Pages

எந்திரன் - ஒரு பார்வை

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வலை உலகில் முதல் முறையாக..................

கதை,வசனம் சுஜாதா, சங்கர் மற்றும் வைரமுத்து மகன் கார்கி. கதையை தேய்த்து செய்திருப்பதில் இம்மூவரின் பங்கும் ரொம்ப முக்கியம். என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா இவர் இல்லை என்றால்....... அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆங்காங்கே விஞ்ஞான தகவல்களைத் தூவி தன்னை நிருபித்துக் கொள்கிறார். மனிதர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். 'பி' 'சி' சென்டருக்கும் புரியும்படி எளிய விளக்கங்களைக் கொடுத்து கதையை தோள் கொடுத்து நடத்தியிருக்கிறார். hats off to him....

உலகமே எதிர்பார்த்த மாபெரும் படம், அந்த எதிர்பார்ப்பை இருநூறு சதம் நிறைவேற்றி இருக்கிறது. கண்டிப்பா எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி இந்த படம். தமிழில் ஒரு புது முயற்சி, இன்னும் என்ன என்ன வேண்டுமோ அதெல்லாம் நிரப்பிக் கொள்ளுங்கள். கதை ஒரு வரியில் சொல்லி விடக் கூடியதுதான், அதை சொல்லிய விதம் தமிழுக்கு புதுசு.

ரஜினி climaxஇல் ஒரு அரைமணிநேரம் கலக்கியிருக்கிறார், மூன்றுமுகம் ரஜினியைப் பார்த்ததுபோல் இருந்தது. என்ன ஒரு நடிப்பு. இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் இப்பட மேக்கப்புக்காக தன்னை வருத்திக் கொண்டிருப்பது வரவேற்கத் தக்கது (விஜய் வகையறாக்கள் கவனிக்க வேண்டியது).




ஐஸ்வர்யாராய் இன்னுமும் நீங்கள்தான் உலகாழகி, என்ன ஒரு அழகு...? ஒரு சீனில் புடவையில் வருவார்பாருங்க கோர்ஜியஸ். என்ன நடிப்பு, என்ன டான்சு கலக்கிட்டீங்க. எந்த உடையிலும் அழகாகத் தெரிகிறார்.



சங்கர் - ட்ரைன் சீனில் எச்சைத் துப்ப வருபவனை ரஜினி மிதித்து ஓடுவது, லஞ்சம் வாங்கும் ட்ராபிக் போலீசை கத்தியால் கீறுவது போன்ற தன்ஒழுக்க சிந்தனைகளை தூவியிருக்கிறார் (ஒரு சீனில் வந்தாலும் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிருபித்திருக்கிறார் கொச்சின் ஹனீபா, இவ்வளவு சீக்கிரம் நம்மையெல்லாம் விட்டு சென்றதில் தென்னக சினிமா உலகம் ஒரு தேர்ந்த நடிகனை இழந்து விட்டது). எண்ணற்ற ரஜினி, ஐஸ்வர்யா என்று பாடல்களிலும், காட்சிப் படுத்தலிலும் ரிச்னசை மிதக்க விடுகிறார். ரோபோ செய்யும் சேஷ்டைகளிலே நகைச்சுவையைத் தடவியிருக்கும்போது ஒரு உலகதர விஞ்ஞானியின் விளங்காத உதவியாளராக ரெண்டுபேரைப் போடவேன்டிய வியாபார நிர்பந்தத்தில் சிக்கியிருப்பது தமிழ்நாட்டின் விதி.

கிராபிக்ஸ் கலக்கல், ஆனால் மீண்டும் மீண்டும் பல வித உருமாற்றத்தில் வருவது சற்று அயர்ச்சியை தருகிறது. இருந்தாலும் ரசிக்க முடிகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு அற்புதம் கிராபிக்ஸ் எது நிஜம் எதுன்னு தெரியாமல் கதைக்கு தேவையான ரிச்னஸ் இருக்கிறது. கலை இயக்குனர் சாபு சிறில் உழைப்பு அருமை ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார்.

மொத்தத்தில் விசுவல் ட்ரீட் கண்டிப்பாக இந்திய சினிமா ஹிஸ்டரியில் ஒரு முக்கியப் படம். ;

3 comments:

ஆயில்யன் said...

//மூன்றுமுகம் ரஜினியைப் பார்த்ததுபோல் இருந்தது.///


எச்சாட்டிலி ஸேம் ஃபீலிங் :))

பித்தன் said...

நன்றி ஆயில்யன்

ஜெகதீஸ்வரன்.இரா said...

புறக்கணிப்போம் எந்திரனை

ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின்
சிந்தனைகளை முடக்கி
அரிதார அழகிகளின் அங்கங்களை காட்டி
அதில் தொழில் செய்து
தமிழை கொன்று
தமிழின வேதனைகளை
இருட்டடிப்பு செய்த
தொலைக்காட்சி சவப்பெட்டியின்
சங்கை நெறிக்க...!!
புறக்கணிப்போம் எந்திரனை

தமிழ் சமுதாயத்தின்
சாபக்கேடாகிப்போன
ஒரு தனிமனிதனிடமிருந்து..
திரயுலக்கத்தின்
மாய உலகில் மூழ்கிக்கிடக்கும்
தமிழ் இளைஞர்களை மீட்டுக்க
புறக்கணிப்போம் எந்திரனை

சொந்த (எந்திரன்) ஆதாயதிர்க்காக
IIFA வை புறக்கணித்து,
தமிழர்களின் உணர்வுகளை
புரிந்து கொண்டதாக தம்பட்டம் அடித்த
அரிதார அழகியின் கொட்டம் அடக்க..!!
புறக்கணிப்போம் எந்திரனை

 

Blogger