Pages

கோயிந்து புலம்பல்....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அல்லார்க்கும் வண்கம்,

ஒரு மாசத்துக்கு முந்தி ஒர்நா..... காத்தால அஞ்சு மணிக்கு ரிச்சால தூங்கினு இர்க்கசொல்லோ..... ஒரு பூமா வந்து கோபாலபுரம் வர்யான்னு கேட்டுச்சு? ஓகேமா ஏறி குந்துன்னு சொல்லி, கோபாலபுரம் போனேன்பா.... அங்கே ரொம்ப பெரிய க்யு இர்ந்துச்சி, பூமா என்ன வேயிடிங்க்ள போட்டுட்டு உள்ளார அவங்க ஹஸ்பண்ட பாக்கப் போச்சி.......

நானும் சரின்னு ஒரு பீடி வலிச்சிக்னே...., அங்கே இர்ந்த செகுர்டியாண்ட "என்னாபா அல்லாரும் இம்மா சீக்கிரமே இங்கன வந்துகீராங்கோன்னு?" கேட்டுகுனேபா.... செகுர்டி "அல்லாரும் அவங்கவங்க புள்ளைய உச்கூல்ள சேக்க வந்துர்காங்கோன்னாறு". "அப்டி இன்னாபா இந்த உச்கூல்ள கீதுன்னு?" கேக்கசொல்லோ "இந்த ஸ்கூல்தான் வருசா வருஷம் first வர்தாமிள்ளன்னு" சொன்னாரு.

அதுக்குள்ளே பூமா அது ஹஸ்பண்ட இட்டாந்து ரிச்சா பின்னாடி குந்த வச்சி சாயா, நாஸ்தா குட்தூது. பாய் சாப்டசொல்லோ அவராண்ட
"என்ன பாய் இது அவ்ளோ பெரிய உச்கூலா"
"ஆமாம்பா இதுதான் எல்லா வருசமும் first வருது, இங்க சேத்தா பிள்ளைங்க நல்லா படிக்கும்"
"இங்க நம்ம புள்ளைய சேக்க முடியுமா பாய்?"
"அதுக்கு வைப்ஃ இல்ல ஹஸ்பண்ட் படிச்சிருக்கணும், வருசத்துக்கு முப்பதாயிரம் செலவாகும்ன்னு" சொன்னாரு
"எதுக்குபா வைப்ஃ இல்ல ஹஸ்பண்ட் படிச்சிருக்கணும்?"
"அப்பத்தான் பசங்களுக்கு வீட்டிலும் சொல்லி கொடுக்க முடியும்"
"அப்போ இவங்க உச்கூல்ள என்ன சொல்லி குடுப்பாங்க?"
"அது ஸ்கூல் ரூல்"
"என்ன ரூலோ..... பூ.... நமக்கு அதெல்லாம் வேணாம்பா, எம்புள்ள வூட்டாண்ட கீற கவர்மெண்டு உச்கூல்லையே படிக்கட்டும்"
"என்ன ரிக்ஷாகார் இதுக்கே சலிச்சிக்கிட்டா எப்படி, இந்த 'Q' எதுக்குன்னு நெனச்சீங்க, இது வெறும் application வாங்க மட்டும்தான், இன்னும் interview, donation இருக்கு, அதுக்கப்புரமாதான் அட்மிச்சின், donation எப்படியும் ஐம்பதாயிரம் கேட்பார்கள், அப்புறமா ஒரு முக்கியமான விஷயம் இருக்கு, வீடு ஐந்து கிலோமீட்டர்க்குள் இருக்க வேண்டும்" ன்னு பூமா சொல்லுச்சி.

"இதுக்குத்தான் நான் நேத்து ராத்திரியே இங்கே வந்து கியுவில் நின்னேன்"

"அட உடு பாய் நமக்கு இது தோதுபடாது, என்னிக்கோ ஒரு ரா கண்ணு முழிச்சதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?.................யா..... அப்போ என்னப்போல அன்னாடங் காட்சிங்க புள்ளையே பெத்துக்காம...., கோட்டர் உட்டுட்டு குப்புறதான் படுக்கணும் போல!!!"

மறுக்கா இது நடந்து ஒரு வாரங் கழிச்சி அந்த பூமாவ மர்கேட்டுல பாத்தேன் "என்ன பூமா சீட்டு கேட்சிதான்னேன்?"

"இல்லப்பா கார் இல்லன்னு சீட் கெடைக்கல, இப்போ எம்பய்யன் இங்கே ஒரு ஸ்கூல்ல சேர்த்துட்டோம்"


"ஒகே பூமா வர்டா......."

மனசுகுல்லோ "அப்போ பாவோம் பாய்க்கு அன்னக்கி ரா தூக்கமும் வேஸ்டாப் பூடுச்சா.....?"

நாந் தெரியாமத்தான் கேக்குறேன்மா நம்ம டாக்டர் அப்துல் கலாம், இப்போ ராக்கெட் உட்ட டாக்டர் மயிசாமி அண்ணாதுரை, அல்லாம் இந்த உச்கூள்ளயா படிச்சாங்க?

அப்படியே மொத ரேங்க் எடுத்தாலும் அது ஏதோ ஒரு பொண்ணோ, ஆணோதானே...? அல்லருமா எடுப்பாங்க....?

என்ன---ஓப்பா..... ;

3 comments:

கலையரசன் said...

மச்சி சோக்கா எலுதுறியே நீ..
மயின்டுல வச்சிகிறேன்!

அப்பாலிகா கண்டுகறேன்..
இப்ப பாலோ பண்றேன்..

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முறை கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

பித்தன் said...

நன்றிகள் பல கலையரசன், நிச்சயம் கலையரசன் உங்கள் திருத்தலுக்கு நன்றி வேறு ஏதாவது என் பதிவுப்பட்டியில் மாற்றம் செய்ய முடியுமென்றால் என்ன வழி நடத்தவும்.

 

Blogger