Pages

குப்ப மேட்டரு...

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று அதிகாலை மேற்கு வங்க மாநிலம் பிர்புர் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் 52 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஒவ்வொரு விபத்திலும் உயிர் பலி நம் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குவதும், மெல்ல மெல்ல அன்றாடம் நம்மை அதைக் கடந்துபோகச் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. பலியானவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
--------------XXX------------------XXX------------------
சினிமா டுடே என்ற கண்காட்சி. இம்மாதம் 23, 24, 25 தேதிகளில் சென்னை டிரெட் சென்ட்டரில் நடத்தப்படவுள்ளது. 80 வயதை தாண்டியும் கலையுலகத்திற்காக தொடர்ந்து எழுதி வரும் முதல்வர் கலைஞரை கவுரவிக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் நீள கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தவிருக்கிறார்களாம் இந்த கண்காட்சியில். இது கின்னசில் இடம் பிடிக்கும் என்கிறார்கள். (ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு தொடர்ச்சியான காகிதத்தையும் இதற்காக உருவாக்கி வருகிறார்களாம்)
--------------XXX------------------XXX------------------
மதராசப்பட்டினம் பழைய சென்னையை கண்முன்னே காட்டியது. நம் சுயநலத்துக்காக அழிக்கப்படும் வளங்களின் மதிப்பை நாம் என்றுமே உணர்வதில்லை. குறைந்த பட்சம் ஒரு துளி வருத்தம், லஜ்ஜை ஏதுமில்லாத சுயநலமிகளாக இருக்கிறோம். இந்த உணர்வு நம்மில் எழுவதுதான் படத்தின் வெற்றி. படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றிகலந்த சபாஷ்.
--------------XXX------------------XXX------------------
பத்து நாளாக 'சன்' டைரக்ட் சரியாக வரவில்லை(இன்றுவரை), அமைதியாக வீட்டில் வேலை செய்ய முடிகிறது. இல்லையென்றால் எப்பொழுதும் டீக்கடைபோல் ஏதாவது ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். முதல் ஒன்றிரண்டு நாட்கள் தனித்து தீகார் ஜெயிலில் விட்டதுபோல் ஆனது, சற்று தாமதமாக சுதாரித்துக் கொண்டு பரணில் இருந்த புத்தகங்களை எடுத்து படிக்க, 'அர்த்தராத்திரி விழிப்பு வந்து, துணிவிலகிய மனைவியைப் பார்த்ததுபோல்....' பரவசம் மேலிட மூன்று புத்தகங்கள் படித்து முடித்து விட்டேன். படிப்பதில் உள்ள சுகம் அலாதியானது, நம்முடைய கற்பனைத்திறனை விரிவடையச் செய்கிறது. வாசிப்பென்பது ஆசிரியர் கைப்பிடித்து அவர் உணர்ந்ததை, பார்த்ததை நமக்கு அப்படியே தருவது,
இந்த கற்பனை தளமென்பது வாசகனின் தேவை, புரிதலுக்கேற்ப விரிவடைகிறது. சில விஷயங்கள் பார்க்க ஆழகாக இருக்கும், சில வாசிப்பில் விரிவடையும்.
--------------XXX------------------XXX------------------
அஜீத் வெங்கட்பிரபு இணைவது உறுதியான நிலையில்...., இப்போது தலைப்பில் ஒரு சிறு சிக்கல் வந்துள்ளது. இவர்கள் தேர்வு செய்த தலைப்பு 'மங்காத்தா' இது ஜெமினி நிறுவனத்தை சேர்ந்த மனோ அக்கினேனி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இந்த தலைப்புக்கு ஏற்ற கதையன்றை இயக்கும் முடிவிலிருக்கும் அவர், எக்காரணத்தை முன்னிட்டும் மங்காத்தா தலைப்பை தாரை வார்ப்பதாக இல்லையாம். ஆனால் இந்த தலைப்புக்காக அஜீத்தே அக்கினேனியிடம் போனில் பேசினாராம் முடிவு ஒன்னும் தெரியவில்லை தல தலைப்பில் என்ன இருக்கு அது வெறும் தோலு, உள்ளடக்கம்தான் (கதை) முக்கியம் அதில் கவனம் செலுத்து.
--------------XXX------------------XXX------------------
நண்பரொருவர் பேசிக் கொண்டிருந்தபோது ப்ளாக்கில் எழுதுகிறேன் என்று சொன்னேன். நிறைய எழுத்தாளர்களும் இதில் இருக்கிறார்கள் பலதரப்பட்ட நடை, சொற்ப்ரியோகம், கருத்துப் பரிமாற்றம் எல்லாம் நிகழ்கிறது என்று சொன்னேன். "அப்படின்னா எனக்கு ஐந்து லட்ச ரூபாயில் ஒரு நல்ல பிசினஸ் பரிந்துக்கச் சொல்லுங்களேன்" என்று சொன்னார். "என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க....!" என்றேன் அதிர்ச்சி விலகாமல். "ஆமாசார், எவ்வளோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் யாராவது நல்ல ஐடியா தருவார்கள்" என்றார். யாருகிட்டயாவது இருக்கா....? (எப்படியெல்லாம் மாட்டிக்கிட்டு முழுக்கிறேன்)
;

No comments:

 

Blogger