Pages

ஆந்திர முதல்வரின் அகால மரணம்

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
"ஹாய்....! I'm ராஜு, வேங்கடபதி ராஜு, IIT பைனல்" என்று தன் உரையை ஆரம்பித்தான்.... முடித்த நேரம், அரங்கமே கை தட்டலால் அதிர்ந்தது. சிறப்பு விருந்தினராக இருந்த ஜனாதிபதி... "அப்பாக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார்..." என்றார். விழா முடிந்து எல்லோரும் அரங்கு விட்டு வெளியே வரும்வரை, ராஜுவை மொய்த்தார்கள்.

ராஜு ஆந்திர முதல்வரின் ஒரே வாரிசு, ஆனால் தன் சொந்த காலின் நிற்க வேண்டும் என்று சென்னையில் கடந்த பன்னிரண்டு வருடமாக தங்கி படிக்கிறான். தன் செலவுக்கு ஒரு சுற்றுலா துறை நிறுவனத்தில் டூர் மனேஜராக பகுதி நேர வேலை செய்கிறான்.

அறைக்கு வந்ததும் பிலால் ராஜுவிடம் "Excellant presentation, surely it could grab the required attention. அறிவாளிகள் உருவாவதில்லை பிறக்கிறார்கள் என்பதற்கு நீ ஒரு உதாரணம். மச்சி உன் அப்பா முதல்வர். ஆனால் நீ உன் சொந்த காலில் நிக்க வேண்டும் என்று தனியாக அரை எடுத்து, என்னை மாதிரி பிச்சை எடுத்து படிப்பவனுடன் தங்கி..... படிக்கிறே, உனக்கு ஏன் இந்த தலை எழுத்து..?"

"இல்லைடா உங்களுக்கு எல்லாம் அவர ஒரு தலைவராத் தான் தெரியும், ஆனால் எனக்கு அவர் அப்பா, காலை எழுந்ததில் இருந்து, இரவு தூங்கப் போகும் வரை, அவரைச் சுத்தி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவர் அடிப்படையிலேயே ரொம்ப நல்லவர், ஆனால் எவ்வளவோ விஷயங்கள் தனக்குப் பிடிக்காமல் செய்கிறார். அவர் இந்த நாட்டுக்கு எவ்வளோவோ செய்யனும்னு நினைக்கிறார், ஆனால் அதில் பத்து சதவீதம் கூட அவரால் செய்ய முடியவில்லை. அதற்க்கு நிறைய காரணம் இருக்கு. அவர் இந்த பாழாப் போன அரசியல விட்டு போகலாம்னு நினைச்சாக் கூட, மக்கள் அவர்தான் வேண்டும் என்று கேட்கிறார்கள். உனக்கேத் தெரியும், அவர் இந்த முறை எலக்ஷனில் நிக்கவேஇல்லை, ஆனால் மக்கள் விரும்பி அவரை பதவியை ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். மறுபடியும் ஒரு தொகுதி இடைத் தேர்தல் நடத்தி, அவரை வெற்றி பெறச் செய்தார்கள்.... எல்லாம் விதி. நானோ என் குடும்பத்தினரோ அவரைப் பார்க்க வேண்டும் என்றால் கூட, appointmentதான் என்ன செய்ய அவர் வேலை அதுமாதிரி. Initially we too had problem in coping-up with this setup, but as days passed, we'v learnt this system"

"இருந்தாலும்..... மச்சி இப்போது வாரிசு அரசியல் ரொம்ப சாதாரணம், நீயும் அவர் வழியிலேயே அரசியல்லுக்கு போனால், அந்த மாநிலத்துக்கு இன்னும் நல்லது நடக்கும்"

"பிலால்..... உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன், இதைப் பற்றி பேசுவதை நிறுத்து. நான் அவரை விட்டு ஒதுங்கியுருப்பதுதான் அவருக்கும் பிடிக்கும், எனக்கும் இதுதான் நல்லது போல் தெரிகிறது. அதனால்தான் என் பள்ளிப் படிப்பு முழுவதும் நான் சென்னையிலேயே பாண்ணினேன். இப்போது இந்த படிப்பு முடிந்ததும், வெளிநாடு சென்று படிக்க வேண்டும், நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும், இந்த சுற்றுச்சூழல் மாசு படுவதைத் தடுக்க வேண்டும். ஆனால் அது எல்லாம் நான் ராஜூவாக இருந்துதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். I' wannah will stop this global varming, for that i dont' need my dad's tag. மச்சி நான் ரொம்ப சாதாரண வாழ்க்கை வாழ நினைக்கிறேன், ஆயிஷாவை கைப் பிடித்து, கடைசி காலம் வரை, அவள் மடியிலேயே இருக்க வேண்டும்."

"சரிடா வா சாப்பிடப் போகலாம்.."
"ஒகே, wait i'll be back in a minute, after taking bath..."

ஆயிஷா ஒரு இஸ்லாமிய கல்லூரியில் கடைசி வருட MBA படிக்கிறாள். டென்னிஸ் விளையாடும் போது ராஜுவுடன் பழக்கம், இருவர் அலைவரிசையும் ஒத்துப் போக.... வெகு விரைவிலேயே அது காதலாக பரிமளித்தது.

ராஜு குளிக்க டாய்லெட் போன உடன் அவன் போன் அலறவும்....
"ராஜு உனக்கு போன்"
"யாரு... மச்சி...?"
"ஆயிஷா...."
"எடுத்துப் பேசுடா..."
"ஏய் நீயே வந்து பேசு..." அது ஒரு ஐந்தாறு முறை அலறி பின் அமைதியானது. ஆனால் மறுபடியும் அது அலறவே, பிலால் எடுத்தான்.

"ஹலோ...!"
"அண்ணே அஸ்ஸலாமு அலைக்கும்"
"வாஹ் அலைக்கும் அஸ்ஸலாம், எப்படிம்மா இருக்கே...?"
"நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க....?"
"நல்லா இருக்கேன்மா"
"அண்ணே..., ராஜு எங்கே....?"
"உள்ளே குளிக்கிறான்"
"அண்ணே, அவருக்கு நான் ப்ரோக்ரம்முக்கு வரலைன்னு, ரொம்ப கோபம், நான் என்ன பண்ணுறது, எங்க வீட்டுல இன்னைக்கி, அக்காக்கு நிச்சய தார்த்தம் அதனால்தான் வர முடியாமப் போயிடுச்சி..."
"பரவாயில்லைமா, நான் அவன் வந்ததும், சமாதானம் பண்ணி, உன்னிடம் பேசச் சொல்கிறேன்"
"தேங்க்ஸ்... அண்ணே"

ராஜு குளித்து வந்ததும், தலை கூட துவட்டாமல், ஆயிஷாக்கு போன் பண்ணினான்....
"ஹாய் டார்லிங்.... நான் உன்னை தப்பா நினைப்பேனா, இல்லடா செல்லம், I know what's your problem was, dont worry. சரி நிச்சயம் எப்படி போனது...?"

"Oh went on well"

"OK babe take care, ill meet you tomorrow" என்று போனைக் கட் பண்ணினான்.

"வா மச்சி சாப்பிடப் போகலாம்"

"ராஜு ரெண்டு ரிங்குல போன் எடுக்கலன்ன உடனே, ஆயிஷா ரொம்ப பயந்துப் போயிட்டா...."

"அவளுக்கு நான் அவளை கை பிடிக்கும் வரை இந்த பயம் இருக்கும்"

"எப்போதான் கல்யாணம்...?"

"அப்பா எப்போவோ சம்மதிச்சிட்டார், நான்தான் அவள் படிப்பு முடியட்டும் என்று சொல்லியிருக்கிறேன்"

கேன்டீன் வந்து தட்டை எடுத்து, ஆளுக்கு ரெண்டு சப்பாத்தி, கொஞ்சம் தால் எடுத்து வந்து உட்கார்ந்தார்கள். அப்பொழுதுதான் டிவியைப் பார்த்தார்கள், காமடி டைமில் வடிவேலு தனக்குத் தெரியாமலே எரித்த தன் தந்தையின் சாம்பல் என்று நினைத்து வேறொருவரின் சாம்பலை உடம்பெல்லாம் பூசிக் கொள்ளும் கட்சி திரையில் ஓடியது.

பிலால் ஏதோ முக்கிய செய்தி திரையில் கிழே ஓடுவதைப் பார்த்தான், "அதில் ஆந்திர முதல்வர் மாயம், தேடுதலைத் தீவிரப் படுத்தியுருக்கிறது அரசு" என்று வந்தது. அதிர்ந்தவன் ராஜுவையும் அதைப் பார்க்கச் சொன்னான். அதிர்ந்தவர்களாக, வேகமாக வேறு நியுஸ் சானலை மாற்றி, பார்த்தபோதுதான் அவர்களுக்கே விஷயம் தெரிந்தது. உடனே ராஜு தன் தந்தையின் செல்லுக்கு தொடர்பு கொண்டான், அது தொடர்பு எயல்லைக்கு வெளியே இருந்தது. அவரது அந்தரங்க காரியதரிசியின் என்னும் அவ்வாறே, என்ன செய்வது என்று தெரியாமல். ஆந்திர DIGக்கு போன் அடித்தான் அவர்
"Sir, dont worry we are trying our level best. His chopper deviated from the signal after 20 minutes of fly, due to bad weather they might have landed somewhere. If possible can you come down"

"OK i'm starting now"

என்று போனை வைத்து. அப்படியே ஏர்போர்ட் போய்... வீடு வந்து சேர்ந்தான். அம்மா ரொம்ப கவலையாக இறந்தார்கள். அவர்கள் முகத்தைப் பார்க்கவே ரொம்ப கலவரமாக இருந்தது. ஆனால் அருகில் சென்று பேசக் கூட முடியாமல் அவனை மீடியாக்கள் சூழ்ந்துக் கொண்டன. திரும்பவும் பல மட்டங்களில் இருந்து விசாரணைகள் போன் கால்கள் என்று ரொம்பவே பரபரப்பானான். இரவு முழுவதும் தேடுதல் பணி நடந்தது. ஆனால் ராஜுவின் உள் மனசு, காலை ஒன்பது மணிக்கு போனவர், இன்னும் ஒரு தகவலும் இல்லை என்றால்.... ஏதோ அசம்பாவிதம் நடந்ததாகவே தோன்றியது.

"Sir, there is no signal even from the Emergency Locator, we are trying our best. Even army helicopter and rescue people being used in this operation. We'll surely get him alive dont worry" என்றார் உள்துறை அமைச்சர்.

ஆனால் அதிகாலை மூன்று மணியளவில் அவர்களின் Chopper காட்டுப் பகுதியில் நொறுங்கிக் கிடப்பதாகவும் பயணம் செய்த ஒருவருமே உயிருடன் இல்லை என்றும் தகவல் வந்தது அப்படியே உடைந்துபோய் சரிந்தான் ராஜு.

அவரது பூத உடல் அடக்கம் ரொம்ப சிறப்பாகவே நடந்தது. அது முடிந்த அடுத்த கணமே, யார் அடுத்த முதல்வர் என்னும் பேச்சு கட்சிக்குள்ளும், மாநிலத்திலும் பரபரப்பாக எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் கட்சி நிர்வாகிகளும், மேலிடமும், ராஜுதான் அடுத்த முதல்வர் ஆக வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் ராஜு மறுத்தான். பிரதமரே அவனிடம் தனியாகப் பேசி, சம்மதிக்க வைத்தார்.

விருப்பமில்லாமல் முள் கிரீடத்தை தலையில் ஏற்றினான். நாளடைவில் அரசியல் கை வரப்பெற்று, ஒரு சிறந்த முதல்வராக மாறினான். ஆனால் ஆயிஷாவினால்தான் அவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சாதிய அடிப்படை கொண்ட கட்சியின் தலைவராகப் பொறுப் பேற்றதினால்.... ராஜுவால் ஆயிஷாவைக் கைபற்ற முடியவில்லை.

ஆயிஷாவும் குடும்பத்தாரின் வற்புறுத்தலினால் தன் தலைவிதியை நொந்து கொண்டே, வேறொருவரைத் திருமணம் செய்துக் கொண்டாள். ;

2 comments:

கலையரசன் said...

புணைவா? அருமையா இருக்கு தல!!

பித்தன் said...

நன்றி கலை....

 

Blogger