Pages

உங்கள் நண்பன்

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நான் எப்போதுமே இரவுக் காச்சிக்குத்தான் போவேன் (இல்லை என்றால் நம் ரவுடியாக வளர்ந்த கதாநாயகனின் அடி தடியையும், தத்துபித்து பன்ச் டயலாக்கையும் கேட்டு நாள் முழுவதும் கெட்டுபோகும், அதுவே இரவெனில் அரங்கில் தூங்கியது போக மீதியை வீடு வந்து தொடரலாம்).

அன்றும் அவ்வாறே நான், என் தங்கை, தங்கையின் கணவர் மற்றும் என் மனைவி, என் பிள்ளைகள் எல்லோரும் இரவு காட்சிக்கு சென்றோம்.

பொதுவாகவே என் தங்கையும் அவள் கணவரும் அரங்கு சென்று படம் பார்ப்பது மிக அரிது! என் வற்புறுத்தலின் பேரில் சம்மதம் தெரிவித்தனர். படம் பார்த்துவிட்டு களைப்பில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம், நான், என் மனைவி மற்றும் என் இரண்டு பிள்ளைகள் ஒரு பைக்கிலும், என் தங்கையும்
அவள் கணவரும் ஒரு பைக்கிலும் வந்து கொண்டிருந்தோம்.....

எங்கள் வீட்டருகில் ஒரு 'போலீஸ் ஸ்டேஷன்' இருக்கிறது அங்கே ஒரு அதிகாரி என் மைத்துனரின் வண்டியை மரித்தார் (அவரின் கடமை உணர்ச்சிக்கு சாட்சி என் வண்டியை அவர் மடக்காததே!), நானும் உதவிக்கு என் வண்டியை நிறுத்தி, அருகில் சென்றேன்..,

அந்த அதிகாரி பார்க்க நல்ல மிடுக்காக இருந்தார், சிருடையில் இல்லை, வாயில் எதோ பாக்கு மென்று கொண்டிருந்தார்.., அவர் போசும்போதே ஒரு கெட்ட நாற்றம் அடித்தது, ஆம் அவர் குடித்திருந்தார்..!,

என் மைத்துனரை நோக்கி "ஏய்! எங்கேடா போயட்டுவரே என்றார் அடிக்கும் தொனியில்"

நான் "சார் என்ன சார் பிரச்சனை என்றேன்"

உடனே அவர் "நீ யார்ரா 'மயிறு' என்றார்"
நான் "சார் கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள் என்றேன்"

அதற்க்கு அவர் "தள்ளுடா" என்று சொல்லி என்னை தள்ளி என் மைத்துனரிடம் "டேய் போய் உன் பேர், முகவரியை அந்த ஆளிடம் கொடு" என்றார்
நான் "சார் எதுவாக இருந்தாலும் கொஞ்சம் மரியாதையாக எல்லோரையும் நடத்தினால் உங்களுக்கும் நல்லது" என்றேன் சற்று கோபமாக

உடனே அவர் "நீ என்னடா பெரிய 'இது'! ரொம்ப பேசினா உங்கள் இரண்டு போரையும் சந்தேக கேசில் உள்ளே போட்டுடுவேன்" என்றார்

எனக்கு ரொம்ப அசிங்கமாக போய்விட்டது,

அருகில் இருந்த ஒரு 'ஏட்டு' "சார் அவர் ரொம்ப கோபக்காரர் அவரிடம் ஏதும் வம்பு செய்யாதீர்கள் செய்தால் பிரச்சனையை" என்றார்

பிறகு நாங்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக, எங்கள் பேர், விலாசம் ஆகியவற்றை எழுதிவிட்டு அந்த இடத்தை காலி செய்தோம். அதுவரை, என் தங்கை, மனைவி மற்றும் பிள்ளைகள் நடு ரோட்டில் நள்ளிரவில் நின்று கொண்டிருந்தார்கள்! நெஞ்சில் பயத்துடன் என்ன விபரீதம் நடக்குமோ? என்று

"காவல் துறை, உங்கள் நண்பன்!" என்பதனால்தான், நமக்கு என்றுமே, என்றைக்குமே, அவர்களிடமிருந்து மரியாதை இம்மியளவும் கிடைப்பதில்லை.

உம்! அன்று நாங்கள் என்ன படம் பார்த்தோம் என்று சொல்லவில்லையே! "வேட்டையாடு! விளையாடு!" ;
 

Blogger