Pages

குப்ப மேட்டரு...

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!
சூர்யா ஜோதிகா தம்பதிக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது. ஏற்கனவே இவர்களுக்கு தியா என்கிற பெண் குழந்தை இருப்பது ஊருக்கே தெரிஞ்ச விஷயம்தானே.
--------------XXX------------------XXX------------------
1984ம் வருடம் போபாலில் வெளியான விஷவாயு காரணமாக அதன் சுற்றுப்பகுதியில் வசித்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டனர், பிறந்த குழந்தைகள் கூட ஊனமாகப் பிறந்தன. அந்த வழக்கில் இன்றுதான் தீர்ப்பு வந்தது எட்டு பேருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை, கொடுக்கும்போதே அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப் பட்டுடிருக்கிறது.

மிக மிகத் தாமதமான தீர்ப்பு தந்ததோடல்லாமல், குறைந்த பட்ச தண்டனை என்பது இறந்த மற்றும் வாழ்விழந்த ஆன்மாக்களுக்கு செய்த ஆகப் பெரிய அநீதி.

DELAYED JUSTICE IS DENIED JUSTICE
--------------XXX------------------XXX------------------
நேற்று விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் மெட்ரிகுலேசன் பள்ளி சங்கத் தலைவர்
ஒரு கேள்வியை எதிர்கொள்ளும்போது, வசதி இருந்தா மெட்ரிக் பள்ளிக்குப் போங்க, இல்லனா அரசு பள்ளிக்குப் போங்கன்னு சொன்னார். இதுமாதிரி ஒரு போது வெளியில் பேசும்போது குறைத்தபட்ச சபை நாகரீகமில்லாமல் இவ்வாறு அவர் பேசியது மிகவும் கண்டிக்கத் தக்கது. மேலும் அவர் தனது வயதுக்கு மீறிய கோபத்தோடு எதிரணியினரை எதிர்கொண்டார்.

தன் தரப்பு வாதத்தையும் நியாயத்தையும் சொல்ல அவருக்கு எல்லா உரிமையும் உண்டு, ஆனால்... பெற்றோரைப் பார்த்து உன்னால் சமாளிக்க முடியவில்லை என்றால் வேறு பள்ளிக்குப் போ என்று சொல்ல எந்த அதிகாரமும் இல்லை.

Because EDUCATION IS RIGHT OF EVERY CHILD
--------------XXX------------------XXX------------------
நயன்தாராவும் பிரபு தேவாவும் திருமணம் செய்துக் கொண்டார்கள். பிரபுதேவா பெற்றோர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள். அப்படி என்ன சிறப்பு இந்த திருமணத்தில்? சிம்புவுடன் காதல் முறிவு, பலப் பல கிசு கிசு எல்லாவற்றையும்தாண்டி இந்த திருமணம் அரங்கேறியிருக்கிறது. ஆனால் பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் அதுவும் வீட்டை எதிர்த்து! எங்கே போனது அந்த காதல்...?

WHAT IS THERE IN EXTRA-MARITAL AFFAIRS OTHERTHAN FLUSH.
--------------XXX------------------XXX------------------
குஷ்பூவைத் தொடர்ந்து, மேலும் பல நடிகைகள் அரசியலுக்குள் விழ துடித்துக் கொண்டிருக்கிறார்களாம். சாக்கடை என்றான பிறகு பண்ணி மேய்ந்தாலென்ன பாம்பு மிதந்தாலென்ன, பாமரன் பம்மத்தான் செய்வான்.
--------------XXX------------------XXX------------------
பய்யாவும் பாப்பாவும் லவ்வோ லவ்வுகிறார்களாம் இது ஐய்யாவுக்கு பிடிக்காமல் அர்ச்சனை நடந்ததாம். பய்யா நேராக அண்ணியிடம் போக வேண்டியதுதானே, அனுபவத்தால் ஆதரிப்பாரோ....? ;

No comments:

 

Blogger