Pages

கூடையில் என்ன பூ....?

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வந்தாரை வாழ வைத்த தமிழகத்தில், மந்தார இலையில் விருந்து இவருக்கு. சாயம் போனாலும் சரக்கு போனாலும் வாடிப் போகாத குஷ்பூ. வழக்கு முடிந்ததும் மறுபடி வழுக்கி விழாமல் இருக்க தாய் கழகத்தில் சேருவார், தேசிய கட்சியை தேடிப்போவார் என்றெல்லாம் ஆருடம் சொல்லப் பட்டது.

ஆனால் இனி கழகத்தின் கண்மணியாய் வலம் வருவார். மேலவை, கீழவை எதிலாவது ஏறி அமர்வார். ஓடி ஓஞ்ஜாலும், பாடி தேஞ்ஜாலும்... ஓடுற குதிரையில ஒக்காந்தால் தானே ஊர் போயி சேர முடியும்.
தலிவரே சொல்லிட்டாரு குஷ்பூ முற்போக்கான பெண் என்று, இனி ஒரு ....போக்கும் அவரை வைத்து அரசியல் செய்ய முடியாது.

இனி நெஞ்சு கணக்கும், மஞ்ச புடிக்கும், மானாட மாயிலாட, பெண் சிங்கம்னு கர்ஜித்தே இவர் காலம் போகும். ;

No comments:

 

Blogger