Pages

குப்ப மேட்டரு...

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சில நாட்கள் முன்னாடி நம்ம ஹிந்தி பிட்டு பட நடிகை ராக்கி சாவந்த், மிகப் பெரிய சுயம்வரம் நடத்தி, அதை டிவியில எல்லாம் ஒளிபரப்பி, ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்தாங்க. அதே போல நம்ம தமிழ் சினிமா தொடை, இடை அழகிகளும் இதைச் செய்யலாம்னு இருந்தாங்க. இப்போ அவங்க ரெண்டு பேர் மனசும் ஒத்து போகவில்லை என்ற கருத்தில்.... ஒத்து போய் பிரியலாம்னு முடிவு செஞ்சிட்டாங்க.

இது எல்லாம் வீண் விளம்பர யுக்திதான்னு இப்போ தெளிவாகத் தெரிந்து விட்டது. இருவர் எதிர்பார்ப்பும், எதிரெதிர் திசையிலிருந்ததால்... இந்த விலகல். அது சரி அவன் அவளிடம் எதிர் பார்த்தது அவளை, அவள் அவனிடம் எதிர்பார்த்தது பணத்தை. ஆசைகள் அதிகமானதால்.... நிராசைகள் நிலையானது.

எலி எள்ளுக்கு காய்ந்ததும், புலி புல்லுக்கு ஏங்கியதும், புராணங்களில் கூட இல்லை.

---X---X---

கிரிக்கெட் அம்பயர் டேவிட் செப்பர்ட் நேற்று மரணமடிந்து விட்டார். அவரது சிரித்த முகமும், கூர்மையான பார்வையும், தேர்ந்த கிரிக்கெட் அறிவும் உலகறிந்ததே!!. அவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.

---X---X---

பெங்களூரையே நடுங்கவைத்திருக்கிறான் மோகன்குமார். ஒன்றல்ல...இரண்டல்ல...19 கொலைகள். அத்தனை பேரையும் சயனைடு கொடுத்துக் கொன்றிருக்கிறான். மூன்று மாதங்களுக்கு ஒன்று வீதம் கடந்த 5 வருடங்களில் 19 பெண்களைத் தீர்த்துக்கட்டிய இவனைப் போல ஒரு சீரியல் கில்லரை இந்தியா இதுவரை கண்டதில்லை!

இது அவன் நினைவில் வைத்துச் சொன்ன்னது ஆனால் இது 60க்கும் மேல் என்று போலீஸ நம்புகிறது. அவன் மயக்கிய பெண்களில் ஒரு நக்சலைட்டும் உண்டு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பெண்களே உஷார்....!

இதை அவனே ஒத்துக் கொண்டிருக்கிறான் சீக்கிரமாக இந்த வழ்க்கை முடித்து அவனுக்கு உச்சபச்ச தண்டனை அளித்தால் தப்பு செய்ய நினைப்பவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும். செய்வார்களா....? ;

4 comments:

Suresh Kumar said...

அது ஒரு கேம் ஷோ தான் என நினைக்கிறேன் நண்பா

பித்தன் said...

yes but they said that they will get marry.....

Btc Guider said...

உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
http://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html

பித்தன் said...

நன்றி

 

Blogger