Pages

குப்ப மேட்டரு...

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஜகதீஷ் ஷர்மா ராஜஸ்தானில் ஒரு தற்காலிக பள்ளியில் கடைநிலை ஊழியராக இருக்கிறார். அவரது வேலை பள்ளியை சுத்தம் செய்வது, நேரம் தவறாமல் பள்ளிக் கூட மணி அடிப்பது. அவரது சம்பளம் கடந்த 23௦ வருடமாக ரூபாய் இருபது.

அட மூடர்களே.... இருபது ரூபாயில் ஒரு மனுஷன் என்னதான் பண்ணுவான்.....

அரசு இயந்திரம் பழுதடைந்து உள்ளதா இல்லை பயன் படாமலே உள்ளதா. ஷர்மாவும் பல பேர் காதிலே மணி அடித்தும், பல கதவுகளைத் தட்டியும் பயனில்லாமல் இப்பொழுது கோர்ட் படி ஏறியிருக்கிறார்.

அவருக்கு நீதி கிடைக்க எல்லாம் வல்லோனைப் பிரார்த்திப்போம்.

---X---X---X

நகைச்சுவை நடிகர் மயிசாமி மகன் அருமை நாயகம் நடிக்கும் முடிவிலிருக்கிறார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் ஒரு தமிழானை விட்டுடுமா..... வாழ்த்துவோம், வரவேற்போம்.

---X---X---X

ஒரு தமிழ் பத்திரிக்கைக்கு எதிராக நடிகர் சங்கம் நடத்திய கூட்டத்தில் சில முன்னணி நடிகர்கள் உளரியத்தில் சுனாமி அடிக்கிறது. பத்திரிக்கைகள் ஏக கடுப்பில் உள்ளன. இவர்கள் வளர பத்திரிக்கைகள் உதவ வேண்டும் ஆனால் இவர்களுக்கு ஒரு பிரச்சனையை என்றால் கண்ட மேனிக்கு பேசி வில்லங்கத்தை வேலைக்கு வாங்குவது வழ்க்கமாக உள்ளது.

பின் நானா அப்படி சொல்லவே இல்லையேன்னு பலத்தையே திருப்பி போடுறது வழைமையாக உள்ளது. இவர்கள் எல்லோரின் வண்ட வாளங்களை அறிந்த பத்திரிகை நண்பர்களுடன் சுமுகமாகவே இருப்பது நலம்.

இதுவும் இப்போ கோர்ட் படி ஏறியிருக்கு இருபது பேர் கொண்ட இந்த லிஸ்டில் தப்பாக பேசாதவங்களும் இருக்காங்களாம் காரணம் கேட்டால்..... அதில் பேசும்போது புரட்சி தமிழான் இங்கிருக்கும் எல்லார் மேலையும் கேஸ் போடுங்க உங்களால் என்ன புடுங்க முடியும்னு பார்க்கலாம்னு சொல்லியிருக்காரு. புரட்சின்னு பேர் வச்சுக்கிட்டு புரண்டா படுப்பாரு. ;

6 comments:

ISR Selvakumar said...

எல்லாமே குப்ப மேட்டர்தான், முதல் மேட்டரைத் தவிர.

பித்தன் said...

வருகைக்கு நன்றி selvaa

ஜெட்லி... said...

//புரட்சின்னு பேர் வச்சுக்கிட்டு புரண்டா படுப்பாரு. //


ஹீ ஹீ....

பித்தன் said...

வருகைக்கு நன்றி ஜெட்லி

பித்தனின் வாக்கு said...

// அவரது சம்பளம் கடந்த 23௦ வருடமாக ரூபாய் இருபது. //


இது - அவரு 23 வருடங்களாக இருபது ரூபாய்தான் சம்பளம் வாங்குறாராம் எனக் கூறினால் படிக்க சுவை இருக்கும். இது என் கருத்து நன்றி.

venkat said...

//அவருக்கு நீதி கிடைக்க எல்லாம் வல்லோனைப் பிரார்த்திப்போம்.\\

 

Blogger