Pages

பொருள் பாலித்து அருள் தேடும் நித்தியானந்தா.....

மறுபடியும் லைம் லைட்டில் வந்திருக்கிறான் நித்யானந்தா. இந்த முறை அவன் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மதம் மற்றும் இனம்.

தான் ஒரு தமிழன் என்றும் அதனால்தான் தன்னை கர்நாடகா அரசு முடக்க நினைக்கிறது அதுமட்டுமில்லாமல் தான் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதால் தன் மீது வீண் பழி சுமத்தப் படுகிறது என்றும் சொல்லி தன் மீது ஒரு இரக்கத்தை உருவாக்க நினைக்கிறான். தன் அரசியல் வட்ட, பண பலத்திலும் தனக்கு சாதகமாக போராட்டம், மறியல் என்று செய்யவைத்து தன் தவறுகளை மறைக்க முயற்சி செய்கிறான்.

தன் பெண் பித்துத்தனத்தை யோகி என்ற பெயரால் மறைத்து, இந்தனை நாள் கபட வேஷமிட்டு மக்களை ஏமாற்றியது போதாதென்று, இப்பொழுது மதக் கலவரத்தையும் ஜாதி வெறியையும் தூண்டி விடுகிறான். கடவுளாகவே தன்னை நினைத்துக் கொண்டு இந்த நவீன சாமியார்களின் ஆட்டம் ரொம்பத்தான் அதிகமாகப் போகிறது. இதற்கிடையில் மீண்டும் இவன் ரஞ்சிதாவை சந்தித்து தன்னை காட்டிக் கொடுக்க வேண்டாம் என்றும் கெஞ்சியுள்ளார் (கொஞ்சியபோதே குழந்தவர்).

அவன் என்ன கருமத்தையாவது செய்து தொலைக்கட்டும், எதற்கு மக்கள் மீது ஜாதி மதக் கலவரத்தை ஏவி விடுகிறான். ஏண்டா நீ என்ன ஜாதியா இருந்தா என்ன எந்த இனமா இருந்தா என்ன? வேசித்தனத்த வெறுங்கையில மூடப் பாக்குறியே. தன்னையே இருளிலும் இழிவிலும் தள்ளியது போதாதென்று தன் ஜாதி, மத மற்றும் இன மக்களையும் கூட்டு சேர்த்துக் கொல்ல பார்க்கிறான்.

இந்த ஒரு விஷயத்தை வைத்தே (ஜாதி மதக் கலவரத்தை தூண்டியதாக) இவன் மீது கேஸ் பதிவு செய்ய வேண்டும். மீண்டும் தன் சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளான். முழு மூச்சாக ஆசிரமகாரியங்களில் ஈடுபடுகிறான் இந்த காமுகன் மறுபடி ஏதும் பூதம் கிளம்பாமல் இருக்க வேண்டும்.

தன்னை இந்த வழக்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ள அருள் பாலித்தது போதாதென்று, இப்பொழுது பொருள் பாலித்து விடுதலை தேடி அலைகிறான். ;

குப்ப மேட்டரு...



செம்மொழி மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. வந்திருந்த தலைவர் குடும்பம், கட்சி தொண்டரடிப் பொடியர்கள் என்று கோவையே அதகளப் பட்டது. எல்லா கவிஞ்சர்களும் தலைவர் புகழ் பாடும் ஒரு மேடையாகவே இதை உருமாற்றினர். பலவித கருத்துகள் விமர்சனங்களையும் புறம் தள்ளிய இதன் வெற்றி கவனிக்கத் தக்கது. இது ஒரு தனி மனிதனின் கனவு. உலகமே இன்று தமிழையும் தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த ஒரு மாநாடு.


One Man Show
--------------XXX------------------XXX------------------
நம்ம அணு ஹாசனுக்கு மறுமணம் நடக்க உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு விகாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது, விகாஸ் ராணுவத்தில் பணி புரிந்தார். அந்த மன முறிவுக்குப் பின் மீண்டும் இவருக்கு காதல் அரும்பியிருக்கிறது இந்த திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.


Happy and long Married life
--------------XXX------------------XXX------------------
சமீபத்தில் வலையுலகில் நடந்தது ஓய்ந்த பிரச்சனையின் வீரியம் குறைந்து போன நிலையில், மறுபடியும் காரணகர்த்தாவை ஏழுத அழைக்குது நட்பு வட்டம். ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா....? வருவது தவறில்லை மீண்டும் தவறிகூட இந்த தவறைச் செய்யக்கூடாது.


Dont go to pavilion
--------------XXX------------------XXX------------------
சூப்பர் சிங்கர் போன்றே சன்டிவியும் சங்கீத மகா யுத்தம் என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். இது நாளடைவில் ஏனைய கலக்கப் போவது, கவுத்தி அடிப்பது போன்ற நிகழ்ச்சிகளை விழுங்கி ஏப்பம் விட்டது போல, இந்த சங்கீத மகா யுத்தம் சுப்பர் சிங்கரையும் விழுங்கி ஏப்பம் விடும் என்பதில் ஐய்யமில்லை.


Cut throat competition
--------------XXX------------------XXX------------------
கேப்டன் மிக மும்மரமாக அம்மாவுடன் சிட்டிங்கில் இருக்கிறார். தேர்தல் செலவு, குறைந்தது பதினைந்து சீட் என்று ஏகப்பட்ட கண்டிசன்கள். அப்போ இவ்வளவு நாள் தனித்து போட்டியிடிவேன்ன்னு சொன்னதெல்லாம் சும்மாவா...... கட்சியாவது கொள்கையாவது......


Money Makes many things possible
--------------XXX------------------XXX------------------
ராவணன் சரியாக நின்று போரிடாததால்.... சிங்கம் சீறிப் பாய்கிறது, இருந்தும் படத்தில் பணிபுரிந்த எல்லோரையும் வைத்து தினுசு தினுசான விளம்பர யுக்திகளை கடைப் பிடித்து, அதன் வேகத்தை கூட்ட முயற்ச்சிக்கிறது தயாரிப்பு தரப்பு. விட்டால் தியேட்டரில் சமோசா போண்டா விற்பவரைக் கூட பேட்டி எடுத்துப் போடுவார்கள்.


Marketing Strategy

;

ஜால்ரா வாசிக்கும் சூர்யா...!

நம்ம சூர்யா பெங்களூரிலிருந்து வெளிவரும் மிர்ரர் நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் அதில் அவர் :-

"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன். நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?" நன்றி தமிழ் சினிமா.காம்


ஏண்டா போனது பூனைக்கு பாலூட்ட, ஆனா வழியில புலிக்கு புல்லு புடுங்கி போட்டுட்டு வந்தேன்னு அவன் சொன்னா அதை இவர் ரொம்ப மெனக்கெட்டு 'அவன் ரொம்ப நல்லவன்னு' சொல்லுறாரு.
'எவன் பொண்டாட்டி எவங் கூட போனாலும், போக்கத்தவனுக்கு பொரிகடலன்னு' சொல்லுராமாதிரி தன் படம் எப்படியாவது ஓடவேண்டும் என்று இவர் கரிசனம் காட்டுவது தெரிகிறது.

திரைப்படம் என்பது நிறைய பேரின் முயற்சி, உழைப்பு, ரத்தம் சதை இத்யாதி இதாதி..... ஆனால் தமிழ் சனத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்காமல் இருக்கும் நிலையில், பிடில் வாசித்தவர் நம்ம இலங்கை அதிபர். அதுக்கு ஓபராய் ஒத்து ஊதிட்டு வந்தாருன்னா, சூர்யா இப்போ பெரிய ஜால்ரா எடுத்து வாசிக்கிறார்.

புகழ் ஏணியில் இருப்பவர் இதுபோல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது அவரது வளர்ச்சிக்கு நல்லதல்ல. கண்டிப்பாக ரத்த சரித்திரா தமிழ்நாட்டில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் செய்வார்களா.....? ;

சீமான் ஒரு முனை மழுங்கிய கத்தி

தமிழ் இனத்தின் போர்வாள் என்று சமீபகாலமாக உணர்வாளர்களால் கொண்டாடப்படுகிறார் சீமான். ஆனால் அந்த வாள் அவ்வப்போது மொக்கையாகிவிடுவதும் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது அவரது சமீபத்திய முடிவொன்று! தமிழினத்தின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போய் ஆட்டம் போட்ட பாலிவுட் நடிகர்களின் படங்களை தமிழகத்தில் எங்கும் ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று முழங்கிய சீமான், தனது கொள்கையிலிருந்து வழுக்கி விழுந்திருக்கிறார். அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணத்தை அவரது தம்பிகளே ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் பெருத்த சந்தேகம்!

சூர்யாவும், விவேக் ஓபராயும் நடித்த ரத்த சரித்திரம் படத்தைதான் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போனவர்தான் இந்த விவேக் ஓபராய். அதுமட்டுமல்ல, அங்கு போய் ராஜபக்சேவின் உத்தரவை ஏற்று அங்குள்ள 52 தமிழ் ஜோடிகளுக்கு தனது தலைமையில் திருமணமும் செய்து வைத்தவர்.
இந்த விவேக் ஓபராய் தன்னை ஒரு தமிழர் என்று கூறிக் கொள்பவர் தன தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லி வருகிறார். அவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் முன்னணி நடிகர்களே போக மாட்டேன் என்று சொல்லிய பின்னும் இவர் இலங்கை சென்று விழாவைச் சிறப்பித்து வந்திருக்கிறார்.


இப்பொழுது அவர் செய்ததே மேல், சீமான் தன்னை புலி என்றே பிரகடனப் படுத்தி வருபவர். ஏனைய திராவிடக் கட்சிகள் வாய்ப்பிருந்தும் வாய்திறக்காமல் ஊமையாய் இருக்கும் நிலையில், நாங்கள் தீவிர தமிழ் விடுதலைக்காக போராடுவோம்ன்னு முழங்கி, சமீபத்தில் தான் நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே தன் நிலையிலிருந்து தலைக் குப்புற விழுவார் என்று அவர் தம்பிகள் நினைத்திருக்க மாட்டார்கள்.


இது ஏன் என்றால் அடுத்து அவர் தம்பி சூர்யாவிடம் தன் படத்தில் நடிக்கக் கேட்டு காத்திருக்கிறார், இப்பொழுது இந்த படத்தில் சூர்யாவும் இருக்கிறார் அதனால் இந்த படத்தை வெளியிட தடை வேண்டாம் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தனக்கு ஒரு நாயம் மற்றவர்கள்ளுக்கு ஒரு நாயமா......?
என்னே ஒரு


தமிழ் வீரம் தன்னை திரு.பிரபாகரனின் உடன்பிறவா சகோதரர் என்று மேடைக்கு மேடை முழங்கும் சீமானை அண்ணனே இவரது இந்த முடிவை ஏற்றுக் கொள்ளமாட்டார். இப்போ இவருக்கும் இந்த திராவிடக் கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம். தனது முடிவை இவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். செய்வாரா.....?

கொள்கையா போடா புண்ணாக்கு.....!

;

நித்தியானந்தாக்கு உள்ள சக்தி.....

அல்லார்க்கும் வந்கம்பா

நம்ம நித்தி வெளியே வந்து என்னவோ யாகம் பாண்ணுராராமே தின்திக்கும் ஒரு தபா இந்த யாகம் பாண்ணுராராமே? இதில இன்னா குத்துதுன்னா ஆசரமத்தில கீற அல்லகையுங்கோ இது ராமாயணத்துல சீதாதேவி தன் மேல போட்ட பழிய ஃபரூப் பண்ணுறதுக் கோசரம் தீல குதிச்சாங்கோ இல்ல அது போலன்னு சொல்லுராங்கோ.

கேக்குறவன் கேணயனா இர்ந்தா கோலிகுண்டுல ஹாலிவுட்ட சுத்துநேன்னு சொல்லுவாங்கோ. இந்தாளு எத்த சொன்னாலும் அத நம்புறதுக்கு ஒரு முட்டாக் கூட்டம் இருக்கு.
ஏண்டா உங்க அட்ராசிட்டிக்கு அளவே கிடையாதா...? யார உயர்த்திப் பிடிக்க யார தாழ்த்துரீங்கோ? இந்தாளு பிரம்மச்சரியத்த
மயிண்டன்பண்ணாம, எவளோடவோ படுத்துட்டு வந்து நான் தூமையானவன்ன்னு சாரிங்கோ தூய்மையானவன்னு சொல்லுரான்னா.... இவன் எவ்வளோ பெரிய டுபாகூரா இர்பான்.
இவன் படுத்தது ஒன்யும் பத்தினி கூட இல்ல, ஆனா அந்த பன்னி இப்போ அமெரிக்க போயிடிச்சு, அவ அப்பன் அங்கே கீரானாமாம்.

இனிமே இந்தாளு நல்லவரு வல்லவருன்னு சொல்லி சொல்லி அவரு இமேஜ ஹயிட் பண்ணிப்பாரு. அப்போ இவ்வளவு நாளும் இவர் கதவத் திற காத்து வரட்டும்னு சொன்னதெல்லாம் சும்மனாச்சுக்கும். நான் தெரியாமத்தான் கேட்க்குறேன் சந்நியாசம்னா இன்னாபா....? எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பாக்காம ஆண்டவனையே தின்துக்கும் ஃபீல் பாண்ணிக்கிட்டு இருக்கோணும். இந்த பராரி பஜாரித்தனம் பண்ணிட்டு நான் புனிதமானவன்ன்னு உடால் உட்டுக்னு கீறான்.

உன்குத் தேவைன்னா அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஃபாரினோ பரலோகமோ போக வேண்டியதுதானே, திரும்ப ஏண்டா சாமின்னு சொல்லி கமால் காட்டிக்குற. இதுல கோர்ட்டு இனி உன்ன ஆராண்டயும் கடவுளைப் பத்தி பேசக் கூடாதுன்னு சொல்லி கீது, நீ திரும்ப நான் நல்லவன் வல்லவன்னு சொல்லி கல்லா கட்டப் பாக்குற.

நான்ச் சொல்லுறதே எவன் கேக்கப் போறான், இனிமே நித்திய சுத்தி பக்தர்கள் கூட்டம் பல்லிளிக்கும், பவனி வரும், நித்திக்கு பணம் வரும்.

ஹ்ம்ம் நம்ம போயப்பச் சொல்லு.... கொட்டருக்கு மீட்டரப் போடணும்னா, முட்டி தேயனும், ஆனா இவனுக்கும் முட்டி தேயுது எதுக்கு.......? ;

விஜய்யின் தொடர் தோல்வி ஏன் - ஒரு அலசல்

நீங்கள் இளைய தலைவலி விஜய் பத்தின இடுக்கை என்று நினைத்து வந்திருந்தால்.... உடனே உங்கள் இருக்கையை காலி செய்யுங்கள், இது கிரிகெட் player முரளி விஜய் பத்தினது.

எல்லா கிரிகெட் வீரருக்கும் ஒரு Patchy Days இருக்கும் நம்ம தமிழாக வீரர் முரளி விஜய்க்கும் இப்போ அதுபோல் ஒரு shape out Days. ஸ்ரீகாந்த்க்குப் பிறகு 2007 வரை இந்திய அணியில் தமிழக வீரர்கள் யாருமே நிலையான ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இப்பொழுது region வாரியாக தேர்வு நடைபெறுவதால் நம்ம முரளி விஜய் அணியில் இடம் பெறமுடிகிறது.

வாய்ப்பு கிடைக்காமல் எத்தனையோ பேர் வாய்பிளந்து இருக்கையில், கிடைத்த வாய்ப்பை வாயில்போட்டு, நம் அனைவரின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொடிருக்கிறார் இவர்.

சீக்கா 1981 தன் முதல் ஒருநாள் போட்டியில் எடுத்த ரன்கள் பூஜ்ஜியம். ஆனால் தன் வித்தியாச பேட்டிங் திறமையால் 1992 வரை இந்திய அணியின் அவர் நடத்தியது தனி ராஜ்ஜியம், அசைக்க முடியாத துவக்க ஆட்டக்காரராக இருந்தார். அவர் மூன்று உலகக் கோப்பையில் விளையாடியவர். இந்தியா வென்ற ப்ருடென்ஷியல் உலகக் கோப்பை அணியில் இருந்தவர்.

சீக்காதான் இன்றைய அதிரடி ஆட்டத்துக்கெல்லாம் முன்னோடி. விவியன் ரிச்சர்ட்ஸ் ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் எடுத்தபோது, இந்த சாதனையை யார் முறியடிப்பார் என்று எதிபார்கிரீர்கள் என்று கேட்ட போது சீக்காதான் அடிப்பார் என்று சொன்னார்.

2008ல் முரளி விஜய் அபினவ் முகுந்த் என்பவருடன் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட் partnership 462 ரன்கள் குவித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த IPL தொடரிலும் தன் அதிரடி ஆட்டத்தை நீருபித்த அவரால் ஜிம்பாப்வே தொடரில் சோபிக்க முடியவில்லை. இதுவரை ஆடிய நான்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் மொத்தமே 71 ரன்கள்தான் எடுத்திருக்கிறார் அதில் அதிகபட்ச ஸ்கோர் 25.

வாய்ப்பு கிடைக்காமல் வாடிநிர்போர் பலரிருக்க கிடைத்த வாய்ப்பை வளைச்சுப் பிடிக்காமல் வழுக்கி விழுந்திருக்கிறார்.
IPLல் ஜொலித்தவர் இப்பொழுது தொங்கியதன் காரணி பல இருக்கலாம். இந்திய ஆடுகள தன்மை, சீதோஷ்ணநிலை, எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களின் பவுசு என நிறைய காரணிகள். முதல் சுற்று சறுக்கினாலும் அடுத்த சுற்றில் முறுக்கி எழ வேண்டும் என்பதே நம் அவா காத்திருப்போம். ;

ராம ராவணன் - ஒரு சர்ச்சை

விடுதலைப்புலிகள் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் மலையாள படமான ராம ராவணன் படம் குறித்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் :-


சிங்களத்தையும் புத்தத்தையும் உயர்த்திப் பிடிக்கும், தமிழினத்தைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் இந்தப் படத்தை, சமய சகுனிப் படமாகவே கருதுகிறோம். தமிழினத்துக்கும் தமிழீழ விடுதலைக்கும் களங்கம் கற்பிக்கவே இப்படத்தை இங்கு வெளியிட முனைகிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் மறைந்துள்ள சதி எதுவாக இருந்தாலும் அதனை வெளிக் கொணர்வோம்.
கேரளாவிலிருந்து வந்து ஈழப் போராட்டத்தையும் தமிழர்களின் மனநிலையையும் வேறு கண்ணோட்டத்தோடு புரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் வேதனை புரியாது.


ஆனால் இந்த படத்தின் ஹீரோ சுரேஷ் கோபி நாங்கள் மலையாளிகளாக இருந்தாலும் தமிழர்களின் வலிகளைப் புரிந்து படம் எடுத்திருக்கிறோம், அவர்களின் உணர்வுகளைப் சரியாக பிரதிபளித்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

ஒரு உலக பிரச்சனையை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதன் வலி தெரிவதில்லை.

உலகமே நம் இனம் அழிவதை வேடிக்கைப் பார்க்கும்போது, அண்டை மாநிலத்தவரான இவர்கள், இதுமாதிரி ஒரு படத்தை எடுத்திருப்பது நம்மை மீண்டும் சீண்டுவதாகவே இருக்கும். தமிழனின் பிரச்சனையை தன் பிரச்சனையாக நினைப்பார்களேயானால் இதுமாதிரி ஒரு படத்தை எடுக்கவே முன் வந்திருக்கக் கூடாது. இது எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது போலத்தான்.

ஒரு விஷயத்தின் அடியோ முடியோ தெரியாதபோது வாயையும் 'சூ'வையும் பொத்திக் கொண்டிருப்பதே அவர்கள் நமக்குச் செய்யும் இமாலய உதவி.

சீமான் இதை தமிழ்நாட்டில் விளியிட தடை விதிக்கக் கோரியிருக்கிறார் ஆனால் இதை வேறு எங்குமே வெளியிட நிரந்தரத் தடை விதிப்பது சாலச் சிறந்தது. செய்வார்களா......?

;

குப்ப மேட்டரு...

வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!
சூர்யா ஜோதிகா தம்பதிக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது. ஏற்கனவே இவர்களுக்கு தியா என்கிற பெண் குழந்தை இருப்பது ஊருக்கே தெரிஞ்ச விஷயம்தானே.
--------------XXX------------------XXX------------------
1984ம் வருடம் போபாலில் வெளியான விஷவாயு காரணமாக அதன் சுற்றுப்பகுதியில் வசித்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டனர், பிறந்த குழந்தைகள் கூட ஊனமாகப் பிறந்தன. அந்த வழக்கில் இன்றுதான் தீர்ப்பு வந்தது எட்டு பேருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை, கொடுக்கும்போதே அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப் பட்டுடிருக்கிறது.

மிக மிகத் தாமதமான தீர்ப்பு தந்ததோடல்லாமல், குறைந்த பட்ச தண்டனை என்பது இறந்த மற்றும் வாழ்விழந்த ஆன்மாக்களுக்கு செய்த ஆகப் பெரிய அநீதி.

DELAYED JUSTICE IS DENIED JUSTICE
--------------XXX------------------XXX------------------
நேற்று விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் மெட்ரிகுலேசன் பள்ளி சங்கத் தலைவர்
ஒரு கேள்வியை எதிர்கொள்ளும்போது, வசதி இருந்தா மெட்ரிக் பள்ளிக்குப் போங்க, இல்லனா அரசு பள்ளிக்குப் போங்கன்னு சொன்னார். இதுமாதிரி ஒரு போது வெளியில் பேசும்போது குறைத்தபட்ச சபை நாகரீகமில்லாமல் இவ்வாறு அவர் பேசியது மிகவும் கண்டிக்கத் தக்கது. மேலும் அவர் தனது வயதுக்கு மீறிய கோபத்தோடு எதிரணியினரை எதிர்கொண்டார்.

தன் தரப்பு வாதத்தையும் நியாயத்தையும் சொல்ல அவருக்கு எல்லா உரிமையும் உண்டு, ஆனால்... பெற்றோரைப் பார்த்து உன்னால் சமாளிக்க முடியவில்லை என்றால் வேறு பள்ளிக்குப் போ என்று சொல்ல எந்த அதிகாரமும் இல்லை.

Because EDUCATION IS RIGHT OF EVERY CHILD
--------------XXX------------------XXX------------------
நயன்தாராவும் பிரபு தேவாவும் திருமணம் செய்துக் கொண்டார்கள். பிரபுதேவா பெற்றோர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள். அப்படி என்ன சிறப்பு இந்த திருமணத்தில்? சிம்புவுடன் காதல் முறிவு, பலப் பல கிசு கிசு எல்லாவற்றையும்தாண்டி இந்த திருமணம் அரங்கேறியிருக்கிறது. ஆனால் பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் அதுவும் வீட்டை எதிர்த்து! எங்கே போனது அந்த காதல்...?

WHAT IS THERE IN EXTRA-MARITAL AFFAIRS OTHERTHAN FLUSH.
--------------XXX------------------XXX------------------
குஷ்பூவைத் தொடர்ந்து, மேலும் பல நடிகைகள் அரசியலுக்குள் விழ துடித்துக் கொண்டிருக்கிறார்களாம். சாக்கடை என்றான பிறகு பண்ணி மேய்ந்தாலென்ன பாம்பு மிதந்தாலென்ன, பாமரன் பம்மத்தான் செய்வான்.
--------------XXX------------------XXX------------------
பய்யாவும் பாப்பாவும் லவ்வோ லவ்வுகிறார்களாம் இது ஐய்யாவுக்கு பிடிக்காமல் அர்ச்சனை நடந்ததாம். பய்யா நேராக அண்ணியிடம் போக வேண்டியதுதானே, அனுபவத்தால் ஆதரிப்பாரோ....? ;

பத்திக்கிட்டு எரியுது பதிவு உலகம்

வலையுலகமே வருத்தத்தோட இருக்கு.
ஊதிப் பெரிதாக்க, ஒரு கூட்டம்
ஊத்தி மூட, ஒரு கூட்டம்
ஊமையாய் ஓர் கூட்டம்ன்னு....
ஒரே கூட்ட நெரிசல்.

எங்கெங்கானினும்... அங்கெங்கொணாதபடி
பதிவின் படையல்.
பட்டதை, பார்த்ததைப்,
படித்ததை என பலவற்றைப் பரிமாறி,
படிப்போரை வெறுப்பேற்றி,
பட்டோரை சூடேற்றி,
பசியாற முடியாமல்
பட்டினியாய் இருக்கின்றோம்.
--------------XXX------------------XXX------------------
புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மட்டங்காடு கிராமத்தில்.
ஒரு பெண், தன்னை காதலிக்க வேண்டும் என்பதற்காக அவளை வன்புணர்ச்சி செய்து, அதை கைப்பேசியில் பதிந்து, அவளை தனக்கு கல்யாணம் செய்து வைக்கும்படி சொல்லி வருகிறான் செந்தில். போலீசில் ஊர் உலகத்தில் இதுபோல்தானே நடக்கிறதுன்னு...! ரொம்ப நக்கலாக பதில் சொல்லியிருக்கிறான்.

அந்த பெண் இவனை இப்பொழுதும் மணக்க விரும்ப வில்லை. இவனுக்குத் தரும் தண்டனை இனி இதுபோல் யாரும் யோசனை கூட செய்யக் கூடாது. பெண்களின் கற்பு மலிந்து விடவில்லை என்பதற்கு இவன் தண்டனை ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

நடக்குமா.....?
--------------XXX------------------XXX------------------
கேப்டன் பெரிய மகனும் மோதலுக்கு தயார் ஆகிறார். சீவி சிங்காரிச்சி ஷோக்கா இருந்தாலும்...., போஷாக்கா இருக்க முடியுமா...? அதனால் முட்டி தேய பஸ்கி எடுக்கிறாராம். வாங்க வாங்க...
--------------XXX------------------XXX------------------
சீரா படம் வந்தாலும், சேர வாரி இறைக்குது நம்ம இளைய தளபதி தலையில. நஷ்ட ஈடு தியேட்டர் உரிமையாளர்கள் கேட்டும், தம்பி செவிசாய்க்க வில்லை. தன் அடுத்த பட விநியோக உரிமையை வாங்கி வச்சிருக்காரு.

சத்தா.... இருந்தா..... சத்தம் போட்டு சொல்லலாம்....!
வெத்தா இருந்தா.... வச்சுக்கவா முடியும்....
யோசிப்பாரா இளைய தளபதி...?
--------------XXX------------------XXX------------------
தனது சொந்தங்களுக்கு அரசாங்கத்தில் பதவி கேட்டால் முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடிக்கச்சொன்ன டாக்டர், தற்போது தனது மகனுக்கு ராஜ்யசபா சீட்டுக்காக கருணாநிதியிடம் கெஞ்ச வேண்டிடிய அவலமான நிலை!

எல்லாம் பதவி படுத்தும் பாடு.

;
 

Blogger