Pages

வலையுலகில் முதல் முறையாக.......

தமன்னாவுடன் கார்த்திக்கு காதலா....?
?
?
?
இலங்கையில் அமைதி திரும்புமா....?
?
?
?
லஞ்ச லாவண்யம் இல்லாத இந்தியா உருவாகுமா....?
?
?
?
அம்மா... நாடு திரும்புவார்களா....?
?
?
?
கலைஞர் பாராட்டு விழாவே இனி வேண்டாம் என்கிறாரா.....?
?
?
?
அன்புமணி ராமதாசுக்கு எம்.பி சீட் வேண்டாமா....?
?
?
?
விஜய் இனிமே தொடை தட்டி வசனம் பேச மாட்டாரா.....?
?
?
?
விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணியா....?
?
?
?
நதிகள் இணைப்பு சாத்தியமா......?
?
?
?

இதெல்லாம் நமக்கெதுக்குங்க.... நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச இந்திரன் படத்தின் விமர்சனம் இன்னைக்கு ராத்திரி வலை ஏற்றம் செய்வான் பித்தன். கண்டிப்பா உங்க எல்லோரையும் விட நான்தான் முதலில் படம் பார்ப்பேன்........

இது எப்படி இருக்கு.....? ;

வயித்தெரிச்சலும் வைத்தியரும்

சின்ன வயசிலிருந்தே சீக்குன்னு வந்தால் பக்குன்னு இருக்கும். அப்போ ஊசிக்கு..., இப்போ காசுக்கு பயம். பத்து நாளாய் வயிறு எரியுதுன்னு (என்னது... யாரப் பார்த்தா....?) வைத்தியரப் பார்கலான்ம்னு அந்த பெரிய மருத்துவமனைக்கு என்னோட பெட்டெர் ஹபோட போனேன். ஒவ்வொன்னும் ஒவ்வொரு இடத்தில் இருக்கு, அறை அறையா அலைஞ்சாலே ஆயுள் நீடிக்கும்.

முதலில் அனுமதி சீட்டு வாங்க அரைமணி நேர காத்திருத்தலுக்குப் பின் என் முறை வந்ததும் பட்சி எந்த மருத்துவர பாக்கனும்னு கேட்டுச்சி, நமக்கு அதெல்லாம் தெரியாது, விலங்கியல் படிச்ச வீட்டாம்மா கிட்ட கேட்டதுக்கு.... எண்டோக்ரைனாலாஜின்னு சொன்னதும், பட்சி 'பதிய' ஒரு பெரிய கோப்பைக் கொடுத்து,

"இத பூர்த்தி செய்யுங்கன்னு" சொல்லுச்சி. படிக்கிற காலத்திலிருந்தே ஃபாரம் பூர்த்தி செய்யுறது படபடப்பான ஒரு செயல். அதனால அத நம்ம பாரியாகிட்ட கொடுத்தேன். பூர்த்தி செய்து மறுபடி பட்சி கிட்ட போயி நின்னா.... ஒரு பேப்பர நீட்டி "நேரா அறை எண் இருநூத்தி அஞ்சுக்கு போயிக்கோன்னு..." பறைஞ்சது.

விதி வலியதுன்னு விருந்தாளிய விரட்ட முடியுமா...?, நீண்ட வரிசைக் கடந்து மருத்துவர காணும் பாக்கியம் கிட்டியது. "சொல்லுங்க..., என்ன ப்ராப்ளம்ன்னு?" கேட்டவரு கிட்ட "சார், பத்து நாளா வயிறு எரியுதுன்னு" சொன்னா....? "யாரப் பாத்துன்னு...?" மொக்கப் போட்டாரு மறுத்துவரு. ஆஹா ஆளு அறப்பிளேடோட அலைவாரு போலன்னு, ஆத்திரத்த அடக்கி அப்பாவியா சிரிச்சேன் நக்கல் பண்ணிக்கொண்டே நாலு டெஸ்ட எழுதிக் கொடுத்தாரு. "இத எடுத்துட்டு வாங்க, அப்புறோம் பாக்கலாம்னு..." அனுப்பிட்டாரு. வயித்தெரிச்சல் கரையுமுன்னே வைப்புநிதி கரையும்போலன்னு விதிய நிந்திச்சே.....

மறுபடி பட்சிகிட்டப் போயி விவரம் கேட்டேன். ஒன்னொண்ணுக்கும் தனித்தனியா சிலிப் கொடுத்து, 'சீறிச்சி' சாரி சிரிச்சி வச்சுது சேச்சி. நீர்
மலம்ன்னு முக்கி எடுத்து சில (Money) கரைந்தபின் தகவலை மறுபடி மருத்துவரிடம் காட்டினால்.... உங்களுக்கு ரத்த அழுத்தம் இல்ல (இனிமேதான் வரும்), சக்கரை இல்ல (அதுதான் எனக்கேத் தெரியுமே....!)" "ஆமா சார்ன்னு...." சொன்னா "அப்போ ஏன் என்ன பாக்க வந்தீங்கன்னு....?" கேட்டாரு ஒரு கேள்வி, ராஜ முழி முழித்த திருடனாக நான் விழிக்க, "இல்ல சார், அல்சரிக் போல இருக்குன்னு...." சொன்னா. நீங்க பாக்க வேண்டியது வாயு நிபுனரன்னு என்ன மறுபடி சேச்சியிடம் அனுப்பினார்.

சேச்சி காஸ்ட்ரோக்கு CASE-SHEET கொடுத்து அனுப்பியது.
அவரும் வாயுவ வாய்வழியா கேட்டே.... அத சாப்பிடாதீங்க இதச் சாப்பிடாதீங்கன்னு.... அட்ரீனல சுரக்க வச்சாரு. சாமு, சாபிக்கு பின்னுன்னு சில மாத்திரைகளக் கொடுத்து, சாப்பாட குறைக்கச் சொன்னாரு.

பாத்துன்னு சொன்னாலே பத்து நாளைக்கு பட்டினி போடுவா பத்தினி, இதுல வாயுன்னு சொல்லி வயித்தையே வத்தலாப் போடுறா.

டிஸ்கி : நாடி பிடிப்பதும் பாடி தொடுதலும் ஐய்யனோட போனதோ...?
இல்லை 'ஐ'பாடாய் போனதோ...? (ஆப்பிள் நிறுவனம் 'ஐ'பாடில் ஸ்டெத்ஸ் கொண்டுவந்துள்ளது),என்று பெரிய ஐய்யப்பாடு எழுகிறது
;
 

Blogger