Pages

கடவுளே நீ என; கண்டுணர்ந்தவன் நான்....!!!

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



என் உலகம் உதித்தது
உன் உறவைப் பற்றி;
என் வாழ்க்கை முழுதும்,
வருவேன் உன்னைச் சுற்றி.

ஊர் பல சுற்றி,
உணவு பல உண்டாலும்,
உன் உதிரத்தால் 'பால்'ஆன
சுவைக்கேது ஈடு!!

மஞ்சனைகளும், பஞ்சனைகளும்
பல ரகத்தில் உண்டு;
உன் மடி தரும் சுகம் - அது
கடந்திடும் பல யுகம்.

காப்பியங்களும், காவியங்களும்
தேடித், தேடி வாசித்தேன்.....
உன் ஒற்றை வரி,
கடிதம் போல்....
ஒன்றையும் காணேன்

இசைக்கு ராஜா பலர்
இங்கே உளர்.
"ஏய்.......ய் ராஜா...." என்று
நீ என்னை அழைக்கையில்.....
அதற்க்கேது நிகர்.

நோய் பிணி நீங்க
வாய் வழி மருந்து நூறு
நீ தரும் இஞ்சிச் சாறு;
அதை ஓட்டிடும் தூர.

தொலைவில் இருந்தால்,
தொடர்பு வழி கோடி.
உன் தொப்புள்கோடி ஒன்றுதான்;
இதுக்கெல்லாம் முன்னோடி.

திரைகடலோடி நான்
சேர்த்தைவைகள் துச்சம்.
உன் புன்னைகைதானே,
இதிலெல்லாம் உச்சம்!!!

கடவுளையே எனக்கு,
காட்டியவள் நீ!;
கடவுளே நீ என;
கண்டுணர்ந்தவன் நான்....!!!
;

No comments:

 

Blogger