Pages

குப்ப மேட்டரு...

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மங்களூர் விமான விபத்து ஒரு தேசிய சோகம். தவறு இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று நிறைய ஊகங்கள் ரெக்கை கட்டுகின்றன. ஊடகங்களும் இழப்பின் எண்ணிக்கையை தன விருப்பத்துக்கு கூட்டி குறைத்துச் சொல்கின்றன. உயிர்களை புசித்து ஏப்பம் விட்டு மனித, இயந்திரத் தவறென்பதில் அர்த்தமில்லை. இனி இதுபோல் நடக்காமல் அதைத் சரி செய்வதே அந்த ஆத்மாக்களுக்குச் செய்யும் அஞ்சலி.

--------------XXX------------------XXX------------------

நாம் தமிழர் என்று முழங்கியவர்களும் இப்பொழுது தனிக்கட்சி தொடங்கி விட்டனர். இருக்குற கட்சி போதாதென்று மற்றுமொரு கட்சிக்கு IJK தொலைக்காட்சியில் தொல்லை கொடுக்கிறார்கள். எல்லோரும் தலைவனாகனும்னு நினைச்சா யாருதான் தொண்டனா இருக்குறது.

--------------XXX------------------XXX------------------

சினிமாவையே விஞ்சும் ஒரு கதை தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. ஒரு காவல் துறை அதிகாரி தன் வக்கிர எண்ணத்தை நிறைவேற்ற ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கியிருக்கிறார். நடந்தது இதுதான். ஏதோ ஒரு கேசில் நீதி வேண்டி இந்த காமுகன் இருக்கும் நிலையம் சென்றிருக்கிறனர் கணவனும் மனைவியும்.

பார்த்த உடனே இவருக்குள் காமம் பாஸ்பரசாய் பற்றிக்கொள்ள அந்த தம்பதியை அடிக்கடி தன்னை தேடி வரும்படி செய்திருக்கிறார். அவரது வக்கிர பார்வை பிடிக்காமல் இந்த பெண் வரவில்லை என்றால் வீடு தேடி வந்து தன் இச்சைக்கு இறை தேடி இருக்கிறார். இவனுக்கு பயந்தே அவர்கள் வேறு இடம் மாறிவிட்ட போதும், தொல்லை தாளவில்லை. கணவன் வெளிநாடு சென்றது இந்த காமுகனுக்கு ரொம்ப வசதியாய் போய் விட்டது. என்ன தேவையோ அதை மிரட்டியே பெற்றிருக்கிறான்.

இப்பொழுதும் அந்த பெண்ணை மறைத்து வைத்து, கணவனை விரட்டி அடித்திருக்கிறான். தன் அரசியல் செல்வாக்கால் இந்த கேசை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவான். இவ்வளவுக்கு பிறகும் அந்த கணவன் தன் மனைவி மனதால் நல்லவள், அதனால் நான் அவளுடன்தான் வாழ்வேன் என்று சொல்கிறார். "நல்லார் ஒருவர் உளரேல், கோடையிலும் மழை பொழியும்".

--------------XXX------------------XXX------------------

பய்யாவ சுறா விழுங்கியது, சுறாவ சிங்கம் அடிக்கும்னு சொல்லி சொல்லி பார்ப்பவர் மனதில் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். சுறா சூம்பிப் போயி சுப்புக்கே இரையானாலும் குடும்ப தொலைக்காட்சியில் வெற்றின்னு முரசறையுறாங்கோ. ஆககூடி தங்கள் சர்வாதிகாரத்தை வெள்ளித்திரையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார்கள்.

இனி அடுத்த சப்ப படம் தங்கள் பானரில் வரும்வரைக்கும் சுறாவும், சிங்கமும் கம்பீரமாக முன்னணியில் இருப்பார்கள்.

--------------XXX------------------XXX------------------

கற்புக்கரசி, கலியுக கண்ணகி குஷ்பூ ஒரு தொலைகாட்சி பேட்டியில், தனக்கும் பிரபுவுக்கும் தொடர்பிருந்தது உண்மை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், பிரபு மனைவிக்கு இது மனக் கஷ்டம்தானேன்னு கேட்டதுக்கு, காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்லியிருக்கிறார். இப்போ புரியிதா கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வச்சுக்கிரதுல தப்பில்லை, அது பப்பி லவ்வுனாலும் டப்பி லவ்வுன்னாலும்.

;

No comments:

 

Blogger