Pages

குப்ப மேட்டரு - II

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சட்டசபையில் துணை முதல்வரை வாழ்த்திப் பேசினார் என்று திரு. எஸ் வி சேகர் மீது காடுமையான கோபத்தில் இருக்கிறது தலைமை. இதைப்பற்றி திரு. எஸ் வி சேகர் கூறுகையில்..... ''சட்டமன்ற உறுப்பினர்களை ஆட்டு மந்தையாக வைத்துகொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. விரும்புகிறது (இன்றுவரை இவரும் அதில் ஒரு ஆடுதான், அதையும் அவரேதான் சொல்லியிருக்கிறார்), நான் துணை முதல்வரை வாழ்த்திப் பேசும்போது, முதலில் என்னை என் சாதியைச் சொல்லிக் கேவல மாகத் திட்டினார் கலைராஜன். ஆனால், நான் என்ன சாதியோ அதே சாதிதான் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும். 'மேற்கொண்டு ஒருவார்த்தை பேசினா உன்னைப் போட்டுத் தள்ளிடுவேன்' என்று என்னைப் பார்த்துச் சொன்னார் கலைராஜன்"

இவர்கள் மக்கள் பிரதிநிதிகள், ஆனால் சட்டசபையில் தெருச் சண்டை போட்டிருக்கிறார்கள். அதையும் சாதிச் சண்டையாக்க முயற்சிக்கிறார்கள். பேசியவரும் கேட்டவரும் தத்தமது சாதியையும், தனக்கு ஓட்டுப் போட்ட மக்களையும்மே அவமதித்திருக்கிறார்கள்.

மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன் என்பவர், தன்னுடைய இளவயது மகன் திலீபன்ராஜை வைத்து சிசேரியன் ஆபரேஷனில் ஈடுபட்டது...., அதற்க்கு மெடிக்கல் கவுன்சில், முருகேசன் மீது நடவடிக்கை எடுத்தது நாடறிந்தது. இந்நிலையில், அதே மணப்பாறையில் ஜி.கே.எம். என்ற பெயரில் புதிய மருத்துவமனை ஒன்றை திறந்திருக்கிறார். அதற்க்கு நாம தேர்ந்தெடுத்த அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.... பாவம் அமைச்சருக்கு இவ்விசயம் தெரியாதுபோலும்... அப்படின்னா மெடிகல் கவுன்சில் எடுத்ததா சொன்ன நடவடிக்கை என்ன?

எப்படியோ தனது காதல் அரங்கம் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கிட்டார் வேலு பிரபாகரன். ரசிகர்களே!! காத்திருங்கள் திறந்த மனதுடன்.....

மேலும் ஒரு கட்சி வரப் போகிறது. வந்ததுங்களே இன்னும் சொன்னதைச் செய்யல.... இளைய தளபதி கட்சி ஆரம்பிக்கப் போகிறது கிட்டத் தட்ட உறுதியாகி விட்டது. அவர் தந்தையே இதை உறுதி செய்திருக்கிறார். (ண்ணா நல்லதுங்கண்ணா!!)

காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததோ.... இல்லை பனம்பழம் விழும்நேரம் காக்கா உட்கார்ந்ததோ!! வெர்ஜின் மொபைல் ஆன்டி விளம்பரம் இப்பொழுதெல்லாம் வருவதில்லை. இப்பொழுது வரும் கார்டூன் வோலம்பரம் ரசிக்கும்படியே இருக்கிறது. நிறுத்திய அத்துணை உள்ளங்களுக்கும் பித்தனின் நன்றிகள். ;

2 comments:

கலையரசன் said...

கதம்ப கலக்கல்! அருமை..
வாழ்த்துக்கள், தொடருங்கள்!

பித்தன் said...

நன்றி கலையரசன் தங்கள் எண்ணம்போல் தொடருவேன்....

 

Blogger