Pages

விதை

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

என் மகன் ஒரு நாள் தன் தொப்புளை காட்டி "இது என்ன?" என்றான்

நான் அப்போதைக்கு... தப்பிக்க "நீ சின்னபிள்ளையாய் அம்மா வயிற்றில் இருக்கும்போது, அம்மா சாப்பிட்ட உணவில் பாதி உனக்கு இதன்மூலமாகத்தான் கிடைத்து...!" என்றேன் 'அப்பா தப்பிச்சாச்சி'.

பின் ஒரு நாள் டிவியில் ஏதோ ஒரு படத்திலிருந்து ஒரு காட்சியில் நாயகன், நாயகி தொப்புளில் முட்டை போடுவதை பார்த்திருப்பான் போலும், என்னிடம் வந்து......

"'டாடி' ஒரு அம்மா வயித்துல பாப்பா இருந்ததா?, அதற்காக அந்த 'அய்யா' அம்மா வயித்துல... 'ஆம்லெட்' போட்டாரு 'டாடி,' பாப்பாக்கு ரொம்ப பசிச்சிதுன்னு அவரு அம்மா வயித்துல 'ஆம்லெட்' போட்டாரா? என்றான்.

நான் அதிர்ச்சியில் "ஆம்" என்றேன் சொல்லென்ன கோபத்துடன்....

இதில் ஒரு நல்லதும் உண்டு அவன் இன்னும் தொப்புளில் பம்பரம் விடுவதை பார்க்கவில்லை......

;

No comments:

 

Blogger