Pages

பத்திக்கிட்டு எரியுது பதிவு உலகம்

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

வலையுலகமே வருத்தத்தோட இருக்கு.
ஊதிப் பெரிதாக்க, ஒரு கூட்டம்
ஊத்தி மூட, ஒரு கூட்டம்
ஊமையாய் ஓர் கூட்டம்ன்னு....
ஒரே கூட்ட நெரிசல்.

எங்கெங்கானினும்... அங்கெங்கொணாதபடி
பதிவின் படையல்.
பட்டதை, பார்த்ததைப்,
படித்ததை என பலவற்றைப் பரிமாறி,
படிப்போரை வெறுப்பேற்றி,
பட்டோரை சூடேற்றி,
பசியாற முடியாமல்
பட்டினியாய் இருக்கின்றோம்.
--------------XXX------------------XXX------------------
புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மட்டங்காடு கிராமத்தில்.
ஒரு பெண், தன்னை காதலிக்க வேண்டும் என்பதற்காக அவளை வன்புணர்ச்சி செய்து, அதை கைப்பேசியில் பதிந்து, அவளை தனக்கு கல்யாணம் செய்து வைக்கும்படி சொல்லி வருகிறான் செந்தில். போலீசில் ஊர் உலகத்தில் இதுபோல்தானே நடக்கிறதுன்னு...! ரொம்ப நக்கலாக பதில் சொல்லியிருக்கிறான்.

அந்த பெண் இவனை இப்பொழுதும் மணக்க விரும்ப வில்லை. இவனுக்குத் தரும் தண்டனை இனி இதுபோல் யாரும் யோசனை கூட செய்யக் கூடாது. பெண்களின் கற்பு மலிந்து விடவில்லை என்பதற்கு இவன் தண்டனை ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

நடக்குமா.....?
--------------XXX------------------XXX------------------
கேப்டன் பெரிய மகனும் மோதலுக்கு தயார் ஆகிறார். சீவி சிங்காரிச்சி ஷோக்கா இருந்தாலும்...., போஷாக்கா இருக்க முடியுமா...? அதனால் முட்டி தேய பஸ்கி எடுக்கிறாராம். வாங்க வாங்க...
--------------XXX------------------XXX------------------
சீரா படம் வந்தாலும், சேர வாரி இறைக்குது நம்ம இளைய தளபதி தலையில. நஷ்ட ஈடு தியேட்டர் உரிமையாளர்கள் கேட்டும், தம்பி செவிசாய்க்க வில்லை. தன் அடுத்த பட விநியோக உரிமையை வாங்கி வச்சிருக்காரு.

சத்தா.... இருந்தா..... சத்தம் போட்டு சொல்லலாம்....!
வெத்தா இருந்தா.... வச்சுக்கவா முடியும்....
யோசிப்பாரா இளைய தளபதி...?
--------------XXX------------------XXX------------------
தனது சொந்தங்களுக்கு அரசாங்கத்தில் பதவி கேட்டால் முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடிக்கச்சொன்ன டாக்டர், தற்போது தனது மகனுக்கு ராஜ்யசபா சீட்டுக்காக கருணாநிதியிடம் கெஞ்ச வேண்டிடிய அவலமான நிலை!

எல்லாம் பதவி படுத்தும் பாடு.

;

No comments:

 

Blogger