Pages

குப்ப மேட்டரு....

எந்திரன் படத்தை இங்கே தோஹாவில் ஒரு மொக்கை தியேட்டரில் பார்த்தேன். நம்ம ஊர் டென்ட் கொட்டகைப் போல் ஓடிச் சென்று இடம் பிடிக்க வேண்டும். வரிசை எண் பிரிண்ட் செய்திருந்தாலும், யாரும் அது படி அமருவதில்லை. 'ஒலி' அமைப்பு மிக மட்டமாக இருந்தது. இந்த மாதிரி ஒரு technically uphold படத்தை மோசமான திரையரங்கில் பார்க்க நேர்ந்தது என் முன்வினை. ஆனால் இங்கே audiience பொதுவாகவே 'சத்யம்' 'ஐநாக்ஸ்' வகையைச் சேர்ந்தவர்கள், ஒரு காமடி காட்சி வந்தாலும், உதட்டோரப் புன்னைகை சிந்தி, சத்தம் வராமல் கை தட்டி ரசிப்பார்கள், ஆனால் அன்று அதற்க்கு நேர்மாறாக விசிலும், டான்சும் விண்ணைத் தொட்டது.
--------------XXX------------------XXX------------------
தோணி தலைமையில் இப்போ உள்ள அணி சிறப்ப்பகவே செயல்படுகிறது, நேற்று நடந்த அஸ்த்ரேலிய அணிக்கு எதிரான மேட்சில், அனாயசமாக ஆடி வென்றுவிட்டது. சில நாட்கள் வெளியில் இருந்து, மீண்டும் தனது இருப்பை ரன்களால் உறுதி செய்திருக்கிறார் யுவராஜ். முந்நூறு ரன்களுக்கு அருகில் சேஸ், நடுத்தர வரிசை சிறப்பான ஆட்டத்தினால் சுளுவான வெற்றியைப் பிடிக்க முடிந்தது. ரெய்னாவின் ஆட்டம் குறிப்பிடப் பட வேண்டியது, என்ன ஒரு பொறுப்புடன் அதே சமயம் consistency maitain செய்கிறார். உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் இதுமாதி சோதனை முயற்சி செய்து புதுப் புது வீரர்களைத் தயார் படுத்தி வைத்தால்...., ஆபத்தில் உதவுவார்கள். இனி வரும் காலம் இளைஞர்கள் கையில் சந்தேகமே இல்லை.
--------------XXX------------------XXX------------------
எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது ரஜினி இன்னும் நிறைய விழாக்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் (என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்......!) படம் கண்டிப்பாக ஒரு வருடம் ஓட்டப் படும். என்ன அதற்குள் காட்சிக்கு காட்சி ஒரு விழா எடுத்து களிப்புருவார்கள்.
--------------XXX------------------XXX------------------
நண்பர் ராஜூவின் கதை மலர்வாசகன்.! அருமையான எழுத்துநடையிலும், தேர்ந்த வார்த்தைக் கோர்வையாலும் அசத்தியிருக்கிறார். படித்துத்தான் பாருங்களேன்.
--------------XXX------------------XXX------------------
நண்பர்கள் சிலரது வீட்டில் தொலைகாட்சி, ரேடியோ முதலான நேரக் கொல்லிகள் இல்லை. "எப்படி நேரம் போகிறதுன்னு..?" கேட்டால்.....! "இப்போதான் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட முடிகிறது, மிகுந்த நேரம் கிடைப்பதால்.... மனைவிக்கும் வீட்டு வேளைகளில், பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதில் உதவி செய்ய முடிகிறது. அதனால் பல நேர வெட்டி சண்டைகள் குறைந்து, ஒருவித அமைதி திரும்பியிருக்கிறது" என்றனர். என் நாட்கள் ரிமோட்டுடந்தான் விடிந்து, அடைகிறது, சில நேரம் அலாரமும் டிவியிலேயே செட் செய்து தூங்கிப் போகிறேன். ;

எந்திரன் - ஒரு பார்வை

வலை உலகில் முதல் முறையாக..................

கதை,வசனம் சுஜாதா, சங்கர் மற்றும் வைரமுத்து மகன் கார்கி. கதையை தேய்த்து செய்திருப்பதில் இம்மூவரின் பங்கும் ரொம்ப முக்கியம். என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா இவர் இல்லை என்றால்....... அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆங்காங்கே விஞ்ஞான தகவல்களைத் தூவி தன்னை நிருபித்துக் கொள்கிறார். மனிதர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். 'பி' 'சி' சென்டருக்கும் புரியும்படி எளிய விளக்கங்களைக் கொடுத்து கதையை தோள் கொடுத்து நடத்தியிருக்கிறார். hats off to him....

உலகமே எதிர்பார்த்த மாபெரும் படம், அந்த எதிர்பார்ப்பை இருநூறு சதம் நிறைவேற்றி இருக்கிறது. கண்டிப்பா எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி இந்த படம். தமிழில் ஒரு புது முயற்சி, இன்னும் என்ன என்ன வேண்டுமோ அதெல்லாம் நிரப்பிக் கொள்ளுங்கள். கதை ஒரு வரியில் சொல்லி விடக் கூடியதுதான், அதை சொல்லிய விதம் தமிழுக்கு புதுசு.

ரஜினி climaxஇல் ஒரு அரைமணிநேரம் கலக்கியிருக்கிறார், மூன்றுமுகம் ரஜினியைப் பார்த்ததுபோல் இருந்தது. என்ன ஒரு நடிப்பு. இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் இப்பட மேக்கப்புக்காக தன்னை வருத்திக் கொண்டிருப்பது வரவேற்கத் தக்கது (விஜய் வகையறாக்கள் கவனிக்க வேண்டியது).




ஐஸ்வர்யாராய் இன்னுமும் நீங்கள்தான் உலகாழகி, என்ன ஒரு அழகு...? ஒரு சீனில் புடவையில் வருவார்பாருங்க கோர்ஜியஸ். என்ன நடிப்பு, என்ன டான்சு கலக்கிட்டீங்க. எந்த உடையிலும் அழகாகத் தெரிகிறார்.



சங்கர் - ட்ரைன் சீனில் எச்சைத் துப்ப வருபவனை ரஜினி மிதித்து ஓடுவது, லஞ்சம் வாங்கும் ட்ராபிக் போலீசை கத்தியால் கீறுவது போன்ற தன்ஒழுக்க சிந்தனைகளை தூவியிருக்கிறார் (ஒரு சீனில் வந்தாலும் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிருபித்திருக்கிறார் கொச்சின் ஹனீபா, இவ்வளவு சீக்கிரம் நம்மையெல்லாம் விட்டு சென்றதில் தென்னக சினிமா உலகம் ஒரு தேர்ந்த நடிகனை இழந்து விட்டது). எண்ணற்ற ரஜினி, ஐஸ்வர்யா என்று பாடல்களிலும், காட்சிப் படுத்தலிலும் ரிச்னசை மிதக்க விடுகிறார். ரோபோ செய்யும் சேஷ்டைகளிலே நகைச்சுவையைத் தடவியிருக்கும்போது ஒரு உலகதர விஞ்ஞானியின் விளங்காத உதவியாளராக ரெண்டுபேரைப் போடவேன்டிய வியாபார நிர்பந்தத்தில் சிக்கியிருப்பது தமிழ்நாட்டின் விதி.

கிராபிக்ஸ் கலக்கல், ஆனால் மீண்டும் மீண்டும் பல வித உருமாற்றத்தில் வருவது சற்று அயர்ச்சியை தருகிறது. இருந்தாலும் ரசிக்க முடிகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு அற்புதம் கிராபிக்ஸ் எது நிஜம் எதுன்னு தெரியாமல் கதைக்கு தேவையான ரிச்னஸ் இருக்கிறது. கலை இயக்குனர் சாபு சிறில் உழைப்பு அருமை ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார்.

மொத்தத்தில் விசுவல் ட்ரீட் கண்டிப்பாக இந்திய சினிமா ஹிஸ்டரியில் ஒரு முக்கியப் படம். ;
 

Blogger