Pages

ஜால்ரா வாசிக்கும் சூர்யா...!

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நம்ம சூர்யா பெங்களூரிலிருந்து வெளிவரும் மிர்ரர் நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் அதில் அவர் :-

"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன். நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?" நன்றி தமிழ் சினிமா.காம்


ஏண்டா போனது பூனைக்கு பாலூட்ட, ஆனா வழியில புலிக்கு புல்லு புடுங்கி போட்டுட்டு வந்தேன்னு அவன் சொன்னா அதை இவர் ரொம்ப மெனக்கெட்டு 'அவன் ரொம்ப நல்லவன்னு' சொல்லுறாரு.
'எவன் பொண்டாட்டி எவங் கூட போனாலும், போக்கத்தவனுக்கு பொரிகடலன்னு' சொல்லுராமாதிரி தன் படம் எப்படியாவது ஓடவேண்டும் என்று இவர் கரிசனம் காட்டுவது தெரிகிறது.

திரைப்படம் என்பது நிறைய பேரின் முயற்சி, உழைப்பு, ரத்தம் சதை இத்யாதி இதாதி..... ஆனால் தமிழ் சனத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்காமல் இருக்கும் நிலையில், பிடில் வாசித்தவர் நம்ம இலங்கை அதிபர். அதுக்கு ஓபராய் ஒத்து ஊதிட்டு வந்தாருன்னா, சூர்யா இப்போ பெரிய ஜால்ரா எடுத்து வாசிக்கிறார்.

புகழ் ஏணியில் இருப்பவர் இதுபோல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது அவரது வளர்ச்சிக்கு நல்லதல்ல. கண்டிப்பாக ரத்த சரித்திரா தமிழ்நாட்டில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் செய்வார்களா.....? ;

No comments:

 

Blogger