Pages

குப்ப மேட்டரு - III

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நேற்று மட்டும் வெவ்வேறு விதத்தில் மூன்று பாலியல் வல்லுறவு நடந்திருக்கிறது. ஒன்று ஒரு காவல்துறை அதிகாரியே ஒரு பெண்ணை வல்லுறவு கொண்டிருக்கிறார், மற்றொன்று எட்டு வயது சிறுமியை ஒருவன் வல்லுறவு கொண்டு கொன்றிருக்கிறான்.

இதில் நம்மை அதிர்ச்சியடைய வைத்த காவல்துறை அதிகாரியை என்ன செய்வார்கள்? நிரூபிக்கப்பாட்டால்... (நிரூபிக்க இன்றைய தேதியில் DNA போன்ற அதிநவீன முறைகள் உள்ளது) அந்த காமுகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்.... அதுவும் அப்பெண்ணுக்கு ஏதாவது நல்ல வக்கீல் கிடைத்தால் ஒழிய.... இல்லையேல், வழக்கு இழுத்துக் கொண்டே போய், அப்பெண்ணும் அக்காமுகனும் மூப்பெய்திய பொழுதில் கடைசியில் அவன் விடுதலையாகலாம். அல்லது அவன் சிறையில் தின்னு கொழுத்து, மீண்டும் ஒரு தவறுக்கு அச்சாரம் போடுவான்.

இதற்க்கு பதில் அவனுடைய வேலையைப் பறித்து, பாதிக்கப் பட்ட பெண்ணுக்கோ அல்லது அவள் கணவனுக்கோ அவர்களின் தகுதி திறமைக் கேற்ப ஒரு அரசாங்க பணிகொடுக்கலாம். அந்த காமுகனின் GPF PF போன்ற சேமிப்புகளை இவர்கள் பெயருக்கு மாற்றி விட வேண்டும்.

அவனுடைய உறுப்பு இனி சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படும் வகையில் ஏதாகிலும் ஹார்மோனல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும்.

அவனின் கதையையும் அவனுக்கு விதிக்கப் பட்ட தண்டனையையும் எல்லா காவல்துறையிலும் திருடர்கள் அறிவிப்புப் பலகையில் ஒட்டவேண்டும்.

சட்டங்கள் கடுமையாக்கப் படாதவரை குற்றங்கள் கம்மியாகாது

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

மாசிலாமணி படத்தில் மற்ற எல்லா ஹீரோவைப் போல் ஒரு காதல் படத்தில் அறிமுகமான அடுத்தப் படத்திலேயே நகுலும் அடிதடியைக் கையில் எடுத்திருக்கிறார். கதைப் பழசு என்றாலும் டைரக்டர் தெரிகிறார். இதைப் ப்ரமோட் பண்ணும் வகையில் நகுலும் சுனைனாவும் தமிழ்நாடு முழுக்க சுற்றிவருகிறார்கள், கல்லா கட்டும் முயற்சியில் இது புது வகை.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------


ஆஸ்திரேலியாவில் மேலும் இரண்டுபேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் நிலைமை மோசமாகுமுன் இந்திய அரசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். உடனே இரண்டு அரசும் பேசி செயலில் இறங்க வேண்டும். இல்லையேல் சிங்கபூரில் நடந்தது மாதிரி மிகப் பெரிய கலவரமாக வெடிக்கும் என்பதில் ஐயமில்லை. பொறுமைக்கும் எல்லையுண்டு அரசே!!.

அஸ்திரேலிய கல்வி மந்திரி திரு. லிசா பால் டெல்லி வந்து வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் திரு. வயலார் ரவியைச் சந்தித்தார் அப்பொழுது திரு. வயலார் ரவி கேட்டுக் கொண்டதற்கிணங்க திரு. லிசா பால் இனிவரும் நாட்களில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறையும் வகையில் உறுதியான, அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாகத் தெரிகிறது (அப்போ தாக்குதல்கள் நடக்கும் ஆனா குறையும்? இது எப்டி இருக்கு?)

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

இந்தி மிட்நைட் மசாலா நடிகை ராக்கி சாவந்த் தனது சுயம்வரத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார் இதை NDTV ஒளிபரப்ப இருக்கிறது. (இன்னும் தனது முதலிரவைத்தான் ஒளிபரப்பவில்லை. CDயில் தனியே வெளியில் கிடைக்கிறது, ஆனால் அது வந்திருந்த மாப்பிள்ளைகளுடன் இல்லை, அவர்களுக்கு இது தெரியுமோ? தெரியாதோ?). வந்திருந்த 16 போரையும் மணக்க விரும்புவதாக இந்த 28 வயது கிளி ஜோள்ளியது. ;

6 comments:

கலையரசன் said...

குப்ப மேட்டருன்னு சொல்லிட்டு, அருமையான மேட்டரா போடுறீங்களே பாஸூ!!

பார்க்க : http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_23.html

பித்தன் said...

thanks kalaiyarasan.

கும்மாச்சி said...

நல்ல மேட்டர் போட்டுறிக்கிங்க, நியாஸ் வாழ்த்துக்கள்.

பித்தன் said...

Thanks Kummachchi

நாகா said...

கலவரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்..

பித்தன் said...

வணக்கம்! நாகா... உங்களை கலையரசன் வலையில் பார்த்திருக்கிறேன் என்னையும் உங்கள் ஆட்டைக்கி சேர்த்துக் கொண்டதற்கு ரொம்ப நன்றி மாமே!!

 

Blogger