Pages

மனைவி அமைவதெல்லாம்......

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
"அவர்கள் இருந்த தடம் தெரியவில்லை, எல்லாவற்றையும் மறக்காமல் எடுத்துச் சென்ர்ரிருக்கிர்றார்கள், உபயோகித்த பழைய சோப்புத் துண்டைக் கூட எடுத்துச் சென்றுவிட்டார்கள்" என்றாள் என் மனைவி "சரி விடு!!!" என்று இணைப்பைத் துண்டித்தேன். வீடு வந்து பார்த்ததும் எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. "Are we not deserve a word?"
----------------------
எனது மாமாக்கு திருமணம் ஆகி இருபது வருடம் முடிந்திருந்தது. மனைவி அப்படி ஒன்றும் அழகில்லை முன் பற்கள் துரத்திக் கொண்டிருக்க முண்டக்கண்னோட இருப்பார், யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டார். ஆனால் மாமா அதற்க்கு நேர் எதிர் எல்லோரிடமும் கககலப்பாய் சிரிக்கச் சிரிக்க பேசுவார்.

மாமா உடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இரண்டு பெண்கள். ஆறு பேருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருந்த போதும், இவரின் மனைவி மட்டும், தன் தாய் வீட்டில் பதினைந்து வருடம் இருந்தார். மாமா வெளிநாட்டில் இருந்தார் ஊருக்கு வரும்போது மட்டும் மனைவியை இங்கே தங்கச் சொல்லுவார்.

அவர் மனைவி ஒரு வேலையும் செய்யமாட்டார், காய்கறி நறுக்கினால் கூட அவருக்கு கை, கால் வலி வந்துவிடும். மாமா ஊரில் இருக்கும் நாட்களில் கூட, மாமாவே சமையல் முதல் வீடு கூட்டுவது வரை, எல்லாம் மாமாதான். முகம் கோனவே மாட்டார், எல்லா வேலையும் ஒரு அன்னையின் பரிவுடன் மகளிருக்கே உண்டான குணங்கள் கொண்டு ஒரு தாயாகவே பாவித்துச் செய்வார். ஒரு வேலையும் செய்யாமல் வக்கணையாக அதுவும் சுடச் சுட வேண்டும் அவளுக்கு. எங்கேனும் விசேசத்திற்கு போனாலும் சரியாக பன்னிரண்டு மணிக்கு பக்கத்தில் உள்ள ஏதாவது ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுவிடுவார்.

இதெல்லாம் கூட்டுக் குடும்பத்தில் பெரிய சுனாமியை உண்டாக்கியது. 'நாருடன் சேர்ந்து, பூவும் நாறும்' என்பதனால், அவர்கள் தனிக்கொடித்தனம் வைக்கப்பட்டனர். இபொழுது அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு, சின்னவன் பத்தாம் வகுப்பு. இன்றுவரை மாமி தனியாக ஒரு இடத்திற்கும் செல்லமாட்டாள், பக்கத்துத் தெரு என்றாலும் யாரவது கூட சென்றால்தான் போவார்.

இதற்கிடையில் மூன்று மாதத்திற்கு முன், மாமிக்கு சிறுநீரகத்தில் கல் என்பதனால் சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. மாமியின் குரலுக்கு பணிந்து, விடுப்பில் இருந்து போன மாதமே வந்திருந்தாலும், மாமா பதினைந்து நாள் விடுப்பில் ஊருக்கு சென்றார். அப்பொழுதே அவர் மேலதிகாரி அவரை எச்சரித்துத்தான் அனுப்பினார். பக்கத்தில் இருந்து மாமியையும் பிள்ளைகளையும் ஒருசேர பாரதக் கொண்டது மாமாதான். மாமா உடன்பிரந்தவர்களிடமும் மாமி சண்டையிட்டதனால் வந்த வினை.

ஊருக்குப் பொய் வந்த இரண்டு மாதம் கழித்து, என்னை அழைத்து,
"நான் என் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்" என்றார் எனக்கு தூக்கிவாரிப் போட்டது
"என்ன மாமா இது? அவங்க சொல்லறது எல்லாத்துக்கும் நீங்க தலையாட்டுகிறீர்கள், உங்களுக்கு கோபமே வராதா?" சற்று கடுமையாகவே இருந்தது என் குரல் "வரும்தான்! என்ன செய்யிறது? யாராவது ஒருத்தர் அனுசரித்துத்தான் போகவேண்டும்".

"சரி மாமா! ஒரு யோசனை, மாமியை ஒரு மாதத்திற்கு, இங்கே கூட்டி வந்து வைத்தால், அவர்கள் மனதும் சாந்தப்படும், அப்படியே நீங்கள் இரண்டுபேரும் கலந்தாலோசிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றேன் "சரி" என்றார். "நான் எனது மனிவியுடன் இருப்பதால் உங்களுக்கு ஒரு மாதத்திற்கு தங்க இடம் தனியாகப் பார்க்க வேண்டாம்" என்றேன். "சரி" என்றார்.

மிகவும் கஷ்ட்டப்பட்டு, மாமிக்கு ஒரு மாதத்தில் விசா ஏற்பாடு செய்தோம். அந்த நாளும் வந்தது, மாமி எதுவும் செய்யமாட்டாள் என்பதனால், என் அம்மா அவர்களுக்கும், எங்களுக்கும் சேர்த்து மசாலா, பருப்பு வகைகளை பெட்டியில் கட்டி மாமியிடம் கொடுத்திருந்தார்கள். நான் தொலைப்பேசியில் பேசும்போது, என் அம்மா என் மனிவியிடம் "மா! மாமி ஒரு வேலையும் செய்யமாட்டாள், நீ அவள் இருக்கும் ஒரு மாதம் கொஞ்சம் அனுசரித்துப் போ" என்றார் "சரி" என்றோம்.

மாமி வந்திறங்கினார், ப்ரிச்சனையுடன். எங்கள் பெட்டி ஊரிலேயே அவர்கள் வீட்டிலிருந்தே வரவில்லை. மாமியின் அப்பா தன் நாற்பது வயது குழந்தை இவ்வளவு சுமை தூக்காது என்பதனால் "இங்கேயே வைத்துவிடு" என்றிருக்கிறார். இவளும், ஒரு மாதம் ஒரு வீட்டில் தங்கப் போகிறோமே, இதில் நமக்கான பொருளும் இருக்கிறதே, என்கிற சுயவுணர்வு கூட இல்லாமல் வந்திறங்கினாள். அப்பொழுதே என் மனைவி "என்னங்க! இது மாமி தங்கச்சி வீட்டுக்கு பொருட்கள் வாங்கி வந்திருக்கிறார்கள், நம் பொருளை வீட்டிலே போட்டு வந்திருக்கிறார்கள்" "சரி நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம்" என்றேன்.

இரண்டு வாரத்தில் எவ்வளவோ பிரச்சனையை என் காதில் ஊதினால் மனைவி. "இவ்வளவு வயதாகியும் லஜ்ஜையே இல்லாமல் மாமா பின்னாடியே சுற்றுகிறார்கள் , சாப்பிடும்போதும் இருவர் தொடை ஒட்டியே இருக்கும்படி உட்காருகிறார்கள், சிலநேரங்களில், கதவு திறந்திருக்கும் பொது, நம் பிள்ளைகள் அந்த அறை செல்ல நேர்ந்தால்....., சொல்ல கூசும் நிலையில் இருக்கிறார்கள். பிள்ளைகள் வலம் வருகிறார்கள் என்றாலும் கூட நிலை மாறுவதில்லை. நான் அவர்கள் இருவருக்கும் சேர்த்து சமைக்கும்போது, அவர்கள் தனியாக தனக்கு மட்டும் ஏதாவது சமைத்து சாப்பிடுகிறார்கள், பிள்ளைகள் இருந்தாலும் கொடுப்பதில்லை" என்றாள்
"இது எல்லாம் இன்னும் இரண்டு வாரம் தானே?" என்று சொன்னேன்.

அது நடக்கும் வரை......! அன்று மாமா, மாமி மட்டும் நூடூல்ஸ் சமைத்து சாப்பிட்டார்கள், நாங்கள் அருகில் இருந்தும், எதுவும் கேட்கவில்லை, அவர்கள் சாப்பிட்டுகொண்டிருக்கும்போது..... என் நாலுவயது மகன் என் மனிவியிடம் "ஏம்மா! அவங்க மட்டும் நூடூல்ஸ் சாப்பிடுகிறார்கள்" என்றான் . இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் சற்று கோபமாகி
"உங்களுக்கும் சேர்த்துத்தான், இவ சமைக்கிறாள், ஆனால்....... நீங்கள், அந்த சின்ன பிள்ளைகளுக்கு ஒரு தேக்கரண்டியளவு சேர்த்துப் போட்டிருக்கலாம்" என்றேன்
"எனக்கு அதற்குமேல் சமைக்கத் தெரியாது" என்றாள் "அப்படியே இல்லையென்றாலும்...., உங்கள் தட்டிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்துப் போட்டிருந்தாலும் போதும்" என்றதுதான் தாமதம், மாமி தாரைத் தாரையாக கண்ணீர் வடித்தாள்.

"வந்ததிலிருந்தே எனக்கு இங்கே சுதந்திரம் இல்லை, எனக்கு என் வீட்டில் இருந்ததுபோல் இல்லை" என்றாள்
நான் "இப்படி யார் மீது தப்பென்று பார்க்காமல், நீங்கள் பேசுவது தவறு" என்றேன்
"அப்படியென்றால் நாங்கள் வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறோம்" என்றாள் நான் எதுவும் சொல்லவில்லை. பின்னர் நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் சாந்தப் படவில்லை.

அன்றிலிருந்து பத்து நாட்கள் மாமி ஊருக்குப் போகும் வரை, அவர்கள் எங்கள் யாரிடமும் பேசுவது இல்லை, என் பிள்ளைகளிடமும்தான். ஒரு வெறுமையாகவே எல்லா நாளும் கழிந்தது. அவர்கள் தனித் தீவாய் இயங்கினார்கள். அன்று ஊருக்கு போகும் நாள்...., என்னதான் செய்கிறார்கள் என்று பொறுமைகாத்தோம்.... காலை நாங்கள் எழுந்து பார்த்த போது, அவர்கள் உடைமைகள் எல்லாம் காணாமல் போயிருந்தன, அவர்களையும் சேர்த்து. 'நல்லார்க்கு அழகு, சொல்லாமல் செல்லுதல் போலும். '

பின்பொருநாள், மாமாவைப் பார்க்க அவர் அறைக்குச் சென்றேன், நான் ஏதும் பேசும்முன்பே, அவரே
"என்ன மன்னிச்சிடுப்பா!!!" என்றார்
"என்ன மாமா!!!, பெரிய வார்த்தையெல்லாம்"
"இல்லாப்பா! எனக்குத் தெரியும் யார் மேல் தப்பென்று"
"இருந்தாலும்..... நீங்கள் அவர்களுக்கு ரொம்பதான்" என்றேன்
"என்ன பண்ணுறது ?? 'வாழ்க்கைத் துணை, சிலருக்கு நாணல்போல், சிலருக்கு நாய் வால்போல்" என்றார்
"இப்போகூட எப்படி நீங்கள் நகைச்சுவையாய்?" என்றேன்
"பழகிவிட்டது"
"இருந்தாலும்.... நீங்கள் அவர்களுக்கு, ரொம்மத்தான் வளைந்துக் கொடுக்கிறீர்கள். அவர்கள் ஒருத்தருக்காக இப்படி எல்லோரையும் பகைத்துக்......."

"உன் பிள்ளைகள் இதுபோல் செய்தால் என்ன செய்வாய்?"
"என்ன மாமா அவர்கள் பிள்ளைகள்!!!"
"இவளும் எனக்கு பிள்ளைதான், என்ன செய்ய......? 'மனைவி அமைவதெல்லாம்.........." எனும்போது அவர் கண்ணில் இரு துளி நீர்!!!. ;
 

Blogger