Pages

குப்ப மேட்டரு....

இன்று பிறந்தநாள் காணும் இசையின் இளைய வாரிசு யுவன் சங்கர் ராஜாக்கு வாழ்த்துக்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படப் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. பையா, நா.ம.அ, வரிசையில் இதுவும் நிற்கும். மறுபடியும் யுவன் தன முத்திரையைப் பதித்திருக்கிறார். பாடல்கள் கேட்கும்போதே பச்சக் என்று மனதில் பதிகிறது.
--------------XXX------------------XXX------------------
தமிழ் நாட்டில் உள்ள கடைத்தெரு பெயர்பலகை நிறைய தமிழ் படுத்தி விட்டார்கள் ஆமா சிகப்பு பூதம் அதாம்பா (ரெட் ஜெயன்ட்), ஒன்பது மேகங்கள் (க்ளவுட் நயன்), சூர்ய தொலைகாட்சி சன் டிவி.... இதெல்லாம் தமிழ் பெயர்களா என்று கேட்டீர்களென்றால் நீங்கள் தமிழ் துரோகி என்று சபிக்கக் கடவது....
--------------XXX------------------XXX------------------
மற்றுமொருமுறை சூதாட்டப் புகார், ஒவ்வொருமுறை இப்பிரச்சனை எழும்போது மற்றைய தோல்விகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பணிந்து போதல் பணத்துக்கு மட்டுமே இருக்காது... வேறுபல மிரட்டல் வடிவங்களோ..., அதீத தேவை பூர்திகளோ இருக்கும் என்று நினைக்கிறேன். சோரம் போனவர்கள் ஓரங்கட்டப் படுவார்கள் என்கிறது சர்வதேச கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியம்.
ஆனால் பிடிபட்ட தரகன் ஒரே நாளில் விடிவிக்கப் பட்டதில் விசாரணையின் வீரியம் வலுவிழந்துவிட்டது.
--------------XXX------------------XXX------------------
வம்சம் மற்றும் நான் மகான் அல்ல பார்த்தேன். இரண்டுமே பிடித்திருந்தது. நா.ம.அ அந்த மாணவர்கள் எபிசோடு சற்றும் பயம்கொல்லவே செய்தது. இசையும் ஒளிபதிவும் கை கோர்க்க சரியான கலவையில் நகைச்சுவையோடு, ஒரு நல்ல படத்துக்கான எல்லா அம்சங்களோடு இருந்தது. வம்சம் வளரும் என்றே தோன்றுகிறது.
--------------XXX------------------XXX------------------
சமீபத்திய பெருந்தலைகள் வரும் விளம்பரங்களில் விஜய் வரும் ஜோஸ் விளம்பரம் நன்றாகவே இருக்கிறது. முப்பது நொடிகளில் ஒரு கதை சொல்லும் சாத்தியம் விளம்பரத்தில் மட்டுமே ஆகக்கூடிய காரியம். இது அந்த நிறுவனத்தின் புகழ் பாடுவதை விட விஜயின் புகழ்ச்சிக்கே வித்திட்டிருக்கிறது. விளம்பரத்தில் கதை தெரிவுசெய்யும் சூத்திரம் தெரிந்தவர், பெரிய திரையில் சறுக்குவது சற்று நெருடலே... இனியாவது நல்ல கதைகளை தெரிவு செய்து வெற்றி பெறட்டும்.
--------------XXX------------------XXX------------------
தேர்தல் ஜுரம் வேகமாக பரவி வருகிறது, இனி சாதனைகளை சொல்லி வேதனைகளை தொடரச் செய்யவும், கூழ் ஊத்துதல் முதல் குழு விவாதம் வரை, ஒளிப் பெருக்கி ஒடிந்தாலும் ஓயாது பிரச்சார அலை. ;

உலகமயமாக்களில் 'ஈ......ஈ' ஓட்டுற வேலை....

நண்பன் ஒருவன் படிக்கும்போது பெண்களைக் கவரவேண்டி நிறைய விஷயங்கள் தொட்டு வைத்தான், படிப்பைத் தவிர. நாலு ஐந்து பெண்கள் எப்பொழுதும் அவன் ஏட்டில் இருக்கும். படிப்பு வரவே இல்லை. ஒருதலையாய் காதலிக்காமல் தறுதலையாய் போன மிச்ச சொச்ச பேரில் இவனும் ஒருவன்.

"எப்படிடா மச்சின்னு...." கேட்டால்....
" மச்சி சில பொண்ணுகளுக்கு பாலிடால் காட்டி மடக்குவேன், பல பொண்ணுகளுக்கு நான் ஜாலி டால்(Doll), அவளுக்கு புக்ஸ் புடிச்சா..., ரெண்டு ஆத்தர் பேர சொல்லி கவுத்துடுவேன், இவளுக்கு ஊர் சுற்றப் பிடிக்கும்னா... பைக்ள வச்சி சுத்துவேன்னு" சொல்லுவான். அவன் இலகெல்லாம் எட்டாவதிலிருந்து பத்தாவது படிக்கும் பிள்ளைகள். "அதுக்கப்புறம் அவளுகளுக்கு அறிவு வந்துடும் 'மச்சி'..." என்பான். இன்றுவரை யாரிடமும் எல்லை மீறினது கிடையாது. "என்னவோ தெரியல 'மச்சி' பயமா இருக்கு...." "அப்புறம் ஏண்டா சுத்துறன்னு..?" கேட்டால் "ச்...ச்..சும்மா" என்று கண் சிமிட்டுவான்.

விடலை வயதை தாண்டி வேலை தேடி அலைந்து ஏதேதோ வேலை செய்து சிறிது காலம் வெளிநாட்டிலும் இருந்தான். வீட்டில் பார்த்த பெண்ணை மணம் முடித்து இரண்டு குழந்தைகள். ரொம்ப நாளைக்கு பின் நேற்று அவனை சந்தித்தேன், "என்ன 'மச்சி' எப்படி இருக்கே...?" "ரொம்போ நல்லா இருக்கேண்டா..." பின் சம்பிரதாய பேச்சுக்களின் ஊடே "இப்போ எங்கேடா வேலை செய்யிறன்னு...? கேட்டேன் மிக உற்சாகமாக சென்னையில் உள்ள வடநாட்டு காதல் ராணியின் பெயரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்வதாகச் சொன்னான்.

"பரவாயில்லைடா, ரொம்ப நல்ல இடத்துலதான் இருக்கே, என்ன வேலைன்னு...?" கேட்டேன் "மச்சி, கொசு ஓட்டுறது"ன்னு சொன்னான் "என்னடா.... மருந்தடிக்குற வேலையான்னு...? கேட்டால் "இல்லை, கொசு ஓட்டுறது, கையில கொசு ஓட்டுற பேட்ட கொடுத்து கொசு ஓட்டனும்னு சொன்னாங்க, சொம்ப ஜாலியா இருக்குடா மச்சான்" என்றான்.

எனக்கு பகீரென்றது "என்னடா சொல்லுற...?" "ஆமா மச்சி, இதுக்கு முன்னாடி கொசு மருந்து அடிக்கிற வேலை, இப்போ ப்ராஜெக்ட் மாறி, இந்த வேலை, மருந்தடிக்குரதுக்கு இந்த வேலை பரவாயில்லைன்னு? சொன்னான். "எப்படிடா நாலாயிரத்துக்கு ஆள் கிடைக்குதுன்னு என்ன வேலைன்னாலும் செய்யச் சொல்லுவாங்களா.... அதுக்குன்னு எவ்வளவோ மெஷின் இருக்குல்ல...., அத வைக்க வேண்டியதுதானே...? ஏண்டா ஒரு ஆள வச்சி கொசு ஓட்ட வைக்கணும்..?" "மச்சி ஹோட்டலுக்கு இது பெருமைதானே, நாங்க பாத்தீங்களா ஆள வச்சி கொசு ஒட்டுரோம்னு சொல்லிக்கலாமில்ல...". "இருந்தாலும் ஈனக்கு இது ரொம்ப கேவலமான செயல்ன்னு தோணுது".

"மச்சி இதுக்கே ஷாக்காயிட்டா எப்படி, இதில் டாற்கெட்லாம் உண்டு, சூப்பு வந்து பாக்கும்போது... ஒரு கொசு கூட இருக்கக் கூடாது, இருந்தால் ஆப்புதான்னு..." ரொம்ப சாதாரணமாகச் சொன்னான். "மச்சி அதுமட்டுமில்ல, நான் கொசு ஓட்டும்போது சத்தம் வரும், அப்ப பிகருங்கல்லாம் திரும்பி பார்க்குமடா...? "அட மடையா, ஊரே திரும்பி பார்க்கும்..." "அதெல்லாம் பார்த்தல் முடியுமா மச்சி, குடும்பம் ஓடனுமில்ல, வீட்லயும் வேலைக்கு போகுது, அப்படி இப்படி பண்ணிதானே கொடும்பத்த ஓட்ட வேடியிருக்குது".

"மச்சி பொண்ணு பின்னாடி போகணும்னா, வெட்டி ஆபீசரா இருக்கணும், பொண்ணு உன் பின்னாடி வரணும்னா வெட்டியான் வேலைன்னாலும் செய்யோணும்....!" ;

குப்ப மேட்டரு....

64ம் ஆண்டு சுதந்திரதினம் பித்தனின் வாழ்த்துக்கள்.

இந்த நல்ல நாளில் நான் இந்த நாட்டுக்கு என்ன செய்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்த்தால் ஒன்றுமே இல்லை. என் குடும்பத்தில் உள்ள மொத்தம் பதினைந்து பெரும் கண்தானம் செய்திருக்கிறோம். நீண்ட மோதலுக்குப் பிறகு என் உறுப்புகள் மற்றும் உடல் தானத்துக்கும் வீட்டாரிடம் சம்மதம் வாங்கி இருக்கிறேன். இதைத்தவிர நான் சொல்லிக் கொள்ளும்படி இந்த நாட்டுக்கு ஒன்னும் செய்யவில்ல என்பதில் வெட்கித் தலை குனிகிறேன்.

தாய் மண்ணே வணக்கம்.....!
--------------XXX------------------XXX------------------
மருத்துவர் ராமதாஸ் 2011ல் ப.ம.க ஆட்சி அமைக்கும் சூழ்நிலை இல்லை என்று சொல்லியிருக்கிறார், (இல்லன்னா என்ன 3011, 4011ன்னு சொல்லிகிட்டே இருக்க வேண்டியதுதான்), மேலும் தாங்கள் தே.மு.தி.க உடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அறிக்கை விட்டிருக்கிறார். மாமா மயக்கும் பேச்சாலும், அம்மா அதிரடி செய்கையாலும் கைவிடப்பட்ட நிலையில் கலங்காமல் நிற்கிறார் தமிழ் குடி தாங்கி.
--------------XXX------------------XXX------------------
சீனிவாசன் என்பவர் சென்னை புறநகர் பகுதிகளில் கொள்ளை அடித்து நான்கு தத்துப் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை போலீசில் பிடிப்படும்போதும் தண்டனையை முழுமையாக அனுபவித்து வருவது வாடிக்கை என்று கூறியிருக்கிறார். தான் கஷ்டப் பட்ட நேரத்தில் தன்னை சுற்றி இருந்தவர்கள் யாரும் உதவவில்லை என்பதனால் ஒரு வைராக்கியத்தில் இந்த தொழிலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இதுவரை படங்களில் மட்டுமே பார்த்த ஒரு விஷயம் கண்முன்னே நடந்திருக்கிறது.

கல்வி வியாபாரமானதிலும், சுயநலம் மலிந்துபோன சமுதாய சூழ்நிலையாலும் இது மேலும் தொடரும் என்பது என் அனுமானம். நான் டிப்ளோமோ முடித்து பயிர்ச்சியாளனாக இருந்த போது, என் நண்பன் அவனுக்குத் தெரிந்த பெண்ணின் தந்தை இல்லா நிலையில் தாய் வீடுகளில் வேலை செய்து அப்பெண்ணை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள், பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் படிப்பைத் தொடர முடியாத நிலை என்றான். நான் அப்பெண்ணுக்கு உதவுவதாகக் கூறினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து அப்பெண்ணுக்கு தோல் தொழில்நுட்ப பிரிவில் பட்டய பாடம் கிடைக்க பணம் முதற்கொண்டு அலைவதுவரை ஆவன செய்தோம். இன்று பதினைந்து வருட இடைவெளியில் அப்பெண் தனக்குத் தெரிந்த சில பேருக்கு இதுபோல் வுதவுவதாக அறிந்து மிகவும் சந்தோஷித்தோம். இப்பொழுதும் விழுதுகள் என்ற பெயரில் சிறு சிறு உதவிகள் செய்துவருகிறோம். இதுபோல் அவரவர்கள் தத்தமது சுற்றத்தை மேம்படுத்துவார்கள் எனில் இந்த சமுதாயம் கண்டிப்பாக உயரும். எல்லாமும் அரசாலேயே அமைத்துத் தரவேண்டும் என்று எண்ணுவதில் அர்த்தமில்லை.
--------------XXX------------------XXX------------------
ஏழு வயதில் நான் ரமலான் நோன்பிருந்தேன் என்ற காரணத்தில் என் மகனையும் முதல் நோன்பு வைக்க விருப்பம் கொண்டேன். காலையில் நான்கு மணிக்கு ஒரு தம்ளர் ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து மாலை ஆறு முப்பது வரை வாயில் பச்சை தண்ணி கூட குடிக்காமல் வாந்தியுடன் எனக்கு ஷாந்தி தந்தான். நான் நோன்பிருந்த காலத்தில் இவ்வாறெல்லாம் வருந்திநேனா தெரியாது ஆனால் அவன் வாடியதில் நான் வருந்தினேன்.
--------------XXX------------------XXX------------------
நடிகர் நடிகைகள் துணிக்கடை, சோப்பு, சீப்பு, பேர்னஸ் க்ரீம் போன்ற விளம்பரங்களுக்கு வருவது பரவாயில்லை அது அவர்கள் தொழிலுக்கு தேவையானது. தன்னைப் போல் பளபளக்க, மினுமினுக்க என்று கூவி கூவி விற்கலாம். ஆனால் அடகுக்கடை விளம்பரத்தில் வருவது கொஞ்சம்கூட ஜீரணிக்க முடியாதது. எந்தவகையிலும் பொருந்திப் போகாத ஒரு விளம்பரத்தில் நடிகரைப் போட்டால் லாபம் கொழிக்கும் என்று எப்படி நினைத்தார்களோ...!. நடிகரும் சரி நிறுவனமும் சரி பெக்குல மக்கு மகேஷ உருவாக்கினார்களோ....!. ஒருவேளை படம் போக கசில்லை எனில்... நகையை அடகு வைத்தாவது படத்தைப் பார் என்று சொல்கிறார்களோ.....!

காத்து உள்ள போதே கள்ள கட்ட நினைக்கிறார்கள்..... ;

விசாரணை - தொடர்

விசாரணைன்னு சொன்ன உடனே ஏதோ கொலை கேசுன்னு நினைச்சிடாதீங்க இது நம்ம கலைஞர் டிவியில ஒளிபரப்பாகிற விசாரணைத் தொடர். பொதுவாகவே மெகா சீரியல் என்றாலே ஜகா வாங்கும் நான், ராஜேஷ்குமார் கதை வசனத்தில் வாரம் ஒரு கதை சொல்லும் இத்தொடரை விரும்பிப் பார்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு குறுந்தொடர்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது இந்த தொடர்.

ராஜேஷ்குமாரின் நாவல்கள் ஒவ்வொன்றும் திகிலானவை, த்ரில்லானவை. நாவல்களை படிக்கும் போது ஏற்படும் திரில்லும், திகிலும் அவை டி.வி.தொடர்களாக தயாரிக்கப்படும் போது காணாமல் போய்விடும். ஆனால் விசாரணை தொடரை இயக்கும் சி.பிரபுவோ ராஜேஷ்குமாரின் நாவல்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுத்து விசாரணை தொடரை அமர்க்களப்படுத்தி வருகிறார். தங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் அதேநேரம் காட்சிப் பிழை இல்லாமல் ரொம்ப லாவகமாக ஒவ்வொரு வாரமும் நகர்த்துகிறார்கள்.

பல தொழில்நுட்ப விஷயங்களையும் ஆங்காங்கே தூவி தன முத்திரையைப் பதிக்கிறார் ராஜேஷ்குமார். சில நேரங்களில் அரசு சார்ந்த ஒத்தூதல்கள் இருந்தாலும் தன் தந்திர கதை சொல்லுதலால் நம்மை தொடரோடு ஒன்றிட வைக்கிறார். அழுகாச்சி மெகா தொல்லைகளின் எல்லைக்குள் ஆட்படாமல் ஒரு நல்ல நிகழ்ச்சி இது. ஆனால் சரியான விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்பது இடைவேளையில் தெரிகிறது.

ராஜேஷ்குமார் கதைகளில் துப்பறியும் நிபுணராக வரும் விவேக்கும் அவருடைய மனைவி ரூபலாவும் கடந்த 25 வருடங்களாக வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். விவேக் - ரூபலா கற்பனை பாத்திரங்கள் என்பதை வாசகர்களில் பலர் ஒப்புக்கொள்வது இல்லை. அவர்களுக்கு ராஜேஷ்குமார் கற்பனையாக திருமணம் செய்து வைத்தபோது நூற்றுக்கணக்கான வாசகர்கள் மணியார்டர்கள் மூலமாக `மொய்' பணம் அனுப்பி வைத்தது ஹைலைட்டான விஷயம்.

இது போன்று நாவல்களை தொடராக்கும் போது உள்ள பெரிய பிரச்சனையே கதையின் நாயகர்கள்தான். ஒவ்வொருவருக்கும் விவேக்கை மனதுக்குள் பலவாறு கற்பனை செய்து இருப்போம். அது ஒத்துபோகாட்டி கதை எப்படி இருந்தாலும் சலிப்பு தட்டிவிடும்.

ஆனால் முன்பு விவேக்காக வந்த சாக்ஷி சிவாவும் ,சரி இப்பொழுது வருபவரும்(பெயர் தெரியவில்லை) சரி, தங்கள் பாத்திரத்தை சரியாகவே செய்கிறார்கள். அதிலும் விவேக்கின் உதவியாளராக வரும் ஷ்யாம் கணேஷ் நேர்த்தியான நடிப்பு.

எல்லா காலங்களிலும் துப்பறியும் கதைஎன்பது மக்களின் ஈர்ப்புக்குரியது அந்த வகையில் விசாரணை பல இல்லங்களில் தினமும் நடைபெறுகிறது.

;
 

Blogger