Pages

உளியாய் இறங்கிய வார்த்தைகள்தாம்....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நான் பட்டயப் படிப்பு படிக்கும் போது இருந்த ஆங்கில ஆசிரியர் நல்லா ஆஜானுபாகுவான தேகம், இந்தி நடிகர் தாராசிங்கைப் போல் இருப்பார், அவர் ஒரு டெரர், அவர் வரும் நேரம் எல்லா மாணவர்களும் ரொம்பவே பயம் கொள்வார்கள், புதுப் பொண்ணாட்டம் குனிஞ்ச தலை நிமிராமல் இருப்பார்கள். அவர் யாரையாவது நேருக்கு நேர் பார்த்துவிட்டால்.... அவ்வளவுதான் எழுந்து பாடத்தைப் படிக்கச் சொல்வார், அதில் வரும் வாக்கியத்தில் உள்ள இலக்கணங்களை அலசி கேள்வி கேட்பார். தெரியாமல் ஜிஞ்சர் தின்ன மங்கி மாதிரி முழித்தால்.... ரொம்ப கேவலமாக திட்டுவார்.

எதுக்கு பொம்பளப் பிள்ளைகள் முன்னாடி அசிங்கம், என்று பாதி மாணவர்கள் அவர் வகுப்பென்றால்... பங்க் பண்ணிவிட்டு எதிரில் உள்ள கேன்டீனில் உட்கார்ந்துக் கொள்வார்கள். அவர் உள்ளே வந்ததும் "குரங்குகள் எல்லாம் கேன்டீன் போயிடுச்சா? இல்ல...., மிச்ச சொச்ச ப்ரண்டு குரங்குகள் ஏதாவது இருக்கா?, அதுகளும் போகணும் என்றால்... போகலாம்" என்பார், யாருக்கு குரங்கு என்று ஒத்துக்கொள்ள மனசு வரும். பாதி நேரம் நானும் என் படைகளும், இதுக்கு பயந்தே..., அவர் வரும் முன்னமே வெளியே போய்விடுவோம்.

ஒரு நாள், நான் சற்று தாமதமாக கிளம்ப...., எதிரிலேயே அவர் வந்து விட்டார். அப்படியே ஷாக்காயிட்டேன்!! "என்ன வெளியே போறியா?" என்றார் "இல்லை சார், பாத்ரூம்" என்றேன் "சரி போ, நீயும் அந்த குரங்குகளோட சேர்ந்து கேட்டுப் போ. நீ ரொம்ப நல்லவன்னு? நெனச்சேன்" என்றார். பேஸ்தடித்துப் போய்... அவர் பின்னாடியேப் போனேன் (மனதிற்குள் ஆஹா சனியன் சடபோட ஆரம்பிச்சிடுச்சே?).

என்னை முதல் பெஞ்சில் உட்கார வைத்து, பாடத்தை எடுத்துப் படிக்கச் சொன்னார்... நிறைய கண்ணைக்கட்டும் கேள்விகள், என் பதிலறியா திருட்டு முழிகள், என்று அவரால் எவ்வளவு முடியுமோ...., அவ்வளவு வாட்டினார். பெல் அடித்து வெளியில் போகும்போது, "என் ரூமில் வந்து என்னைப் பார்" என்றார்.

இன்னொரு மூத்திர சந்துக்கு கூட்டிட்டு போறார்ன்னு தெளிவாயிடிச்சி, மனச திடப் படுத்திக்கிட்டு, அவர ரூமில் போய் பார்த்தேன்.... "உன் கிட்ட இன்னும் ரொம்ப எதிர்பார்கிறேன்!!? நீ ஏன் அந்த குரங்குகளோட சேர்ந்து குட்டிச் சுவராப் போற, இனி நீ என் எல்லா க்ளாசிலும் இருக்கேன்னு" சொல்லிட்டுப் போய்ட்டார்.

அன்றிலிருந்து...., என் படிப்பு முடியும் வரை, அவர் வகுப்பில் யார் இருக்கிறார்களோ இல்லையோ அடியேன் இருப்பேன். என்னையே காட்சிப் பொருளாக்கி... பாடம் நடத்துவார். நானும் தப்புத் தப்பா சொல்லியே ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன். அவர் என்னைத் திட்டியதிலிருந்து.... யார் என்னைத் திட்டினாலும் எனக்கு உரைக்கவில்லை. இன்றும் ஆபிசில் பாஸ் எவ்வளவோ திட்டுகிறார் நமக்கு உரைக்கனுமே!! ம்ம்!! எல்லாம் அவர் போட்ட விதை.

ஒரு ஐந்து வருடங்களுக்குப் பிறகு, பிறிதொரு நாள் நான் வேலை செய்யும் கம்பெனியில் அவரை எதேச்சையாய் பார்த்த போது... "சார்....! எப்படி இருக்கிறீர்கள்?" என்றேன் "நல்லா இருக்கேன் என்றார்?" "சார்....! நா இந்த கம்பெனியில்தான் வேலை செய்கிறேன்" என்றேன். சுழ்நிலை மறந்து, என்னை கட்டித் தழுவி, கர்ஜிக்கும் குரலில் "ரொம்ப சந்தோஷமா இருக்குபா" என்றார். "சார் எல்லாம் உங்க ஆசிர்வாதம்" என்றேன் "அதில்லை, நீங்க நல்ல படிச்சதனால் என்றார்" "என்ன சார் புதுசா நீங்க வாங்க, என்னை எப்போதுப் போலவே வாடா குரங்கு என்று கூப்பிடுங்கள்" என்றேன். ஆனால் கடைசி வரை என்னை அவர் மறுபடி குரங்கென்று கூப்பிடவே இல்லை.

இன்றும்... என்னை தன் பிள்ளையாக நினைக்கிறார். இது ஆசிரியர் மாணவன் என்கிற வட்டத்தைத் தாண்டி, எல்லை விரிவடைந்திருக்கிறது. அன்று உளியாய் இறங்கிய வார்த்தைகள்தாம் இன்று..... ;

No comments:

 

Blogger