Pages

பொருள் பாலித்து அருள் தேடும் நித்தியானந்தா.....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மறுபடியும் லைம் லைட்டில் வந்திருக்கிறான் நித்யானந்தா. இந்த முறை அவன் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மதம் மற்றும் இனம்.

தான் ஒரு தமிழன் என்றும் அதனால்தான் தன்னை கர்நாடகா அரசு முடக்க நினைக்கிறது அதுமட்டுமில்லாமல் தான் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதால் தன் மீது வீண் பழி சுமத்தப் படுகிறது என்றும் சொல்லி தன் மீது ஒரு இரக்கத்தை உருவாக்க நினைக்கிறான். தன் அரசியல் வட்ட, பண பலத்திலும் தனக்கு சாதகமாக போராட்டம், மறியல் என்று செய்யவைத்து தன் தவறுகளை மறைக்க முயற்சி செய்கிறான்.

தன் பெண் பித்துத்தனத்தை யோகி என்ற பெயரால் மறைத்து, இந்தனை நாள் கபட வேஷமிட்டு மக்களை ஏமாற்றியது போதாதென்று, இப்பொழுது மதக் கலவரத்தையும் ஜாதி வெறியையும் தூண்டி விடுகிறான். கடவுளாகவே தன்னை நினைத்துக் கொண்டு இந்த நவீன சாமியார்களின் ஆட்டம் ரொம்பத்தான் அதிகமாகப் போகிறது. இதற்கிடையில் மீண்டும் இவன் ரஞ்சிதாவை சந்தித்து தன்னை காட்டிக் கொடுக்க வேண்டாம் என்றும் கெஞ்சியுள்ளார் (கொஞ்சியபோதே குழந்தவர்).

அவன் என்ன கருமத்தையாவது செய்து தொலைக்கட்டும், எதற்கு மக்கள் மீது ஜாதி மதக் கலவரத்தை ஏவி விடுகிறான். ஏண்டா நீ என்ன ஜாதியா இருந்தா என்ன எந்த இனமா இருந்தா என்ன? வேசித்தனத்த வெறுங்கையில மூடப் பாக்குறியே. தன்னையே இருளிலும் இழிவிலும் தள்ளியது போதாதென்று தன் ஜாதி, மத மற்றும் இன மக்களையும் கூட்டு சேர்த்துக் கொல்ல பார்க்கிறான்.

இந்த ஒரு விஷயத்தை வைத்தே (ஜாதி மதக் கலவரத்தை தூண்டியதாக) இவன் மீது கேஸ் பதிவு செய்ய வேண்டும். மீண்டும் தன் சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளான். முழு மூச்சாக ஆசிரமகாரியங்களில் ஈடுபடுகிறான் இந்த காமுகன் மறுபடி ஏதும் பூதம் கிளம்பாமல் இருக்க வேண்டும்.

தன்னை இந்த வழக்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ள அருள் பாலித்தது போதாதென்று, இப்பொழுது பொருள் பாலித்து விடுதலை தேடி அலைகிறான். ;

2 comments:

வால்பையன் said...

தன்னை கடவுள் என்று சொல்லி கொண்ட கோமாளி எப்படி தமிழன், சாதி என இனம் பிரிக்கிறான்!

Anonymous said...

தன்னை கடவுள் என்று சொல்லி கொண்ட கோமாளி எப்படி தமிழன், சாதி என இனம் பிரிக்கிறான்!

 

Blogger