Pages

தோரணை

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
படம் - தோரணை
நடிகர்கள் - விஷால், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், கிஷோர், பாஸ்கர், சந்தானம் மற்றும் பலர்...
இசை - மணி ஷர்மா
திரைக்கதை, இயக்கம் - சபா ஐயப்பன்

மூன்று கோணத்தில் இருந்து கதை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்..... ஆனால்.....? அதில் குழம்பி, ரசிகர்களையும் குழப்பி இருக்கிறார்கள். இது ஏற்கனவே தருண்கோபி காட்டிய வழி......தான்.

கதை : விஷால் அண்ணன் கிஷோர் சின்ன வயசிலேயே காணாமல் போய்விடுகிறார், அவரைத்தேடி.... விஷால் சென்னை வருகிறார். ஆனால், தன் அண்ணன் உயிருக்கு இருக்கும் ஆபத்திலிருந்து, அண்ணனை மீட்டாரா ? என்பதே மீதிக்கதை. இடை இடையே ஸ்ரேயுடன் காதல் செய்கிறார், கிடைத்த இடத்தில் சந்தானத்துடன் சேர்ந்து சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

இதுதான் தனக்குண்டான பாதை என்று விஷாலே முடிவு செய்து படம் நெடுகிலும் பன்ச் டயலொக் பேசுவது, பறந்து பறந்து அடிப்பது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். பக்கம் பக்கமாக டயலொக் பேசி, தொழில்முறை தாதாக்களை திருத்தமுடியும் என்றால் போலீஸ்க்கு வேலை ஏது?

தோரணை - விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாக்கும்,
ரசிகர்களுக்கும் பெரிய தலைவேதனை. ;

No comments:

 

Blogger