Pages

சீமான் ஒரு முனை மழுங்கிய கத்தி

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ் இனத்தின் போர்வாள் என்று சமீபகாலமாக உணர்வாளர்களால் கொண்டாடப்படுகிறார் சீமான். ஆனால் அந்த வாள் அவ்வப்போது மொக்கையாகிவிடுவதும் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது அவரது சமீபத்திய முடிவொன்று! தமிழினத்தின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போய் ஆட்டம் போட்ட பாலிவுட் நடிகர்களின் படங்களை தமிழகத்தில் எங்கும் ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று முழங்கிய சீமான், தனது கொள்கையிலிருந்து வழுக்கி விழுந்திருக்கிறார். அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணத்தை அவரது தம்பிகளே ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் பெருத்த சந்தேகம்!

சூர்யாவும், விவேக் ஓபராயும் நடித்த ரத்த சரித்திரம் படத்தைதான் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போனவர்தான் இந்த விவேக் ஓபராய். அதுமட்டுமல்ல, அங்கு போய் ராஜபக்சேவின் உத்தரவை ஏற்று அங்குள்ள 52 தமிழ் ஜோடிகளுக்கு தனது தலைமையில் திருமணமும் செய்து வைத்தவர்.
இந்த விவேக் ஓபராய் தன்னை ஒரு தமிழர் என்று கூறிக் கொள்பவர் தன தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லி வருகிறார். அவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் முன்னணி நடிகர்களே போக மாட்டேன் என்று சொல்லிய பின்னும் இவர் இலங்கை சென்று விழாவைச் சிறப்பித்து வந்திருக்கிறார்.


இப்பொழுது அவர் செய்ததே மேல், சீமான் தன்னை புலி என்றே பிரகடனப் படுத்தி வருபவர். ஏனைய திராவிடக் கட்சிகள் வாய்ப்பிருந்தும் வாய்திறக்காமல் ஊமையாய் இருக்கும் நிலையில், நாங்கள் தீவிர தமிழ் விடுதலைக்காக போராடுவோம்ன்னு முழங்கி, சமீபத்தில் தான் நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே தன் நிலையிலிருந்து தலைக் குப்புற விழுவார் என்று அவர் தம்பிகள் நினைத்திருக்க மாட்டார்கள்.


இது ஏன் என்றால் அடுத்து அவர் தம்பி சூர்யாவிடம் தன் படத்தில் நடிக்கக் கேட்டு காத்திருக்கிறார், இப்பொழுது இந்த படத்தில் சூர்யாவும் இருக்கிறார் அதனால் இந்த படத்தை வெளியிட தடை வேண்டாம் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தனக்கு ஒரு நாயம் மற்றவர்கள்ளுக்கு ஒரு நாயமா......?
என்னே ஒரு


தமிழ் வீரம் தன்னை திரு.பிரபாகரனின் உடன்பிறவா சகோதரர் என்று மேடைக்கு மேடை முழங்கும் சீமானை அண்ணனே இவரது இந்த முடிவை ஏற்றுக் கொள்ளமாட்டார். இப்போ இவருக்கும் இந்த திராவிடக் கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம். தனது முடிவை இவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். செய்வாரா.....?

கொள்கையா போடா புண்ணாக்கு.....!

;

2 comments:

சௌந்தர் said...

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

vinakuri said...

மறுபரிசீலனை செய்ய மாட்டார் ஏனெனில் அவ்ளோ பெரிய அப்படக்கர் இல்ல

 

Blogger