Pages

கோயிந்து புலம்பல்....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அல்லார்க்கும் வந்கம்பா!!

முன்ன மாரி உப்போ சவாரி சரியா வர்தில்லபா நம்ம பொயப்பு கொஞ்சம் டல்லடிக்குது. உச்கூல் அடுத்தவாரம் தெரந்துக்குனாக்கா.... நமக்கு ரெண்டு ரெகுலர் உச்கூல் சவாரி வந்துரும், அப்டியே பொயப்பு ஓடீடும்.

அப்றோம் அல்லாரும் எப்படி கீறீங்கோ இம்மா நாலும் நான் உங்கள கண்டுக்காம இர்ந்துட்டேன்பா. நாம பேச ரொம்ப விஷயம் இர்ந்துது, ஆனா நான்தான் வரலபா, இப்போதான் வந்துட்டேன் இல்ல, இனி பாரு நம்ம ஆட்டைய.... "ஒர்தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்கமாட்டேம்பா....." அக்காங்....

படிப்பு கட்ணம் குறையும்னு சொன்னாங்கோ, ஐய்....யா அடிச்சிதுரா லக்கி ப்ரைஸ், நம்ம புள்ளாண்டான கூட இங்க்லீஷ் உஸ்கூல்ல போட்டுடலாம்னு திங்க் பண்ணுரதுக்குல்லோ..... திடீர்னு தனியார் பள்ளி சங்க நாட்டாமைங்க நம்ம தலீவர கண்டுக்னதுல, உப்போ அரசு அந்தர் பல்டி அடிச்சி 'விரைவில் கல்விக் கட்டண நிர்ணயம்பற்றி மறுபரிசீலனை செய்யப்படும்'ன்னு சொல்லுது.

கமால வாங்கிட்டு.... கமுக்கமா காதும், காதும் வெச்சாமாதிரி சைலண்டா ஜகா வாங்கிடுவாங்கோ.... நல்லது நடக்கும்னு வாயப் பொலந்துக்கின்னு இர்ந்த பெத்தவங்க வாயில பெரிய ஊசிப் போன போண்டாவா வப்பாங்கோ.

ஏற்கனவே இதுமாதிரிதான் காலேஜு பீச குறையும்னு ரயிடுலாம் பண்ணனாங்கோ ஆனா ஒன்யும் புடிபடல. அல்லா காலேஜும் அவன் இஷ்டத்துக்குத்தான் பீஸ் புடுங்குராங்கோ.

காப்ரேசன் உஸ்கூல்ல இன்னாபா இல்ல...? நல்லாதாம்பா கீது, கொஞ்சம் நம்ம வாத்திமாறுங்கோ அவங்க வேலைய ஒயுங்கா பாத்தா, அது போதும்பா. இந்த பேமானி பெத்த சோமாரிக்கு, கார்பரேசன் உச்கூல்தான் விதிச்சது.

சவாரி வராப்ல கீது நா கயண்டுக்குரேன், வர்டா.....

;

No comments:

 

Blogger