Pages

நரமாமிச பட்சினிகள்




சென்ற ஞாயிறன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வின் கேள்வித்தாள் வெளியானதில் அந்த தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறார்கள்.


இமெயிலில் இருந்து வினாத்தாளை திருடியதாகவும் கூறப்படுகிறது.தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூர் தேர்வு மையத்தில் பிடிபட்ட சுரேஷ்குமார், விடைத்தாளும் வைத்திருந்தார்.இந்த கேள்வித்தாள் சில மணி நேரத்துக்கு முன்பு தான் அவுட்டாகி இருக்க வாய்ப்பு இருக்கும். முன்கூட்டியே ஆகி இருந்தால் எப்படியும் வெளியே தெரிந்திருக்கும்.


மேலும் கேள்வித்தாள் அவுட் ஆன அடுத்த நிமிடத்திலேயே விடை கண்டுபிடிப்பது கடினம்.தேர்வாணையத்தில் வேலைப்பார்ப்பவர்களால் தான் எளிதில் விடை எடுக்க முடியும்.எனவே இந்த கேள்வித்தாள் வெளியானதில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


இந்த செய்தியை பத்தோடு பதினொன்னாக படித்துவிட்டு கடந்துவிட முடியாது. இந்த தேர்வு இரண்டாம்நிலை உயர்பதவிக்காக நடத்தப் படும் தேர்வு. இதை ஆறு லட்சத்து நாற்பதாயிரம் பேர் எழுதினார்கள். எவனோ ஒரு காலிப்பயல் செய்த திருட்டுத்தனத்தால் மொத்த தேர்வர்களின் உழைப்பை வீணாக்குவது எந்த விதத்தில் நாயம்.


இவர்களின் உழைப்பை, எத்தனை இரவுகளின் உறக்கத்தை, இத்தனைநாள் கனவை, எந்தனையோ தாய்களின் வேண்டுதலை, ஒரு இளஞ்சனின் ஒட்டுமொத்த ஆற்றலை, நம்பிக்கையை, லட்சியத்தை, ஒரு சிறு திருட்டுத்தனத்தால் ஆழிப் பேரலைபோல சுருட்டிவிடுவதும், மறுதலித்தலும் கயமைத்தனமன்றி வேறென்ன. இது அவர்களின் நம்பிக்கையை சிலுவையில் அறிதலைப் போன்றது. சக்தியுள்ளவன் புறவழியில் முயற்ச்சிக்கிறான் என்பது மற்றையோரையும் அவ்வாறே முயற்சி செய்யத் தூண்டாது என்பது என்ன நிச்சயம்.


எல்லா கல்லூரி படிப்பும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தரும் என்ற உத்திரவாதமில்லை, இன்னும் வாழ்க்கையில் சல்லிகாசு கூட யாசித்துப் பெற முடியாத படிப்புகள் ஏராளம் இங்கே உள, இளங்கலை வரலாறு, மொழியியல், கணிதம், புள்ளியியல் போன்ற படிப்புகள் முடித்ததும் ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கத் திராணியில்லாத படிப்பு, இவற்றில் மேற்படிப்பு படித்தால் ஒரு வேலை ஆசிரியராகவோ, ஒரு நிபுணராகவோ போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவற்றில் எத்தனைபேர் மேற்படிப்பைத் தொடர முடியும்? இந்த எல்லோரின் கடைசி முயற்ச்சியாய் இருப்பது இதுபோன்ற போட்டித் தேர்வுகள் தாம். அதை எழுதி எப்பாடு பட்டாவது ஒரு அரசாங்க உத்தியோகம் வாங்கிவிடுவது. அதிலும் இதுபோன்ற சில்லுருவிகளால் தடை வரும்போது கோபம் தலைகேருகிறது.


திராவிடன் துக்கத்தையும், கோபத்தையுமே வீரமாத்தான் சொல்லி பழக்கம். ஆனால் இங்கே வீரம் என்பது நயவஞ்சகமாய் காரியத்தைச் சாதிப்பது என்று வலியுறுத்தப் படும்போது நாம் இளைய தலைமுறையிடமிருந்து எப்படி ஒரு நல்ல சமூகத்தை எதிர்பார்க்க முடியும்.


சரி இந்த தவறு அடுத்த முறையும் நடக்காது என்பது என்ன நிச்சயம், இதற்க்கு முன்னமே கூட இப்படி நிறைய முறை நடந்திருக்கிறது எல்லா முறையும் தேர்வு எழுதியவர்கள்தான் தண்டனை அனுபவிக்கிறார்கள். இதற்க்கு டி.என்.பி.எஸ்.சி ஆணையத்திலேயே உள்ள ஏதோ ஒரு புல்லுருவி வுதவியிருக்கும். விசாரணை கமிஷன் வைப்பீங்க துறை ரீதியாக நடவடிக்கைன்னு சொல்லி ஒரு பதினைந்து நாள் அரை சம்பளத்துடன் விடுப்பு கொடுத்து மறுபடியும் அவனை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுவீர்கள். இது சரியான தண்டனையா....?


அப்படி யாரேனும் டி.என்.பி.எஸ்.சி ஆணையத்தில் இருந்து இதற்க்கு வுதவியிருப்பர்கலேயானால்...? அவர்களின் சம்பளங்கள் முடக்கப் பட வேண்டும், அவருக்கு வாழ்வாதார படி மட்டுமே (Basic Living Means) வழங்கப் பட வேண்டும், மேலும் அவருக்கு பணிக்குப் பிந்திய சலுகைகளும் நிறுத்தப் பட வேண்டும்.


அப்படியே குறுக்கு வழியில் தேர்வு எழுத வந்தவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள், எந்த தேர்வும் வேண்டாம் ஆனால் அவர் கடைநிலை உழியனாக அலுவலகங்களை சுத்தம் செய்பவனாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவர்கள் எல்லோருடைய சான்றிதழ்களிலும் இவர் திருட்டுத்தனம் செய்து தேர்வெழுத முயற்ச்சித்தார் என்று ஸ்டாம்ப் செயுங்கள்.

சட்டங்கள் கடுமையாகாத வரை குற்றங்கள் குறையாது....!
;
 

Blogger