Pages

ராஜாதி ராஜா – விமர்சனம்

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், காம்னா, மீனாக்சி, ஸ்னிக்தா, மும்தாஜ், போஸ் வெங்கட், கருணாஸ், மற்றும் பலர்.
இசை : கருணாஸ்
கதை+திரைக்கதை+இயக்கம் : ஷக்தி சிதம்பரம்

கதை :
லாரன்சின்தந்தை இறக்கும் தருவாயில், லாரன்சிடம் "உன் மூன்று அண்ணன்களையும்
முறையே, போலீஸ், வக்கீல் மற்றும் டாக்டர் ஆக்கவேண்டும்" என்று சத்யம் வாங்கி இறக்கிறார். (ஆமா அது ஏன் தம்பியிடம்?) லாரன்சும் தன் அண்ணன்களை படிக்க வைக்க, சினிமாவிலே மட்டும் சாத்தியமான கார் துடைப்பது, பொட்டலம் கட்டுவது, கை வண்டி இழுப்பது என்று மிக மிக கஷ்டப்பட்டு, எல்லோரையும் தன் சத்தியத்தின் படியே டாக்டர், வக்கீல், போலீஸ் என்று ஆக்குகிறார் (அதானே இல்லேன்னா....... அவன் என்ன ஹீரோ?). பின் அவர்கள் பாதை மாறுகிறார்கள் , அவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதே மீதிக்..... கதை.

மும்தாஜ் பேசும் டயலாக் எல்லாம் சொந்த வசனம்போல் உள்ளது, சும்மா…. கேரக்டர் உடன் ஒன்றிய நடிப்பு என்று சொல்ல வந்தேன். ஒரு பைட், ஒரு காமடி, ஒரு லவ் சீன என்று தெள்ளத் தெளிவான திரைக்கதை. பின்னணி இசையில் கருணாஸ் தெரிந்த அளவுக்கு நடிப்பிலோ..... பாடல்களிலோ..... தெரியவில்லை (முயற்சித்தால் இசையில் வாய்ப்பிருக்கிறது).

நான்கு ஹீரோயின்களும் கொடுத்த காசுக்குமேல் கூவி இருக்கிறார்கள்...............சாரி சாரி ரசிகர்களைக் கவர்ச்சி ஆட்டத்தில் திணறடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் காத்தலும்...... அழித்தலும்....... ஒருவனே என்கிறார் இந்த ராஜாதி ராஜா. ;

No comments:

 

Blogger