ்வளோ பெரிய ட்ரைன்டா....! எங்கள ஸ்டேஷன்லையே பிக்அப் பண்ணி அவன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனான் பெரிய மச்சினன்"

"ம்ம் விருந்தெல்லாம் தடபுடல் தானே...!"

"அட போடா நீ வேற வெந்த புண்ணுல வெரல விட்டு நோண்டாத... முழுசாக் கேளுவே..."

"சரி லெக்கு, சொல்லு"

"நல்ல சௌகர்யமா இருங்க மச்சான்னு.... மரியாதைய மொந்த மொந்தயாக் கொடுத்தாங்க, மச்சினனும் அவன் மனைவியும். ஒரு சின்ன ஹால்.... அதுதான் அவன், அவன் பொண்டாட்டி அப்புறம் நாலு பிள்ளைகள்ன்னு, ரொம்ப சின்ன இடம். அதிலேயே சாப்பிடனும், தூங்கனும் இதுல சிமென்ட் சீட் வேறு சூட்டக் கிளப்புது..."

"அப்போ உங்களுக்கு தனியா ரூமெல்லாம் இல்லையா.....?"

"அட நீ வேற, 'ஆடிக் காத்துல அம்மியே பறக்குதாம்... அழுக்கு வெட்டி என்னாகும்' இங்கெல்லாம்... இப்டித்தான் மச்சான், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கன்னு, மச்சான் ரொம்ப கெஞ்சினான். நானும் வெறுப்ப மறச்சிட்டு..., இனிப்பா நின்னேன். ஒரு சேலையில் மறைப்புக் கட்டி, எங்க ரெண்டு போரையும் தூங்க வச்சாங்க. நைட்ல காலைத்தூக்கி பக்கத்துலப் போட்டா.... மச்சானோட சின்னப் பையன் உருண்டு வந்து எம்பக்கத்துல படுத்திருக்கான்"

"அப்புறம்...."

"அப்றோம் என்ன அப்றோம் காலப் போட்டதுனால தப்பிச்சேன்"

""ஐயோ...!"

"சரி இதுதான் இவங்க வாழ்க்கை, ரொம்பப் பாவம்ன்னு, எனக்கு நானே சால்ஜாப் சொல்லி, ஒரு நைட்ட ஓட்டினேன். அதுக்கப்புறம் இன்னொரு அண்ணன் வீடு, சரி இவன்தான் இப்படி, இன்னொருத்தனாவது நல்லா இருப்பான்னு நம்பி... போனேண்டா, போய் பார்த்தா.... பெரியவனேப் பரவாயில்லைன்னு தோணிச்சி..."

"ஏன்...?"

"அட அந்த வீடு ஒரு குடிசைடா, மண் சுவரு மொழுகியத் தரைன்னு, அதிலும், இவன் வீட்டை விட இன்னும் சின்னது. ஆனால், அதே அளவு ஆள்கள். ஆஹா இவனுக்கு அவன் பரவாயில்லைன்னு..., இன்னொருத்தன் வீட்டுக் போனால்.... அது டால்டா டின்ல கட்டிய வீடு, ஆஹா நம்ம மச்சான்கள் பரவாயிலைன்னு வேறொருத்தர் வீட்டுக்குப் போனால்... அது யூரியா பேக்ல கட்டிய வீடு. ஆஹா... சண்டாளச் சிரிக்கி, நம்மள நடு ரோட்டுக்குக் கொண்டு போய்டுவாப் போல இருக்கேன்னு... உஷாராவி 'சடன்னாக்' கிளம்பி, சட்டுபுட்டுன்னு வந்துட்டேன்டா...."

"இதுல அந்த சிரிக்கி மவ, ஏகப் பட்ட பில்டப்புகளப் போட்டு என்னம்மா உசுப்பேத்துனா.... 'என் அண்ணன்கள், பம்பாய்ல பர்பி சுடுறாங்க, பஞ்சு மிட்டாய் பொசுக்குராங்கன்னு..., பக்கம் பக்கமா பாசப் புராணம் பாட்னா...' கேக்குறவன் கேனையா இருந்தா....., 'லண்டன் லாட்ஸ்' மைதானமே எங்கப்பா கெட்டுனதுன்னு அடிச்சி உடுவாளுக...."

"அப்போ ஊர் சுத்திப் பார்க்கலையா?"

"அட.... மொழி தெரியாத ஊரில் எங்கப் போவுரதுன்னு, எங்கயுமேப் போவலடா"

"அப்போ அட்ரஸ் வாங்கிட்டுப் போனியே அங்கேன்னு?" அழுத்தினான் அருள்

"அட உள்ளூர் கிணத்துலேயே தூர்வார முடியலே, இதில் குளம், கம்மாயின்னு எவன் அலைவான்"

"அப்படி போடு லெக்கு..."

இவ்வளவு ஜம்பமாகப் பேசினாலும், மனைவியின் அண்ணன்கள்தான் இவர் குடும்பத்தை இன்றுவரை காப்பாற்றுகிறார்கள். ;

டார்வின் தியரி

படிக்கும் போது... எனக்கு அடுத்த நம்பர் பார்த்திபனுக்கு. எல்லா 'எக்ஸாமிலும்' என் பின்னாடிதான் அவன் வருவான். 'எக்ஸாமுக்கு' வந்த முதல் வேலை, என்னய தயார் படுத்துவதுதான். "மச்சி எப்டி படிச்சிருக்கே? உன்னய நம்பித்தான் நான் இருக்கேன், நல்லா படி மச்சி" என்று ஒன்னு ரெண்டு பில்டப்பப் போட்டுட்டு, கடைசி நிமிடம் வரை என்னய படிக்கச் சொல்லிவிட்டு.... அவன் பந்தாவாக வலம்வருவான். இதுல இது வருதுன்னு ரமேஷ் சொன்னான், அதுல அது வருதுன்னு மகேஷ் சொன்னான்னு சில பல அட்வைஸ்கள் வேறு கொடுப்பான்.

எக்ஸாம் நடக்கும் நாட்களில் என் அம்மாவைவிட அதிக அக்கறையோடு பார்த்துப்பான். நானும் இல்லாத பந்தாவெல்லாம் பண்ணுவேன் (கெடைக்கும் போதே மஞ்ச குளிச்சிரனும் இல்லன்னா.....). எனக்கு பூஸ்ட்தான், கிங்க்ஸ் சிகரேட்டுட்தான்னு..., நம்ம காட்லயும் மழைபெய்யும். அது ஒரு சுகானுபவம். நான் "என்ன மச்சி என்னய நம்பியே வர்ரீயேன்னு...?" கேட்டா "என் ஆபத்பாந்தவன், அநாதரட்சகன்.... அஞ்சாநெஞ்சன்...., நீ இருக்கும்போது எனக்கு என்ன கவலை" என்பான். நானும் நம்பளையும் ஒருத்தன் இப்படி நேனைச்சிருக்காநேன்னு பீல்ஆவி அவனுக்கும் சேர்த்து படிப்பேன் (நேஜமாளுமேபா!!).

எக்ஸாம் ஹாலில் நான் எப்பவாவது எதேச்சையாகத் திரும்பிப் பார்ப்பதுபோல் இவனைப் பார்த்தால்.... ஏதோ இவன்தான் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கப் போறா மாதிரி, யோசிப்பான். நான் முதல் 'அன்ஸர்' புக் எழுதி முடித்து 'அடிஷனல்' புக் வாங்கி உட்கார்ந்ததும்....., இவன் இம்சை ஆரம்பிக்கும். புதுப் பொண்டாட்டிய படுக்கைக்குக் கூப்ட்ராமாதிறியே.... கால நோன்றதும், காது கூசும் வினோத ஒலி எழுபபுறதும்னு, என்னைய எழுத விடாம பண்ணுவான்.

என் பேப்பர அவன் டேபுளுக்கும், மறுபடி அந்த பேப்பர என் டேபுளுக்கும் மாத்த.... புதுப் புது ஐடியா பண்ணுவான். "எப்டிடா மச்சி இந்த ஐடியாவெல்லாம் யோசிக்குற, இந்த யோசனைகள கொஞ்சம் படிப்புளையும் காட்டலாமிள்ளன்னு....?" கேட்டா "போ மச்சி நேத்து என் ஆளோட அவ வீட்டுக்குப் போனதுல லேட் ஆயிடிச்சிடா" "அடப்பாவி... அவ வீட்ல என்னடா பண்ணீங்க....?" "என்னத்த பண்ணுறது சும்மா பேசிக்கிட்டிருந்தோம்ன்னு" கண்ணடிப்பான்.

நானும் காதலுக்கு உதவுனதா இருக்கட்டுமேன்னு..., அவனுக்கு என் எல்லா பேப்பரையும் காண்பிப்பேன். அசுர வேகத்தில் எழுதி முடிப்பான் பின்ன எக்ஸாம் தொடங்கி ஒருமணிவரை சும்மாதான் இருப்பான்.... என் பேப்பர் போன கணம்..., அவனுக்குள்ள இருக்க அந்நியன் முழிச்சிக்கும்.... சும்மா பர பரன்னு எழுதிமுடிப்பான்.

ரிசல்ட் வந்ததும் என்னைவிட எப்படியும் ஒரு அஞ்சு மார்க் அதிகம் வாங்கியிருப்பான்... "என்ன மச்சி இது, உன்னப் பார்த்து எழுதுன எனக்கு அதிகம் மார்க் போட்டிருங்காங்க... என்ன கொடுமை இதுன்னு?" பீலிங்ஸாக் கொட்டுவான். நானும் அத உண்மைன்னு நம்பி திருத்துன வத்திமாருங்கள வாரி கொட்டுவேன். இது கடைசி வருஷம் வரை தொடர்ந்தது.

பின் மப்பில் ஒரு நாள் மல்லாக்கக் கிடக்கும் போது...... "மச்சி.... நா எப்டி தெரியுமா எல்லா எக்ஸாமிலும் உன்னவிட நிறைய மார்க் எடுத்தேன்?"..... என்று கொசுவத்தி சுத்தினான். "அது வந்து மச்சி...., நீ கொஞ்சம் சுமாராப் படிப்பே, ஆனா உன்னவிட சரவணன் நல்லாப் படிப்பான். அதனால உங்க ரெண்டு பேர் பேப்பரையும் மேட்ச் பண்ணி பார்த்து..., எது கரைக்ட்டோ, அதைத் தேர்ந்தெடுத்து எழுதுவேன். 'அகவுண்ட்ஸ்' அன்ஸர் எல்லாம் அவன் கரைக்ட்டா போடுவான்...., நீ கொஞ்சம் சொதப்பி இருப்பே, அதனால நீ தப்பாப் போட்டத அடிச்சிட்டு...., அவன் போட்டத போடுவேன்னு" எனக்கு பிபி ஏத்துனான்.

"அடப்பாவி.... என்னய ஏண்டா இப்படி ஏமாத்துனன்னு?" கேட்டா "என்னப் பண்ணுறது.... மச்சி, இதுதான் டார்வின் தியரி, 'சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்'" என்றான்.

பின் எனக்கும் அவன்தான், அவன் கம்பெனியிலேயே வேலை பார்த்து வைத்தான். அதுக்கப்புறம் நான் பல மன்னார் அண்ட் கம்பெனிகள் மாறினேன், ஆனால் அவன் அந்த கம்பெனியிலேயே இன்னும் இருக்கான். ஒரு நாள் எதேச்சையாக அவனை தியேட்டரில் பார்த்து "எப்படி மச்சி இருக்கேன்னு?" கேட்டா "நல்லா இருக்கேண்டா மச்சி..., ரெண்டு பசங்க" என்று தன மனைவியை காட்டினான் அதிர்ந்து "என்னடா மச்சி உன் லவ் என்னாச்சி...?" ன்னா

சிரிச்சிக்கிட்டே சொன்னான் "டார்வின் தியரி, 'சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்'". ;

Leggu தாதா அட்ராசிட்டி

எனக்கு நண்பர் ஒருவர் இருக்கார் அவருக்கு நாங்க வைத்தப் பேரு leggu தாதா. அவர் யாரையாவது பார்த்து, "என்ன நல்லா இருக்கியான்னு?" கேட்டா அவ்வளவுதான். ஆனா ரொம்ப பாசமான மனுஷன். பிடித்தது : நமீதா, பிட்டு மற்றும் action படங்கள். சைட்டிஷ்ஷுக்கு சரக்கு. எந்த போஸ்டரிலாவது ஆணோ, பெண்ணோ காலைத் தூக்கியிருக்கா மாதிரி தெரிந்தால் போதும்.... முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவார். இதில் மொழி கடந்த தேடல் அவருக்கு...

லெக்கு தாதா ஊர்மெக்க, ஒரு வக்கீலிடம் வேலைப் பார்த்தார், தினத்துக்கும் அவர் மனைவி இவருக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்துச்சி. ஒரு நாள் அவரை டீக்கடையில் பார்த்து "என்ன லெக்கு சாப்பாடுலாம் எடுத்துட்டுப் போறீங்க போல?" என்று நானும் ரொம்ப எதார்த்தமாகக் கேட்க, "அடப் போப்பா...., இவ கொடுக்குறத எவன் சாப்புடுவான், அத ஏதாவது நாய்க்கு வச்சுட்டு, நா நல்ல சாப்பாடு ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடுவேன்" என்றார். பின்னல் டீ வாங்க வந்த அவர் மனைவி, விட்டாங்களே ஒரு கொட்டு... தலை பல்லாவரம் மலைபோல் வீங்கி விட்டது. ஆனாலும் பய புள்ள கெத்து கொறயாமத்தான் பேசும்.

"என்ன லெக்கு நேத்து ஆறுகால பூஜையான்னு மறுநாள் பார்த்துக் கேட்டேன் "ஆஹ்!! ச்சும்மா... என் மேல கை வெப்பாளா?" என்றார் பந்தாவாக. "அப்புறம் ஏன் சாப்பாடு இல்ல இன்னக்கின்னு?" நான் கேட்டது தான் தாமதம் "அட போப்பா.... ரொம்ப கஷ்டம், இந்த பொம்பளைங்கள வைத்து காலம் தள்ளுறதுன்னு...." சொல்லிட்டு ஒரு கால் தாங்கித் தாங்கி நடந்தது சென்றார்..... ;

குப்ப மேட்டரு...

சென்ற ஞாயிற்றுக்கிழமை விஜய்டிவியில் நடந்த, "நீயா நானாவில்" ஒரு பெண் 'முக நக' என ஆரம்பிக்கும் நட்புத் திருக்குறளை அதீத கொலைவெறியோடு குதறிஎடுத்தார். திருக்குறள் தப்பியது கோபிறான் புண்ணியம். இதுமாதிரி பப்ளிக் டாக்க்ஷோககு வரும்போது நம் தரப்பு வாதங்களை வைக்கும் காரண காரணிகளோடு வருதல் சிறந்தது.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

நம்ம பழம்பெரும் நடிகை விஜயசாந்தி, (அதாம்பா காலத் தூக்கி.... தூக்கி... டயர்ட் ஆனாங்களே... - சண்டைக்குத்தாம்பா), திருப்பதி பாலாஜியை தரிசிக்க வந்த இடத்தில்.... ஏதோ ஒரு அப்பாவி நிருபர், "உங்க வயசென்ன?" என்கிற தலையாய கேள்வியை கேட்கப் போய்.... நல்லா வாங்கிகட்டிக் கொண்டார். பய.... ஆசையா ஏதோ கேட்கப் போய்.... அது அண்டர்வேர் உள்ளே எலி பூந்தா மாதிரி அதிரி புதிரியாப் போயிடுச்சு. ஆமா இன்னுமா இந்த அம்மா புதுப் பொண்ணாட்டம் சிணுங்குது.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

பட்டுக்கோட்டை அருகே ஒரு பெண், அவள் கணவன் குடும்ப பசி போக்க வெளிநாட்டில் இருக்க, இவள் தன உடல் பசி தீர்க்க... கூப்பிட்ட ஆடவருடன் எல்லாம் சென்றிருக்கிறாள். அதில் கடுப்பான அவள் சாதியைச் சேர்ந்தவர்கள், ஒரு நாள் அவளை கூப்பிட்டு, எங்கோ போய் நம்ம விவேக் மைனர்குஞ்ச சுட்டா மாதிரி, பழுக்க காய்ச்சிய கம்பியை.... பிறப்புறுப்பில் பாய்ச்ச...., இப்பொழுது அவள் மருத்துவ மனைக்குக் கூடப் போக முடியாமல், வலியுடனே தவிக்கிறார். இதில் இந்த காவலர்கள், அடிக்கடி போன் செய்து, இதுபோல் இன்னும் திருந்தாமல் இந்த ஊரில் இருக்கும் நிறைய பேரை நீ எச்சரிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

அவள் கணவனை நினைக்கையில்... அந்த பெண் செய்தது மன்னிக்கமுடியா தவறுதான், ஆனால்.... கலாச்சார காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இரக்கமற்றவர்களுக்கு...., யார் இந்த அதிகாரத்தையும், தைரியத்தையும் கொடுத்தது. இந்த கலாச்சார கண்டிப்பை முளையிலேயே வேரறுக்க வேண்டும்.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

A Wednesday என்ற ஹிந்தி படம் பார்த்தேன். நசுருதீன்ஷா மற்றும் அனுபம் கேர் தேர்ந்த நடிப்பில் ஒரு அட்டகாசமான த்ரில்லராக இருக்கிறது. இதைத்தான் கமல் 'தலைவன் இருக்கிறான்' (இப்போது 'உன்னைப் போல் ஒருவன்')என்று எடுத்து வருகிறார் என்றால் எல்லோருக்கும் எளித்தாக மனசுல ஆயும் (ஏன்னா இதில் ஒரு முக்கிய பாத்திரத்தில் மோகன்லாலும் நடிக்கிறார்). த்ரில்லர் கதையான இதை கமல் நடிக்கப் பார்ப்பது மற்றுமொரு குருதிப்புனலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

SMS (சிவா மனசுல சக்தி), வால்மீகி போன்ற தங்கள் படைப்புகளுக்கு தகுதிக்கு மீறிய மதிப்பெங்களும்...., நாடோடிகள், மாயாண்டி குடும்பத்தார் போன்ற சமகால... சிறந்த படைப்புகளுக்கு குறைந்து மதிப்பிடலும், விகடன் டிக்நிடிக்கு ஏற்பானதாக இல்லை. (யு டூ விகடன்???????) ;

நீ சந்தோசமாகத்தான் இருக்கியா?

பெண்கள் எப்போதுமே வேர் போன்றவர்கள், தன் சுக துக்கங்களை மறந்து அல்லது மறைத்து நாள்கடத்துபவர்கள். கலாசார கயிற்றில் கட்டுண்டு, பெண்களின் எவ்வளவோ ஆசைகள் முளையிலேயே வெட்டி வீசப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தந்தைக்கும் மகளுக்குமான உறவு. எதிர் பாலின கவர்ச்சி என்பது... பிள்ளைப் பிராயத்திலேயே துளிர் விடுகிறது, மார்மீதும், தோள்மீதும் தூக்கி வளர்த்த தந்தையே.... ஆனாலும், ஒரு வயது வரை என்ற எல்லையை அவர்களுள் வன்திணிப்பு செய்திருக்கிறோம். நடை, உடை, பாவனை, சிரிப்பு என்று எல்லாமே இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

நீ சந்தோசமாகத்தான் இருக்கியா?
என்னங்க இது கேள்வி? இதுதான் அனேக மனைவியரின் பதிலாக எப்பவுமே இருக்கும். இதன் உச்சரிப்புத் தொனியில் இருக்கு 'மெய்'யான பதில். 'மெய்'யான வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, 'மெய்' மட்டும் வாழ்வது பலரது வாழ்க்கை.

என் மனைவியின் சென்ற பிறந்தநாளுக்கு அவளுக்கு எதுவுமே தரவில்லை, ஆனால் அதை அவள் கிஞ்சித்தும் வெளிப்படுத்தியதில்லை, இதுவரையில்.
அவள் தந்தை சவுதியில் இருந்தார், தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்... வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஊர் திரும்புவதாக ஏற்பாடு. நான் உடனே அவளிடம் "அவரை இங்கு வேண்டுமென்றால் ஒரு பத்து நாள் இருந்துவிட்டு செல்லச் சொல்" என்றேன். அவரும் வர விருப்பம் தெரிவித்ததினால்... விசா ஏற்பாடு செய்தேன். வயதைக் காரணம் காட்டி விசா மறுக்கப் பட்ட போதும், பெரும்பாடு பட்டு விசா ஏற்பாடு செய்தேன்.

அவள் தந்தை கடந்த இருபத்தைந்து வருடமாகவே வனவாசம்தான் அனுபவித்தார். என் இரண்டு பிள்ளைகளைக் கூட அவர் பார்த்ததில்லை. அவர் குடும்பத்துடன் செலவிட்ட நேரமும், நாட்களும் ரொம்ப ரொம்ப கம்மி.

ஓடாய் உழைத்து ஒடுங்கிய தேகம், நரைக்கூடிக் கிழப் பருவம் எய்தியும்.... எல்லா பிள்ளைகளுக்கும், தந்தை இன்னும் தந்தைதானே. அவள் ஒரு குழந்தையாய் தன் தந்தைக்கு ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். "எங்க வீட்ல கூட இப்படி இருந்தது இல்லங்க, நாங்க நாலு பேரும் அவரோடு தனியாக வெளியே போனது கூட கிடையாது" என்றாள்.

அவர் வந்து தங்கிய நாட்களில்...., நான் என்னை அன்னியப் படுத்திக் கொண்டு, அவர்கள் இருவரையும் ஊர் சுற்றிப் பார்க்க அனுப்பினேன். எங்கும் இருவரும் ஒன்றாகவே என் பிள்ளைகளுடன் சென்றார்கள். அவள் பால்யம் திரும்பக் கிடைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் அவள் முகம் பூரித்துப் போய் இருந்தது.

நான் மிகுந்த செருக்காக....! (ஏதோ காவேரியையே கொண்டுவந்தது மாதிரி)

நீ சந்தோசமாகத்தான் இருக்கியா?
என்ன இது கேள்வி?......என்றாள் சற்று எரிச்சலாக.... ;

குப்ப மேட்டரு...

இந்து பத்திரிக்கையின் அதிபர் திரு.N. ராம் சமீபத்தில் இலங்கை அரசின் விருந்தினராக இலங்கை சென்று வந்துள்ளார். வந்தவர் சும்மா வரவில்லை.... சனியுடனே வந்திருக்கிறார். அங்கே உள்ள முகாம்கள் எல்லாம் இந்திய முகாம்களைவிட சிறந்ததாகவே இருக்கிறது என்றும், அங்கே இருக்கும் மக்கள் ரொம்ப சந்தோசமாகவே இருக்கிறார்கள் என்றும் சொல்லி... பெரிய பிரச்னைக்கு சிண்டு முடிந்திருக்கிறார்.

இவர் போனது அரசாங்க விருந்தினராக, அதிலும் ராஜபக்ஷே நண்பராக (ஏற்கனவே சந்திரிகாவிடன் இருந்து “லங்கா ரத்னா” விருதைப் பெற்றவர்) சென்றிருக்கிறார். இவர் முகாமில் இருந்தவர்களிடம் பெரிதாக எதையும் பேசவில்லை. இவர் முகாம்களுக்குச் சென்றது ராணுவத்தின் உதவியுடன், அப்படியிருக்கையில் அங்கே உள்ள தமிழர்கள் ராணுவத்தை எதிர்த்து என்ன பெரிசாகப் பேசிவிட முடியும்.

இலங்கை அரசு அனுமதியில்லாமல் ஒரு பத்திரிக்கையாளரோ, நிருபரோ இந்த முகாம்களுக்குச் சென்றுவிட முடியாது. அப்படியிருக்கையில் இவரை, அரசே அங்கே கூட்டிச் சென்றிருக்கிறது. அப்படியானால்.... அங்கே சூழ்நிலையை தங்களுக்குத் தக்கபடி மாற்றித்தான் இவரை கூட்டிச் சென்றிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. மேலும் ஒரு பக்க கருத்தை வைத்து அங்கே எல்லோரும் நலமாகத்தான் இருக்கிறார்கள் என்பது சுயஏமாற்று கூற்று. அவர் கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்.

பொய்யை உரத்துக் கூறி உண்மையாக்க முயற்சிக்கிறார், இது எரிகிற திரியைத் தூண்டியதாகவேத் தெரிகிறது. அவர்களுக்கு உதவா, மனஊனம் கொண்ட மூத்த பத்திரிக்கையாளரே!! இதுபோல் பொய் பிரச்சாரம் செய்யாமல் இருந்தால் அதுவே அவர்கள் நெஞ்சில் பால் வார்த்ததாகும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

நாடோடிகள் படத்தைப் பலரும் துவைத்து, அலசி காயப்ப் போட்டு விட்டதால்... அதைப் பற்றிய விமர்சனம் தனியாக எழுதவில்லை. படம் ரொம்ப ரொம்ப நல்ல படம். தயவு செய்து வெண்திரையில் காணுங்கள். இதுபோல் நிறைய கதை என்னிடமும் இருக்கு அதையெல்லாம் வேறு வேறு பதிவாக்க நினைக்கிறேன்.

இதுதான் உங்கள் தளம் சமுத்திரக்கனி, எங்கிருந்தீர்கள் இவ்வளவு நாள்? வாழ்த்துக்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். உங்கள் அடுத்தடுத்த படைப்பும் அமர்களமாய் இருக்க வாழ்த்துக்கள். சசியின் நடிப்பு சூப்பர் ஆனால் நடிப்பைத் தள்ளி வைத்து, ஒரு இயக்குனராய் பயணிப்பதை.... ரசிகர்களாய் விரும்புகிறோம். பரணி மற்றும் விஜய் தேர்ந்த நடிப்பு, குறிப்பாக பரணி அந்த குண்டு கண்ணிலேயே வசனம் பேசுகிறார். அபிநயா குறைவில்லா நடிப்பு நம்பமுடியவில்லை மும்பை ஹீரோயின்களைவிட நன்றாகவே உதட்டசைவிக்கிறார்.

நாடோடிகள் - ஓடோடிப் பார்த்து ஓஹோ என்று ஒடவைக்கலாம்.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
முத்திரை புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் (உள்ளம் கேட்குமே, உன்னாலே! உன்னாலே, SMS போன்ற படங்களில் நடித்த நடிகர்) ஜீவா பாசறையில் இருந்து வந்தவர் என்ற ஏக எதிர்பார்ப்பில் போய் பார்த்தால் சாதாரண தெலுங்கு சினிமா கதை ஆனால் அவரின் இயக்கமும், ஒளிப்பதிவாளர் சல்மீன் உழைப்பும் தெரிகிறது.

முத்திரை - சரியாக குத்தவில்லை... ;

உளியாய் இறங்கிய வார்த்தைகள்தாம்....

நான் பட்டயப் படிப்பு படிக்கும் போது இருந்த ஆங்கில ஆசிரியர் நல்லா ஆஜானுபாகுவான தேகம், இந்தி நடிகர் தாராசிங்கைப் போல் இருப்பார், அவர் ஒரு டெரர், அவர் வரும் நேரம் எல்லா மாணவர்களும் ரொம்பவே பயம் கொள்வார்கள், புதுப் பொண்ணாட்டம் குனிஞ்ச தலை நிமிராமல் இருப்பார்கள். அவர் யாரையாவது நேருக்கு நேர் பார்த்துவிட்டால்.... அவ்வளவுதான் எழுந்து பாடத்தைப் படிக்கச் சொல்வார், அதில் வரும் வாக்கியத்தில் உள்ள இலக்கணங்களை அலசி கேள்வி கேட்பார். தெரியாமல் ஜிஞ்சர் தின்ன மங்கி மாதிரி முழித்தால்.... ரொம்ப கேவலமாக திட்டுவார்.

எதுக்கு பொம்பளப் பிள்ளைகள் முன்னாடி அசிங்கம், என்று பாதி மாணவர்கள் அவர் வகுப்பென்றால்... பங்க் பண்ணிவிட்டு எதிரில் உள்ள கேன்டீனில் உட்கார்ந்துக் கொள்வார்கள். அவர் உள்ளே வந்ததும் "குரங்குகள் எல்லாம் கேன்டீன் போயிடுச்சா? இல்ல...., மிச்ச சொச்ச ப்ரண்டு குரங்குகள் ஏதாவது இருக்கா?, அதுகளும் போகணும் என்றால்... போகலாம்" என்பார், யாருக்கு குரங்கு என்று ஒத்துக்கொள்ள மனசு வரும். பாதி நேரம் நானும் என் படைகளும், இதுக்கு பயந்தே..., அவர் வரும் முன்னமே வெளியே போய்விடுவோம்.

ஒரு நாள், நான் சற்று தாமதமாக கிளம்ப...., எதிரிலேயே அவர் வந்து விட்டார். அப்படியே ஷாக்காயிட்டேன்!! "என்ன வெளியே போறியா?" என்றார் "இல்லை சார், பாத்ரூம்" என்றேன் "சரி போ, நீயும் அந்த குரங்குகளோட சேர்ந்து கேட்டுப் போ. நீ ரொம்ப நல்லவன்னு? நெனச்சேன்" என்றார். பேஸ்தடித்துப் போய்... அவர் பின்னாடியேப் போனேன் (மனதிற்குள் ஆஹா சனியன் சடபோட ஆரம்பிச்சிடுச்சே?).

என்னை முதல் பெஞ்சில் உட்கார வைத்து, பாடத்தை எடுத்துப் படிக்கச் சொன்னார்... நிறைய கண்ணைக்கட்டும் கேள்விகள், என் பதிலறியா திருட்டு முழிகள், என்று அவரால் எவ்வளவு முடியுமோ...., அவ்வளவு வாட்டினார். பெல் அடித்து வெளியில் போகும்போது, "என் ரூமில் வந்து என்னைப் பார்" என்றார்.

இன்னொரு மூத்திர சந்துக்கு கூட்டிட்டு போறார்ன்னு தெளிவாயிடிச்சி, மனச திடப் படுத்திக்கிட்டு, அவர ரூமில் போய் பார்த்தேன்.... "உன் கிட்ட இன்னும் ரொம்ப எதிர்பார்கிறேன்!!? நீ ஏன் அந்த குரங்குகளோட சேர்ந்து குட்டிச் சுவராப் போற, இனி நீ என் எல்லா க்ளாசிலும் இருக்கேன்னு" சொல்லிட்டுப் போய்ட்டார்.

அன்றிலிருந்து...., என் படிப்பு முடியும் வரை, அவர் வகுப்பில் யார் இருக்கிறார்களோ இல்லையோ அடியேன் இருப்பேன். என்னையே காட்சிப் பொருளாக்கி... பாடம் நடத்துவார். நானும் தப்புத் தப்பா சொல்லியே ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன். அவர் என்னைத் திட்டியதிலிருந்து.... யார் என்னைத் திட்டினாலும் எனக்கு உரைக்கவில்லை. இன்றும் ஆபிசில் பாஸ் எவ்வளவோ திட்டுகிறார் நமக்கு உரைக்கனுமே!! ம்ம்!! எல்லாம் அவர் போட்ட விதை.

ஒரு ஐந்து வருடங்களுக்குப் பிறகு, பிறிதொரு நாள் நான் வேலை செய்யும் கம்பெனியில் அவரை எதேச்சையாய் பார்த்த போது... "சார்....! எப்படி இருக்கிறீர்கள்?" என்றேன் "நல்லா இருக்கேன் என்றார்?" "சார்....! நா இந்த கம்பெனியில்தான் வேலை செய்கிறேன்" என்றேன். சுழ்நிலை மறந்து, என்னை கட்டித் தழுவி, கர்ஜிக்கும் குரலில் "ரொம்ப சந்தோஷமா இருக்குபா" என்றார். "சார் எல்லாம் உங்க ஆசிர்வாதம்" என்றேன் "அதில்லை, நீங்க நல்ல படிச்சதனால் என்றார்" "என்ன சார் புதுசா நீங்க வாங்க, என்னை எப்போதுப் போலவே வாடா குரங்கு என்று கூப்பிடுங்கள்" என்றேன். ஆனால் கடைசி வரை என்னை அவர் மறுபடி குரங்கென்று கூப்பிடவே இல்லை.

இன்றும்... என்னை தன் பிள்ளையாக நினைக்கிறார். இது ஆசிரியர் மாணவன் என்கிற வட்டத்தைத் தாண்டி, எல்லை விரிவடைந்திருக்கிறது. அன்று உளியாய் இறங்கிய வார்த்தைகள்தாம் இன்று..... ;

கோயிந்து புலம்பல்....

அல்லார்க்கும் வண்கம்

இந்த +2 பரிட்சையில ரொம்ப பசங்க என்னவோ மறுகூட்டலாமே அதுல நிறைய மார்க் வாங்கீதுங்கபா, ஆனா, அவங்கள எல்லாம் முதலிடம் வான்கீனவங்களா அறிவிக்க முடியாதுன்னு சொல்டாங்கலாமே?

ஏம்பா கரீக்ட் பண்றசொல்லோவே ஒயுங்கா கரீக்ட் பண்ணாம உட்டது, அந்த புள்ளைங்க தப்பில்லையே! பாவம் அவங்க lifeஏ கெடுத்த அந்த வாத்திமாருகள இன்னாப் பண்ணப் போறாங்கோ? வாத்திமாருங்க நெனப்பெல்லாம் மாசாமாசம் வாங்குற சம்பளத்தைப் பத்திதான், அது கொறஞ்சா ஸ்ட்ரைக் பண்றாங்கோ, இதுக்கிப்போ இன்ன பண்ணப் போறாங்கோ? பஸ்டு இவங்களுக்கு வக்கினம்பா பரீட்ச.. நமகென்னபா தெரீது, நா ஒரு தற்குறி!!

கேட்டிங்களா நியூச... தியேட்டர்லேயே இனிமே பார் தொறக்க போறாங்களாம் என்னமாறி அன்னாடங் காட்சிக்கெல்லாம் சந்தொசம்பா. இல்லன்னா எப்டிப்பா நம்ம ஹீரோஸ் படம் பாக்கறது. நேத்து வந்த நண்டு சுண்டேல்லாம் பன்சு பேசுது, பறந்து பறந்து பைட் பண்ணுது, ஒரே பேஜாரப் பூடுதுபா, போட்னுப் போன சறுக்கு எறங்கிட்துபா, போர் அடிச்சா அப்டியே போயி ஒரு கல்ப் அடிச்சிக்னா ஷோக்கா இர்க்கும்பா. தலைவரு ஒகே சொல்டாருன்னா ரொம்ப புண்ணியமாப் போவும்.

இன்னிமே நம்ப ரிச்சால க்ரொவ்ட் வரும்பா, பெட்ரோல் வெலய ஏத்திட்டாங்களாமிள்ள! தொபாருப்பா சொல்லி முடில..., அதுக்குள்ள ஒரு சவாரி, வர்டாப்பா!!! ரைட் ரைட்.... ;

மூட்டைப் பூச்சிக்கு பயந்து...

என் வீட்டில் மூட்டைப் பூச்சியின் தொல்லை அதிகமானதினால்... அதை ஒழிக்க ஒரு தனிப்படை அமைத்து, (நம்ம பள்ளி, கல்லூரி capitation fees ஒழிப்பு கமிட்டீ போல) நான் தலைமைஏற்று, என் home minister, மற்றும் இரு செயல் வீர தம்பிகள் ஆகியோர் அதிரடி தீவிர வேட்டையில் இறங்கினோம், இதில் complain தந்த media and பாதிக்கப் பட்ட பொதுமக்களாக என் பெற்றோர் மற்றும் பிள்ளைகள்.

ஒவ்வொரு இண்டு இடுக்கு என்று ஒரு இடம் விடாமல் தேடி vaccum cleaner போட்டு உறுஞ்சுவது என் வேலை, என் பின்னாடியே வந்து ஸ்ப்ரே அடிப்பது என் தம்பியின் வேலை, பின் மாட்டியவர்களை சாகும்வரை தூக்கிலிடவேண்டிய பங்கு என் மனைவிக்கு. எல்லாம் முடித்து அதை சுத்தம் செய்து வீட்டைக் கழுவி விட்டு எல்லாரும் ஹோட்டலில் சென்று சாப்பிட்டோம். ரொம்ப நிம்மதியாக இருக்கிறது என்று என் பிள்ளைகள் சந்தோஷித்தார்கள். என் தந்தையால் மிகுந்த பாராட்டைப் பெற்றோம்.

ஹோட்டலில் வயிறு ரொப்பி வீடு வர மூன்று மணி நேரம் ஆனது. வீடு வந்து கதவு திறந்ததும்.... எங்களை வரவேற்றது ஒரு மூட்டைப் பூச்சி. என் தந்தை சொன்னார் இது போகாது, ஒன்று நாம் வீட்டைக் காலி செய்யவேண்டும், இல்லையேல் வீட்டையே கொளித்திட வேண்டும் என்றார்.

இதைப் போலவே ஒரு வாரத்துக்கு முன் கல்லூரிகளில் அதிரடி சோதனை அவ்வளவு பணம் சிக்கியது, லைசென்ஸ் ரத்து என்று எல்லா டிவிக்களும் அலறின. ஆனால் நடப்பது என்னவோ அதற்க்கு நேர்மாறன ஒன்று. சிக்கலில் மாட்டிய பூந்தமல்லிக்கருகில் இருக்கும் ஒரு பொறியியல் காலூரியில், என் சித்தி பொண்ணுக்கு இரண்டாமாண்டு சேர்க்கைக்கு போனபோது, மிக பகிரங்கமாக, ஆறு லட்ச ருபாய் DD எடுத்து வருமாறு சொன்னார்கள், கேட்டதற்கு மீடியாவில் போடுவது மாதிரி எல்லாம் நடக்க முடியாது என்று சொன்னார்கள்.

இப்பொழுது வீட்டை மாற்றலாமா? அல்லது கொளுத்தலாமா? என்று யோசித்து வருகிறோம். இந்த மூட்டைப் பூச்சிக்கு பயந்து...... ;

மாயாண்டி குடும்பத்தார் - விமர்சனம்

தருண் கோபி, மணிவண்ணன், ராஜ்கபூர், G M குமார், பொன்வண்ணன், சீமான், சிங்கம் புலி, ரவி மரியா, நந்தா பெரியசாமி, ஜகன்னாத், தமிழரசி, பூங்கொடி
நெறியாள்கை : ராசு மதுரவன்
மியூசிக் : சபேஷ் முரளி

மாயாண்டி குடும்பத்தை சுற்றியே கதை நகர்கிறது, பங்காளி சண்டையை பற்றிய கதைதான் என்றாலும், அந்த மதுரை மண் மணத்தை கண் முன் நிறுத்துகிறார் ராசு மதுரவன். ஐந்து பிள்ளைகளைப் பெற்ற மாயாண்டி திடீர்யென இறந்து போக கடைசி மகனின் நிலைதான் கதை. அந்த கடைசி மகனின் பார்வையில் இருந்து கதை சொல்லி இருக்கிறார். சீமான் தானே எழுதிய பாடலைப் பாடி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது, பாடலில் ரத்தத்தை சூடேற்றும் வரிகள் தெறிக்கின்றன.

மனைவிகள் தம்பியைப் புறக்கணிக்கும் போதெல்லாம், அண்ணன்கள் உருகி உருகி தம்பியை உபசரிப்பது அருமை. கள்ளக் காதலையே தெரிந்து செய்யும் போது கூடப் பிறந்த பொறப்புக்கு செய்வதை தெரியாமல் செய்யவேண்டியிருக்கிறது (பொட்டில் அடித்த உண்மை - சபாஷ் ராசு மதுரவன்)

இசை சபேஷ் முரளி, பாடல்கள் பின்னணி இசை மதுரை மணத்தை தேனாகப் பாயவைக்கிறது சபாஷ்!!.

மாயாண்டி குடும்பத்தார் - நாமும் தைரியமாக போய் அவர்களுடன் கறிசோறு சாப்பிடலாம். ;

குப்ப மேட்டரு - III

நேற்று மட்டும் வெவ்வேறு விதத்தில் மூன்று பாலியல் வல்லுறவு நடந்திருக்கிறது. ஒன்று ஒரு காவல்துறை அதிகாரியே ஒரு பெண்ணை வல்லுறவு கொண்டிருக்கிறார், மற்றொன்று எட்டு வயது சிறுமியை ஒருவன் வல்லுறவு கொண்டு கொன்றிருக்கிறான்.

இதில் நம்மை அதிர்ச்சியடைய வைத்த காவல்துறை அதிகாரியை என்ன செய்வார்கள்? நிரூபிக்கப்பாட்டால்... (நிரூபிக்க இன்றைய தேதியில் DNA போன்ற அதிநவீன முறைகள் உள்ளது) அந்த காமுகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்.... அதுவும் அப்பெண்ணுக்கு ஏதாவது நல்ல வக்கீல் கிடைத்தால் ஒழிய.... இல்லையேல், வழக்கு இழுத்துக் கொண்டே போய், அப்பெண்ணும் அக்காமுகனும் மூப்பெய்திய பொழுதில் கடைசியில் அவன் விடுதலையாகலாம். அல்லது அவன் சிறையில் தின்னு கொழுத்து, மீண்டும் ஒரு தவறுக்கு அச்சாரம் போடுவான்.

இதற்க்கு பதில் அவனுடைய வேலையைப் பறித்து, பாதிக்கப் பட்ட பெண்ணுக்கோ அல்லது அவள் கணவனுக்கோ அவர்களின் தகுதி திறமைக் கேற்ப ஒரு அரசாங்க பணிகொடுக்கலாம். அந்த காமுகனின் GPF PF போன்ற சேமிப்புகளை இவர்கள் பெயருக்கு மாற்றி விட வேண்டும்.

அவனுடைய உறுப்பு இனி சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படும் வகையில் ஏதாகிலும் ஹார்மோனல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும்.

அவனின் கதையையும் அவனுக்கு விதிக்கப் பட்ட தண்டனையையும் எல்லா காவல்துறையிலும் திருடர்கள் அறிவிப்புப் பலகையில் ஒட்டவேண்டும்.

சட்டங்கள் கடுமையாக்கப் படாதவரை குற்றங்கள் கம்மியாகாது

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

மாசிலாமணி படத்தில் மற்ற எல்லா ஹீரோவைப் போல் ஒரு காதல் படத்தில் அறிமுகமான அடுத்தப் படத்திலேயே நகுலும் அடிதடியைக் கையில் எடுத்திருக்கிறார். கதைப் பழசு என்றாலும் டைரக்டர் தெரிகிறார். இதைப் ப்ரமோட் பண்ணும் வகையில் நகுலும் சுனைனாவும் தமிழ்நாடு முழுக்க சுற்றிவருகிறார்கள், கல்லா கட்டும் முயற்சியில் இது புது வகை.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------


ஆஸ்திரேலியாவில் மேலும் இரண்டுபேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் நிலைமை மோசமாகுமுன் இந்திய அரசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். உடனே இரண்டு அரசும் பேசி செயலில் இறங்க வேண்டும். இல்லையேல் சிங்கபூரில் நடந்தது மாதிரி மிகப் பெரிய கலவரமாக வெடிக்கும் என்பதில் ஐயமில்லை. பொறுமைக்கும் எல்லையுண்டு அரசே!!.

அஸ்திரேலிய கல்வி மந்திரி திரு. லிசா பால் டெல்லி வந்து வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் திரு. வயலார் ரவியைச் சந்தித்தார் அப்பொழுது திரு. வயலார் ரவி கேட்டுக் கொண்டதற்கிணங்க திரு. லிசா பால் இனிவரும் நாட்களில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறையும் வகையில் உறுதியான, அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாகத் தெரிகிறது (அப்போ தாக்குதல்கள் நடக்கும் ஆனா குறையும்? இது எப்டி இருக்கு?)

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

இந்தி மிட்நைட் மசாலா நடிகை ராக்கி சாவந்த் தனது சுயம்வரத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார் இதை NDTV ஒளிபரப்ப இருக்கிறது. (இன்னும் தனது முதலிரவைத்தான் ஒளிபரப்பவில்லை. CDயில் தனியே வெளியில் கிடைக்கிறது, ஆனால் அது வந்திருந்த மாப்பிள்ளைகளுடன் இல்லை, அவர்களுக்கு இது தெரியுமோ? தெரியாதோ?). வந்திருந்த 16 போரையும் மணக்க விரும்புவதாக இந்த 28 வயது கிளி ஜோள்ளியது. ;

குப்ப மேட்டரு - II

சட்டசபையில் துணை முதல்வரை வாழ்த்திப் பேசினார் என்று திரு. எஸ் வி சேகர் மீது காடுமையான கோபத்தில் இருக்கிறது தலைமை. இதைப்பற்றி திரு. எஸ் வி சேகர் கூறுகையில்..... ''சட்டமன்ற உறுப்பினர்களை ஆட்டு மந்தையாக வைத்துகொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. விரும்புகிறது (இன்றுவரை இவரும் அதில் ஒரு ஆடுதான், அதையும் அவரேதான் சொல்லியிருக்கிறார்), நான் துணை முதல்வரை வாழ்த்திப் பேசும்போது, முதலில் என்னை என் சாதியைச் சொல்லிக் கேவல மாகத் திட்டினார் கலைராஜன். ஆனால், நான் என்ன சாதியோ அதே சாதிதான் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும். 'மேற்கொண்டு ஒருவார்த்தை பேசினா உன்னைப் போட்டுத் தள்ளிடுவேன்' என்று என்னைப் பார்த்துச் சொன்னார் கலைராஜன்"

இவர்கள் மக்கள் பிரதிநிதிகள், ஆனால் சட்டசபையில் தெருச் சண்டை போட்டிருக்கிறார்கள். அதையும் சாதிச் சண்டையாக்க முயற்சிக்கிறார்கள். பேசியவரும் கேட்டவரும் தத்தமது சாதியையும், தனக்கு ஓட்டுப் போட்ட மக்களையும்மே அவமதித்திருக்கிறார்கள்.

மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன் என்பவர், தன்னுடைய இளவயது மகன் திலீபன்ராஜை வைத்து சிசேரியன் ஆபரேஷனில் ஈடுபட்டது...., அதற்க்கு மெடிக்கல் கவுன்சில், முருகேசன் மீது நடவடிக்கை எடுத்தது நாடறிந்தது. இந்நிலையில், அதே மணப்பாறையில் ஜி.கே.எம். என்ற பெயரில் புதிய மருத்துவமனை ஒன்றை திறந்திருக்கிறார். அதற்க்கு நாம தேர்ந்தெடுத்த அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.... பாவம் அமைச்சருக்கு இவ்விசயம் தெரியாதுபோலும்... அப்படின்னா மெடிகல் கவுன்சில் எடுத்ததா சொன்ன நடவடிக்கை என்ன?

எப்படியோ தனது காதல் அரங்கம் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கிட்டார் வேலு பிரபாகரன். ரசிகர்களே!! காத்திருங்கள் திறந்த மனதுடன்.....

மேலும் ஒரு கட்சி வரப் போகிறது. வந்ததுங்களே இன்னும் சொன்னதைச் செய்யல.... இளைய தளபதி கட்சி ஆரம்பிக்கப் போகிறது கிட்டத் தட்ட உறுதியாகி விட்டது. அவர் தந்தையே இதை உறுதி செய்திருக்கிறார். (ண்ணா நல்லதுங்கண்ணா!!)

காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததோ.... இல்லை பனம்பழம் விழும்நேரம் காக்கா உட்கார்ந்ததோ!! வெர்ஜின் மொபைல் ஆன்டி விளம்பரம் இப்பொழுதெல்லாம் வருவதில்லை. இப்பொழுது வரும் கார்டூன் வோலம்பரம் ரசிக்கும்படியே இருக்கிறது. நிறுத்திய அத்துணை உள்ளங்களுக்கும் பித்தனின் நன்றிகள். ;

கோயிந்து புலம்பல்....

அல்லார்க்கும் வண்கம்,

ஒரு மாசத்துக்கு முந்தி ஒர்நா..... காத்தால அஞ்சு மணிக்கு ரிச்சால தூங்கினு இர்க்கசொல்லோ..... ஒரு பூமா வந்து கோபாலபுரம் வர்யான்னு கேட்டுச்சு? ஓகேமா ஏறி குந்துன்னு சொல்லி, கோபாலபுரம் போனேன்பா.... அங்கே ரொம்ப பெரிய க்யு இர்ந்துச்சி, பூமா என்ன வேயிடிங்க்ள போட்டுட்டு உள்ளார அவங்க ஹஸ்பண்ட பாக்கப் போச்சி.......

நானும் சரின்னு ஒரு பீடி வலிச்சிக்னே...., அங்கே இர்ந்த செகுர்டியாண்ட "என்னாபா அல்லாரும் இம்மா சீக்கிரமே இங்கன வந்துகீராங்கோன்னு?" கேட்டுகுனேபா.... செகுர்டி "அல்லாரும் அவங்கவங்க புள்ளைய உச்கூல்ள சேக்க வந்துர்காங்கோன்னாறு". "அப்டி இன்னாபா இந்த உச்கூல்ள கீதுன்னு?" கேக்கசொல்லோ "இந்த ஸ்கூல்தான் வருசா வருஷம் first வர்தாமிள்ளன்னு" சொன்னாரு.

அதுக்குள்ளே பூமா அது ஹஸ்பண்ட இட்டாந்து ரிச்சா பின்னாடி குந்த வச்சி சாயா, நாஸ்தா குட்தூது. பாய் சாப்டசொல்லோ அவராண்ட
"என்ன பாய் இது அவ்ளோ பெரிய உச்கூலா"
"ஆமாம்பா இதுதான் எல்லா வருசமும் first வருது, இங்க சேத்தா பிள்ளைங்க நல்லா படிக்கும்"
"இங்க நம்ம புள்ளைய சேக்க முடியுமா பாய்?"
"அதுக்கு வைப்ஃ இல்ல ஹஸ்பண்ட் படிச்சிருக்கணும், வருசத்துக்கு முப்பதாயிரம் செலவாகும்ன்னு" சொன்னாரு
"எதுக்குபா வைப்ஃ இல்ல ஹஸ்பண்ட் படிச்சிருக்கணும்?"
"அப்பத்தான் பசங்களுக்கு வீட்டிலும் சொல்லி கொடுக்க முடியும்"
"அப்போ இவங்க உச்கூல்ள என்ன சொல்லி குடுப்பாங்க?"
"அது ஸ்கூல் ரூல்"
"என்ன ரூலோ..... பூ.... நமக்கு அதெல்லாம் வேணாம்பா, எம்புள்ள வூட்டாண்ட கீற கவர்மெண்டு உச்கூல்லையே படிக்கட்டும்"
"என்ன ரிக்ஷாகார் இதுக்கே சலிச்சிக்கிட்டா எப்படி, இந்த 'Q' எதுக்குன்னு நெனச்சீங்க, இது வெறும் application வாங்க மட்டும்தான், இன்னும் interview, donation இருக்கு, அதுக்கப்புரமாதான் அட்மிச்சின், donation எப்படியும் ஐம்பதாயிரம் கேட்பார்கள், அப்புறமா ஒரு முக்கியமான விஷயம் இருக்கு, வீடு ஐந்து கிலோமீட்டர்க்குள் இருக்க வேண்டும்" ன்னு பூமா சொல்லுச்சி.

"இதுக்குத்தான் நான் நேத்து ராத்திரியே இங்கே வந்து கியுவில் நின்னேன்"

"அட உடு பாய் நமக்கு இது தோதுபடாது, என்னிக்கோ ஒரு ரா கண்ணு முழிச்சதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?.................யா..... அப்போ என்னப்போல அன்னாடங் காட்சிங்க புள்ளையே பெத்துக்காம...., கோட்டர் உட்டுட்டு குப்புறதான் படுக்கணும் போல!!!"

மறுக்கா இது நடந்து ஒரு வாரங் கழிச்சி அந்த பூமாவ மர்கேட்டுல பாத்தேன் "என்ன பூமா சீட்டு கேட்சிதான்னேன்?"

"இல்லப்பா கார் இல்லன்னு சீட் கெடைக்கல, இப்போ எம்பய்யன் இங்கே ஒரு ஸ்கூல்ல சேர்த்துட்டோம்"


"ஒகே பூமா வர்டா......."

மனசுகுல்லோ "அப்போ பாவோம் பாய்க்கு அன்னக்கி ரா தூக்கமும் வேஸ்டாப் பூடுச்சா.....?"

நாந் தெரியாமத்தான் கேக்குறேன்மா நம்ம டாக்டர் அப்துல் கலாம், இப்போ ராக்கெட் உட்ட டாக்டர் மயிசாமி அண்ணாதுரை, அல்லாம் இந்த உச்கூள்ளயா படிச்சாங்க?

அப்படியே மொத ரேங்க் எடுத்தாலும் அது ஏதோ ஒரு பொண்ணோ, ஆணோதானே...? அல்லருமா எடுப்பாங்க....?

என்ன---ஓப்பா..... ;
 

Blogger