Pages

மாயாண்டி குடும்பத்தார் - விமர்சனம்

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தருண் கோபி, மணிவண்ணன், ராஜ்கபூர், G M குமார், பொன்வண்ணன், சீமான், சிங்கம் புலி, ரவி மரியா, நந்தா பெரியசாமி, ஜகன்னாத், தமிழரசி, பூங்கொடி
நெறியாள்கை : ராசு மதுரவன்
மியூசிக் : சபேஷ் முரளி

மாயாண்டி குடும்பத்தை சுற்றியே கதை நகர்கிறது, பங்காளி சண்டையை பற்றிய கதைதான் என்றாலும், அந்த மதுரை மண் மணத்தை கண் முன் நிறுத்துகிறார் ராசு மதுரவன். ஐந்து பிள்ளைகளைப் பெற்ற மாயாண்டி திடீர்யென இறந்து போக கடைசி மகனின் நிலைதான் கதை. அந்த கடைசி மகனின் பார்வையில் இருந்து கதை சொல்லி இருக்கிறார். சீமான் தானே எழுதிய பாடலைப் பாடி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது, பாடலில் ரத்தத்தை சூடேற்றும் வரிகள் தெறிக்கின்றன.

மனைவிகள் தம்பியைப் புறக்கணிக்கும் போதெல்லாம், அண்ணன்கள் உருகி உருகி தம்பியை உபசரிப்பது அருமை. கள்ளக் காதலையே தெரிந்து செய்யும் போது கூடப் பிறந்த பொறப்புக்கு செய்வதை தெரியாமல் செய்யவேண்டியிருக்கிறது (பொட்டில் அடித்த உண்மை - சபாஷ் ராசு மதுரவன்)

இசை சபேஷ் முரளி, பாடல்கள் பின்னணி இசை மதுரை மணத்தை தேனாகப் பாயவைக்கிறது சபாஷ்!!.

மாயாண்டி குடும்பத்தார் - நாமும் தைரியமாக போய் அவர்களுடன் கறிசோறு சாப்பிடலாம். ;

2 comments:

Noorul said...

"we are born in same family but they came from different family. so they can't understand our relationship"- Ponnvannan to Tarun Gopi.

Noorul said...

whenever That "Muthuku Muthaaga" song hears, all r having tears in their eyes.

Singam Puli's comdey s super. His Dialogue make the film more hilarious. His portion makes the film ENJOYABLE.

 

Blogger