Pages

மோடி மஸ்தானுக்கு கோடிகளில் பணம்



நல்லா கூட்டம் கூடும் இடங்களில் சினிமா தியேட்டரோ, கோயில் எதிரிலோ..... ஐய்யா மார்களே....! அம்மா மார்களே...! மாயமில்ல மந்திரமில்ல எல்லாம் நிஜம். இங்கேப் பாருங்கோ இது தலைச்சான் பிள்ளை மண்டை ஓட்டுல செஞ்ச தாயத்து, இத கையில கட்டிகிட்டா உன்ன எந்த பேய் பிசாசோ, காத்து கருப்போ அண்டாது சாரே, இத்த போட்டு நீ ராத்திரி சுடுகாட்டுக்குக் கூட போலாம் எதுவும் உன்ன ஒன்னும் செய்யாது சாரே!!.

பாரு சாரே இந்த கீரிக்கும் பாம்புக்கும் சண்டை உடுவேன் சாரே, இந்த நூறு ரூபா நோட்ட கொளுத்தி அப்படியே திரும்ப எடுப்பேன் சாரேன்னு பல வித வித்தைகள அடுக்கடுக்கா வச்சி தெருவோரம் வித்தை காட்டுவதை பார்த்திருப்பீர்கள். தான் கடை விரித்திருக்கும் மொத்த நேரமும் பேசியே.... போக்கி விட்டு, தாயத்து விற்கவும், மை விற்கவும் ஆரம்பித்து விடுவான், கடைசி வரை கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்காது.

ஆனால் சில நேரங்களில் வேடிக்கைப் பார்த்தவர்களின் பணம், நகை கொள்ளையடிக்கப் பட்டிருக்கும் கூட்டம் முடிந்து அவர்கள் தேடும்போது அவன் பாரீசே போயிருப்பான். ஆனாலும் ஊரில் எங்கே இதுபோல் புரளி வித்தை காட்டினாலும் அது எவ்வளவு தூரமானாலும் நடந்தே சென்று முழுதும் முடியும் வரை பார்த்து வருவது வழக்கம். பாக்கெட்டில் இருந்து பத்து பைசா போட்டு விட்டு வருவோம். இப்பொழுதெல்லாம் அதுபோல் ஆட்களைப் பார்ப்பதில்லை, அவர்கள் காட்சிப் பொருளாக சினிமாவிலும், சீரியலிலும் வருகிறார்கள்.

ஆனால் இதுபோல் புரளி வித்தை காட்டுபவர்கள் இப்பொழுது விஸ்வரூபமெடுத்து பெரிய கார்பரேட் நிறுவனங்களைப் போல் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். தங்கள் பெயருக்கு பின்னாலோ முன்னாலோ ஒரு அடை மொழியை வைத்துக் கொண்டு தான்தான் காடவுளின் அவதாரம் என்று கலர்கலராக ரீல் விட்டு, கட்டு கட்டாக கல்லா கட்டுகிறார்கள்.

இதில் ஹிந்து, முஸ்லீம், கிருத்தவர் என்ற பேதமெல்லாம் இல்லை, எல்லா மார்கத்திலும் இதுபோல் போலிகள் உண்டு. அது போல் ஒருவர்தான் இந்த நித்யானந்தா. அவரது சமீபத்திய ஸ்டன்ட் முந்தா நாள் குரு பூர்ணிமா அன்று பக்தர்களை புவியீர்ப்பு விசையை மீறி அந்தரத்தில் பறக்க வைப்பது. இதில் கலந்துகொள்ள பணமெல்லாம் வசூலிக்கப் பட்டது (அதற்கான அழைப்பிதல்). அவரது முதன்மை பிரபல்ய சீடர்களில் ஒருவரும், சமீபத்தில் டிவிக்களில் தெரிய... ஓர் இரவு அவருடன் அறையைப் பகிர்ந்தவருமான ரஞ்சிதாவும் இருந்தார்.

எல்லோரும் எம்பி எம்பி குதித்து அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார்கள் ஆனால் முட்டி தேய்ந்ததும், மூச்சி வாங்கியதும்தான் மிச்சம், ஒருவரும் மிதக்கவில்லை. மோடி மஸ்தான்போல் கடைசிவரை தான் சொன்னதை தனக்கோ அல்லது தன் பக்தர்களுக்கோ ஏற்படுத்தவில்லை. பரவச நிலை அடைவோம் என்று பணம் காட்டியவர்கள் எல்லாம் பர்சை காலி ஆக்கியதுதான் மிச்சம்.

அடுத்த முறை வேறொரு வித்தையின் பெயரை சொல்லி தன் பெட்டியை நிரப்புவார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் இவற்றை நம்பி அவர் பின்னல் போகும் மக்கள்தான்.


ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
;

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட....

லெக்கு தாதா (முன் கதை சுருக்கத்துக்கு சொடுக்குங்கள் Leggu தாதா அட்ராசிட்டி) அவரு மாமனாரு சொன்னாருன்னு, ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக சேர்ந்தார். வண்டி பின்னாடி மாமனார வச்சி, வீரமா வீதியுலா போயி அப்பாயின்ட் ஆகி வந்தாரு லெக்கு. தூர தொலைவு ஏரியான்னா மாப்பிள்ளைக்கு டயேரியாவரும்னு, தெரிந்து வீடு இருக்க ஏரியாவே வாங்கித்தந்தாரு மாமனாரு.

லெக்கு மூக்கு முட்ட குடிச்சுட்டு முழுசாப் போத்திட்டா..., மப்பு தெளியவே மதியம் ஆயிடும், இதில் வேலை நேரம் காலை ஏழு மணிக்கு.
வேல கிடைச்ச வேளையைக் கொண்டாட வேலிதாண்டி வெயிட்டா (மருந்து கம்பெனிக்கு விருந்து) விருந்து வச்சாரு லெக்கு. பெக்கு ஓவராப் போயி லெக்கு தள்ளாட ஆரம்பிச்ச உடனே பக்கர் சொன்னான்,

"மச்சி வீட்டுக்குப் போவோம்"

"இருடா இன்னும் ஒரு பெக்கு போவோம்னு" லெக்கு சொன்னாரு. எனக்கு பக்குன்னு ஆயிடிச்சி....

"என்னடா வேலைன்னு கேட்டா... ?"

"அது ஒன்னும் இல்ல மச்சி, காலீல நம்ம ஏரியால கீற மெடிகல் ஷப்புக்கெல்லாம் போயி, எங்க மருந்து இருக்கா தீந்துடுச்சான்னு கணக்கு எடுக்கணும், சாயந்தரம் அவங்களுக்கு கேட்ட அளவு டெலிவர் பண்ணனும், நமக்கு சேலுக்கு ஏத்த மாலு".

"கேக்க நல்லாத்தான் இருக்கு ஆனா நீ ஒழுங்கா போவணுமே..." இது கலீல்

"இன்னா மாமே அப்படி சொல்லிட்ட நா எவ்வளவு அடிச்சாலும் காலீல அலாரம் வச்சா மாதிரி எழுந்துடுவேநில்ல"

"பாப்போம் பாப்போம்".

"இப்போதைக்கு மச்சான் சைக்கிள யூஸ் பண்ணப் போறேன், அடுத்த மாச சம்பளம் வந்ததும் பயிக்கு வாங்கிடுவோமில்ல....ன்னு" திட்ட வரைவோலை கிட்ட தட்ட ரெடியாயிடிச்சு.

மானிட்டர்ல மயங்கி வாந்தி எடுத்து கிளம்ப இரவு ரெண்டு மணியாகிடிச்சு. பக்கர்தான் எப்போதும் லெக்கை வீட்டில் கொண்டுபோய் விடுவான் இந்தமுறை அவனும் கொஞ்சம் ஓவர் ஆனாதால், நாலுபேர் படைசூழ ராஜமரியாதையில் வீடு கொண்டு சேர்த்தோம்.

மறுநாள் மாலை மண்டபத்தில் பார்த்தால் லெக்கு மூஞ்ச தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்திந்ருதது

"என்னடா ஆச்சின்னு....?" கேட்டதுதான் தாமதம்

பக்கர் "மச்சி... என்ன ஆனதுன்னா..... கலையில ஐய்யா ஒம்போது மணிக்குத்தான் எழுந்திருக்காரு பல்லு கூட வெளக்காம வெறும் மூஞ்ச மட்டும் கழுவிட்டு பேக்கத் தூக்கிக் கொண்டு நேரா நம்ம கண்ணகி பார்மசிக்கு போயி..... 'ஜுரத்து நீங்க என்ன மருந்து வச்சுருக்கீங்க, இதுக்கு என்ன மருந்து வச்சுருக்கீகன்னு' பெரியா வெங்காயமாட்டம் கேள்வி கேட்டிருக்கான், அவனும் கஷ்டமருன்னுதான் கரும சிரத்தையாய் பதில் சொல்லிருக்கான். எல்லாம் கேட்டு முடிச்ச உடனே, 'ஐய்யா ஏன் நீங்க இந்த மருந்த வாங்கக் கூடாது'ன்னு கேட்டுருக்காரு, கடகாரனும் 'அது இப்போத்தான் மார்க்கெட்டுக்கு வந்திருக்கு இன்னும் நாங்க வாங்கி வைக்கல, உங்களுக்கு இது வேணும்னான்னு' கேட்டுருக்கான் இங்கதான் கதையிலேயே டிவிஸ்டு அப்போத்தான் தொற அதுக்குத்தானே நான் வந்திருக்கேன்னு அவுத்து விட்டிருக்கான்....

காண்டான கடக்காரன் நீ யாருன்னு கேட்டுருக்கான் நான் இந்த கம்பெனியில இருந்து வர்றேன்னு சொல்லிருக்கு நம்ம சேல்ஸ் ரெப்பு. அவன் ஆட்டப் பத்தி விடுறா மாதிரி திட்டி விட்டுட்டான். கம்பெனியும் கல்தா கொடுத்துடுச்சி. அப்பாயின்ட் ஆனா நாளிலேயே அப்பீடாகி வந்துட்டாரு.

விடியா மூஞ்சி வேலைக்குப் போனால்..... வேலை அகப்பட்டாலும் கூலி கிடைக்கலையாம் அதுபோல நம்ம லெக்கு.... ;
 

Blogger